Skip to main content

Posts

Showing posts from April, 2025

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவராக ‘ரா’ முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனம்

புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபி) நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதன் புதிய தலைவராக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியத்தில், முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 3 பேர், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு பணியிலிருந்து (ஐஎப்எஸ்) ஓய்வு பெற்ற ஒருவர் என 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்: பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? 

புதுடெல்லி : பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான் மற்​றும் ராணுவம், கடற்​படை, விமானப்​படை தளப​தி​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் ஆகியோ​ருடன் பிரதமர் மோடி நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். எப்​போது, எங்​கு, எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம் என்​றும், முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம் என்​றும் இக்​கூட்​டத்​தில் பிரதமர் தெரி​வித்​தார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடியில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்’ - பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 29.04.2025 | சித்திரை 16 - விசுவாவசு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் ஆலோசனை: 40 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திடீர் வெளியூர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும். எடுத்த வேலை முடியவில்லையே என கோபப்படுவீர்கள். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன் யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகன பழுது நீங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு மிக கடுமையான தண்டனை: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உறுதி

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பிரதமர் மோடி இல்லையென்றால் வேறு யார்?” - இளையராஜா புகழாரம்!

புதுடெல்லி: “ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள்” என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு இளையராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களின் பெயர்களையும் எழுதுங்கள். மவுன்ட்பேட்டன் ஆட்சிகாலத்தில் இருந்து அவர்கள் அனைவரும் தங்களுடைய ஆட்சிகாலத்தில் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்று பாருங்கள். இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலையும் தயார் செய்யுங்கள். அப்போது வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 27.04.2025 | சித்திரை 14 - விசுவாவசு

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை) from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு!

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீட்டை பாது​காப்​புப் படை​யினர் வெடி​வைத்து தகர்த்​தனர். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 28 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்​தத் தாக்​குதலில் பாகிஸ்​தானின் லஷ்கர் பயங்கரவாத இயக்​கத்​தின் 4 தீவிர​வா​தி​கள் சம்​பந்​தப்​பட்​டிருப்​பது தெரிய வந்​துள்​ளது. இவர்களின் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அஸ்வினி முதல் ரேவதி வரை: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 27 நட்சத்திரங்களுக்கு எப்படி?

மேஷம்: அஸ்வினி: இந்த பெயர்ச்சியில் சிறுவிபத்துகள் ஏற்படக்கூடிய நிலை தென்படுவதால் பயணங்களின் போது மிகுந்த கவனமும் நிதானமும் தேவை. உணவு விஷயத்தில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதன் மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக்கூடும். பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும் விலகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும். பரணி: எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்கலாம். பணப்புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினை எதுவும் ...

ராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

ராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானியரை அடையாளம் கண்டு உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை: முதல்வர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

நாட்டில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காணவேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு என்பது முஸ்லிம் மத அமைப்பு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு - முழு விவரம்!

புதுடெல்லி: வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதி​ரான வழக்​கில் 1,332 பக்கங்கள் கொண்ட விரி​வான பதில் மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தாக்​கல் செய்துள்ளது. நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம், ஆம் ஆத்​மி உள்​ளிட்ட கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதிஅளித்தனர். தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி சொந்தங்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. ரிஷபம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு” - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு ராகுல் காந்தி உறுதி 

புதுடெல்லி: பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை (ஏப்.24) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, மாநிலங்களவை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணவரவு உண்டு. முன்கோபம் குறையும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் உங்கள் நிர்வாக திறமை வெளிப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிந்து நதிநீர் பங்கீடு நிறுத்தம் உள்ளிட்ட 5 முடிவுகள்: பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி!

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, La...

‘பாகிஸ்தானியர்கள் நீரின்றி மடிவார்கள்; இது 56 இன்ச் மார்பு’ - பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 1960-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை புதன்கிழமை அன்று ரத்து செய்துள்ளது இந்தியா. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டி உள்ளார். “நோபல் பரிசு பெறுவதற்காக 1960-ல் பாம்புக்கு நீர் கொடுத்தார் நேரு. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் ஹீரோ அவர். பல்வேறு ஆறுகளின் நீரை அவர் பாகிஸ்தானுக்கு வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Pahalgam Attack: ஒருபக்கம் காஷ்மீரில் ‘என்கவுன்ட்டர்’, மறுபக்கம் பிரதமர் மோடி இல்லத்தில் ஆலோசனை!

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கராவதிகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கி பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பிரதமர் மோடியின் இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மலைப் பகுதியில் ராணுவ சீருடையில் இருந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்ததன் தொடர்ச்சியாக, குல்காம் பகுதியில் புதன்கிழமை மாலை தொடங்கி தீவிரமான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலி - நடந்தது என்ன?

பஹல்காம்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இதனால் பஹல்காம் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. கால்நடையாக அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குலின் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சுற்றுலா தலமாக விளங்கும் பகல்காமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. “உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது குறித்து அரசு தரப்பில் உறுதி செய்யப்படும். அண்மைய ஆண்டுகளில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது” என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்மிக துணிச்சலின் கலங்கரை விளக்கமாக விளங்கிய போப்: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: இந்தியர்கள் மீது போப் பிரான்சிஸ் வைத்த பாசம் என்றென்றும் போற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: போப் பிரான்சிஸ் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான சூழலில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இரக்கம், பணிவு, ஆன்மிக துணிச்சல் ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கிய போப் பிரான்சிஸ், கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நினைவுகூரப்படுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர், வேற்றுமொழி பேசுபவர் உதவுவர். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வியாபாரம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினருக்கு விருந்தளித்த பிரதமர் மோடி!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் இந்தியா வந்துள்ளனர். விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் தங்கிய வான்ஸ் குடும்பத்தினர் திங்கள்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி கல்யாண் மார்க்கில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். அங்கு அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவா மாநிலத்தில் கோயில் தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கிய பக்தர்

பனாஜி: ஒரு தேங்காய் விலை ரூ.10 லட்சமா? ஆம். கோவா மாநில கோயில் தேங்காயைத்தான் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கி உள்ளார் ஒரு பக்தர். கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை வருடாந்திர திருவிழா நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்து குழுமத் தலைவர் நிர்மலா எழுதிய ‘தி தமில்ஸ்’ நூல் பற்றி கலந்துரையாடல்

புதுடெல்லி: ‘தி இந்து’ குழுமத் தலைவர் நிர்மலா லஷ்மண் எழுதிய, ‘தி தமில்ஸ்: எ போர்ட்ரெய்ட் ஆப் எ கம்யூனிட்டி’ (The Tamils: A portrait of a community) நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல அலேப் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்தது. டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் அரங்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘தி தமில்ஸ்: எ போர்ட்ரெய்ட் ஆப் எ கம்யூனிட்டி’ என்ற தலைப்பிலான ஆங்கில நூல் மற்றும் நூலாசிரியர் ‘தி இந்து’ குழுமத் தலைவர் நிர்மலா லஷ்மணை அலேப் நிறுவன பங்குதாரர் டேவிட் தாவேதார் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நூலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்து நிர்மலா உரையாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

26 சதவீத பரஸ்பர வரிவிதிப்புக்கு இடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இன்று இந்தியா வருகை

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அக்ஷர்தாம் சூரியநாராயணன் கோயில், தாஜ்மஹால், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இத்தாலியில் தனது 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இந்தியா வருகிறார். ஜே.டி.வான்ஸ் தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகளுடன் வருகிறார். அவர்களுடன் அமெரிக்க குழுவினரும் வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 20.04.2025 | சித்திரை 07 - விசுவாவசு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் நரேந்திர மோடி ஏப். 22-ல் சவுதி அரேபியா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அப்போது புதிய பொருளாதார வழித்தடம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து 3-வது முறையாக வரும் 22-ம் தேதி அவர் சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்: பாஜக எம்பி கண்டனம்

உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி மாநில அரசின் மசோதா குறித்து ஆளுநர் ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி 26 நாட்களில் ரூ.2.5 கோடி இழந்த துறவி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ளது ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம். இதன் செயலாளராக இருப்பவர் சுவாமி சுப்ரதீப்தானந்தா. இவருக்கு கடந்த மார்ச் 17-ம் தேதி ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த காவல் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அவர், தொழிலதிபர் நரேஷ் கோயல் தொடர்பான வழக்கில் சுவாமி சுப்ரதீப்தானந்தா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதைக் கேட்டு பயந்துபோன சுவாமியிடம், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் அல்லது கடும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அந்த காவல் துறை அதிகாரி சுவாமியை மிரட்டியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் முக்கிய பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தொலைபேசியில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவரின் மூத்த ஆலோசகராக தொழிலதிபர் எலான் மஸ்க் செயல்படுகிறார். ட்ரம்புக்கு பதிலாக எலான் மஸ்கே ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 19.04.2025 | சித்திரை 06 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 19.04.2025 விசுவாவசு 6 சித்திரை சனிக்கிழமை திதி: சஷ்டி மாலை 6.22 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: மூலம் காலை 10.21 வரை. பிறகு பூராடம். நாமயோகம்: சிவம் நள்ளிரவு 12.48 வரை. பிறகு சித்தம். நாமகரணம்: வணிசை மாலை 6.22 வரை. பிறகு விஷ்டி. நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54. அஸ்தமனம்: மாலை 6.22. ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 5, 9 சந்திராஷ்டமம் ரோகிணி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர். ரிஷபம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

14 ஆண்​டு​களுக்​குப் பிறகு அலி​கர் செல்​லும் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத்

அலி​கர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 14-ஆண்டுகளுக்குப் பிறகு அலிகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அலிகாருக்கு மேற்கொள்ளும் ஐந்து நாள் சுற்றுப் பயணம் நேற்று தொடங்கியது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று அவர் அந்த நகரத்தில் வந்திறங்கினார். பாகவத்தின் வருகையை அடுத்து அந்த நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஜெகதீப் தன்கர் கருத்து

குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் பார்த்துள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக இந்த தகவலை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களால் மதிக்கப்படும் நீதித் துறை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. ரிஷபம்: பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா லோக் ஆயுக்தா போலீஸில் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும். ரிஷபம்: பழைய பிரச்சினைகளை பற்றி எதுவும் பேச வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபடவும். அலுவலகத்தில் யாரையும் குறை கூட வேண்டாம். வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் குறித்து கவலைப்படாமல் முன்னேறுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 கேள்விகள்

புதுடெல்லி: வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம்கள் உறுப்பினராக அனுமதிப்பீர்களா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 1937ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட்(ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி, ஏஜெஎல் நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் இருந்தனர். அதனால் இந்த நிறுவனம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 16.04.2025 | சித்திரை 03 - விசுவாவசு

நல்லதே நடக்கும் 16.04.2025 விசுவாவசு 3 சித்திரை புதன்கிழமை திதி: திருதியை மதியம் 1.17 வரை, அதன் பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: அனுஷம் நாளை அதிகாலை 5.55 வரை, பிறகு கேட்டை. நாமயோகம்: வியாதீபாதம் இரவு 12.13 வரை, பிறகு வரீயான். நாமகரணம்: விஷ்டி மதியம் 1.18 வரை, அதன் பிறகு பவம். நல்ல நேரம் : காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் இன்று முழுவதும். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55. அஸ்தமனம்: மாலை 6.21. ராகு காலம் மதியம் 12.00-1.30 எமகண்டம் காலை 7.30-9.00 குளிகை காலை 10.30-12.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 4 சந்திராஷ்டமம் பரணி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பாராத செலவு, வெளியூர் பயணம், மன உளைச்சல் வந்து போகும். வேலையாட்களால் தொந்தரவு ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள். ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 2-ம் தேதி மக்களவையில் வக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரரீதியான பயணம் அலைச்சல் தரும். எதிலும் நிதானம் அவசியம். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நெடுநாட்களுக்கு பிறகு பால்ய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்