Skip to main content

Posts

Showing posts from April, 2021

பரமக்குடி அருகே மூதாட்டியை கொலை செய்து 18 பவுன் திருட்டு

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் தென்னந்தோப்பில் தனியாக இருந்த 92 வயது மூதாட் டியை கொலை செய்துவிட்டு, 18 பவுன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி காளிமுத்தம்மாள் (92). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந் தன் இறந்துவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் கருத்துக்கணிப்பை ஏற்க முடியாது: கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

இந்தியா போன்ற பல தரப்பு மக்கள் வாழக்கூடிய நாடுகளில் தேர்தல் கருத்துக்கணிப்பை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாணியம்பாடி அருகே சோகம் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவி யும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூர் பேட்டை செங்குந்தர் மண்டபத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(80). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி யம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு: சமூக வலைதளங்களில் வைரல்

திருப்பத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகள் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொலிக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி உள்ளது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தேவிகா(7), சிவானி(7) ஆகியோர் தமிழ் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை காணொலி காட்சியாக வெளியிட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்க தினமும் ஒரு கூடு வழங்கும் திட்டம்: இலவச சேவை அளிக்கும் ‘பறவைகள் தோழன்’

பறவைகளுக்கு தினமும் இரை,தண்ணீர் வழங்கி வரும் கடையநல்லூர் இளைஞர் சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்க தினமும்ஒரு கூடு செய்து வீடுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் காஜா மைதீன் (26). இவர் கடந்த 4 ஆண்டுகளாக கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார். ஊறுகாய் வியாபாரம் செய்து வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பறவைகளுக்காக செலவிடுகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது வீட்டின் முன் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து தினமும் இரை வழங்கி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெல்லை, குமரி மாவட்டங்களில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திட்டம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு நடத்தமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புவி தொழில் நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதிகளான வள்ளியூர், பணகுடி, பழவூர், செட்டிகுளம், கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், ராதாபுரம், இருக்கன்துறை, தெற்குகள்ளிகுளம், விஜயாபதி மற்றும் கடலோர கிராமங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.38 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து:  12 கரோனா நோயாளிகள் பலி

குஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 12 கரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையால் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3-வது கட்ட கோவிட் தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்: 2.5  கோடி பயனாளிகள் பதிவு

3-வது கட்ட தடுப்பூசித் திட்டத்துக்கு கோவின் இணையதளத்தில் நேற்று வரை 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிவு 2021 ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது. மே 1-ம் தேதி தொடங்கும் 3-வது கட்டத் தடுப்பூசி முகாமுக்கு தகுதியானவர்கள் 28ம் தேதி முதல் கோவின், ஆரோக்கிய சேது செயலிகளில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவி்த்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பரவலை கட்டுப்படுத்து குறித்து ஆலோசனை; தொகுதி மக்களுக்கு உதவுங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

‘‘கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும். அவரவர் தொகுதிகளில் உள்ளூர் அளவில் உள்ள பிரச்சினைகளை இனம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை மிக மோச மாக உள்ளது. கரோனாவால் தினமும் 3 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகளை விதித் துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

வேளாண் சட்டங்கள் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணும் வரை டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப் படுத்துவதை நிறுத்தக்கோரி பஞ் சாப் முதல்வர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி யின் எல்லைப் பகுதிகளில் விவ சாயிகள் கடந்த 5 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதனிடையே, டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் கத்ராவுக்கு பஞ்சாப் மாநிலம் வழியே செல்லும் வகையில் டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக பஞ்சாபில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்த சிறுவனை தாக்கி பணம் பறித்த காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த சிறுவனைத் தாக்கி, அவரிடமிருந்து பணத்தைப் பறித்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் முத்தூர் சாலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தையிடம் கோபித்துக் கொண்ட அச்சிறுவன், கடந்த புதன்கிழமை சென்னைக்கு வந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 4 பேர் கைது

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு எந்தவித தடையுமின்றி சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பு வைத்தல், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரித்தல், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை போதுமான அளவில் வழங்குதல் உட்பட பல்வேறு நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பரவல் காரணமாக முந்தைய மாத மின் கட்டணத்தையே மே, ஜூனில் வசூலிக்க வேண்டும்: மின் வாரிய தொழிற்சங்க குழு கோரிக்கை

கரோனா பரவல் காரணமாக வீடுகளுக்கு நேரில் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் உள்ளதால், முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது இதுதொடர்பாக மின்வாரிய தலைவருக்கு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியார் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை தள்ளிவைத்து 50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் 50 சதவீதப் படுக்கைகளை கரோனா சிகிச் சைக்கு ஒதுக்க வேண்டும் எனதமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மற்ற மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜனை குறைத்து கரோனா நோயாளிகளுக்கான தேவையை பூர்த்தி செய்வது எப்படி?- கோவை மயக்கவியல் நிபுணர் விளக்கம்

மற்ற மருத்துவத் தேவைகளுக்கான ஆக்சிஜனை குறைத்து, கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வது எப்படி என, மயக்கவியல் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் நுரையீரலுக்கு, காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து எடுக்கும்திறன் குறைகிறது. இந்நோயாளிகளுக்கு முதன்மையான தேவையாக ஆக்சிஜன் உள்ளது. அச்சமயத்தில்தான் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. தேவை அதிகரிப்புக்கு ஏற்ப ஆக்சிஜன் உற்பத்திஇல்லாததால்தான் தற்போது பலமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூன்று ஆண்டில் 2 பாடம் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே: உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே என உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் இளநிலை பட்டப்படிப்பில் 2 ஆண்டுகள் பி.எஸ்.சி. (கணிதம்) படித்தார். 3-வது ஆண்டில் பி.ஏ. (வரலாறு) படித்தார். இவருக்கு 1995-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (வரலாறு) பட்டம் வழங்கப் பட்டது. பின்னர் பாரதியார் பல்கலை.யில் பி.எட். முடித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி: ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அரசாணை

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல்காரணமாக, ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் மூலம் தினமும் 1,050 டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்கமுடியும் என்றும் அதற்கு அனுமதிகோரியும் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கடந்த 26-ம்தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து நடத்த அனுமதிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், ஆலையை கண்காணிக்க ஆட்சியர் தலை...

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி, திமுகமாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி யாருக்கு?- நாளை வாக்கு எண்ணிக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. கரோனா பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின்போது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதைத் தவிர 5 மாநில தேர்தல்களும் அமைதியாக நடந்து முடிந்தன. மின்னணு வாக்கு இயந்திரங்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுஉள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டாசு வெடிக்கவோ, ஊர்வலம் செல்லவோ கூடாது; வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிப்பு: தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ நீதிபதிகள் அறிவுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசியல் கட்சியினர் வெற் றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பட்டாசு வெடிக்கக் கூடாது, ஊர்வலம் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கரோனா 2-வது அலை தீவிர மாக பரவி வரும் சூழலில் ரெம் டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டருக்கு பற்றாக்குறை நிலவுவதாக ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல, கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரோனா விதி முறைகளுக்காக தேர்தல் ஆணை யம் குறித்து வழக்கு தொடர்ந் திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கவில்லை: போதிய அளவில் கையிருப்பு இல்லை என அறிவிப்பு

தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் திட்ட மிட்டபடி 18 வயதுக்கு மேற்பட் டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப் படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா 2-வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான இணையதள பதிவு கடந்த 28-ம் தேதி தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனித-விலங்கு மோதலை தடுக்கும் வகையில் யானைகள் நடமாட்டத்தை அறிய உதவும் தொழில்நுட்பம்: முதல் முறையாக கூடலூர் வனக் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலன்

கூடலூர் வனக்கோட்டத்தில் மனித - விலங்கு மோதலை தடுக்க புதிய முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகள்நடமாட்டத்தை கண்காணித்து மக்களுக்கு தெரிவிக்க முன்னெச்சரிக்கை கருவிகள், வாட்ஸ் அப் ஆகிய தொழில்நுட்பங்களை வனத்துறை பயன்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில், கடந்த 10ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்கி இறந்துள்ளனர். மேலும், விவசாயப் பயிர்களை நாசம் செய்வதோடு, குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வனத்துறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக மனித - விலங்குமோதல் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறுவதால், யானைகள் தாக்கி தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணவருடன் கருத்து வேறுபாடால் இரண்டு குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு சிகிச்சை

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இரண்டு குழந்தைகளை கொன்று, தாயார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபு (35).கூலித்தொழிலாளி. இவரது மனைவிதமிழ்ச்செல்வி (28). தம்பதிக்கு பிருந்தா (7), பிரசந்தா (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள். தம்பதி இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், தனியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 9 மாதங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் குப்புசாமிநாயுடுபுரத்தில் தனது அண்ணன் மற்றும் தாயாருடன் தமிழ்ச்செல்வி வசித்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கிய வீட்டு வசதி வாரியம்: 27 ஆண்டுகால வழக்குக்கு கோவை நீதிமன்றம் முற்றுப்புள்ளி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மூதாட்டியின் நிலத்துக்கு வீட்டு வசதி வாரியம் உரிய இழப்பீடு அளித்துள்ளது. இதனால் 27 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கை, கோவை சார்பு நீதிமன்றம் நேற்று முடித்து வைத்துள்ளது. கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள் (90).இவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1983-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. இந்த நிலத்துக்கு உரியஇழப்பீடு கிடைக்காததால், 1994-ம்ஆண்டு நீதிமன்றத்தில் சரஸ்வதியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக, நிலத்துக்கு இழப்பீடாகவட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.67.87 லட்சத்தை 2021, மார்ச் 31-ம்தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் 50 சதவீதம் வருவாய் இழப்பு

கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் 50 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. எனவே, கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூரம், பயண நேரத்தை கணக்கிட்டு தேவையான அளவு பேருந்துகளை அரசுப் போக்கு வரத்துக் கழகம் இயக்கிவருகிறது. இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கமட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பணியில் ஆர்எஸ்எஸ்: நாடு முழுவதிலும் 43 நகரங்களில் சேவை நிலையங்கள்: 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி

கரோனாவை தடுக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) இறங்கியுள்ளது. இதன் சார்பில் 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்கள் துவக்கப்பட்டு, 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி வருவதாக அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்துளார். இதுகுறித்து நேற்று செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் காணொளியில் பேசினார். அப்போது அவர், நாட்டின் பல பகுதிகளில் கரோனாவினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிகரிக்கும் கரோனா பரவல்; மாவட்டம் வாரியாக நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகமாக உள்ள 12 மாநிலங்களில் மாவட்டம் வாரியாக தேவையான கரோனா பரவல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொங்குமலை - நம்மியம்பட்டு இடையே தரமற்ற தார் சாலை: மலை கிராம மக்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் தொங்குமலை மலை கிராமத்தில் இருந்து தி.மலை மாவட்டம் நம்மியம்பட்டு இடையில் அமைக்கப்படும் தார்ச்சாலை கையில் பெயர்த்து எடுக்கும் நிலையில் மோசமாக இருப்பதாக மலை கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராம ஊராட்சிகளான பீஞ்சமந்தை, அல்லேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவர்கள், தொழில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வேலூர் மாவட்டத்தை நம்பியுள்ளனர். இந்தப் பகுதிக்கான அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அண்ணாமலையில் கோடை வறட்சி; தண்ணீரை தேடி படையெடுக்கும் வன விலங்குகள்: வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தி.மலையில் உள்ள அண்ணா மலையில் வாழும் வன விலங்குகள் தண்ணீரை தேடி சமதள பகுதிக்கு அதிகளவில் வருகின்றன. திருவண்ணாமலையில் அக்னி மலையாக உள்ளது மகா தீபம் ஏற்றப்படும் ‘அண்ணாமலை’. 2,668 அடி உயரமும், 10 கி.மீ., சுற்றளவும் கொண்டதாகும். ஆன்மிக பக்தர்களால் வணங்கப்படும், இந்த மலையில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வாழ்கின்றன. அவற்றில் புள்ளிமான், மயில், முயல், காட்டுபன்றிகள் மற்றும் குரங்குகள் அதிகம் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

16.16 கோடி  தடுப்பூசி டோஸ்கள்; மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகம்

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசிடமிருந்து 16.16 கோடி எண்ணிக்கையில் தடுப்பூசி டோஸ்களை இலவசமாகப் பெற்றுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஐந்து முனை உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை‌ ஆகியவற்றுடன் தடுப்பூசி, இந்திய அரசின் மிக முக்கிய தூணாக விளங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் பாட்டில் குடிநீர் விற்பனை கடும் சரிவு

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2, 5, 10 லிட்டர் பாட்டில் குடிநீர் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. கேன் தண்ணீர் விற்பனையும் பாதியாகக் குறைந்துவிட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்கப்பட்ட 5 லட்சம் கேன் குடிநீர், தற்போது 2 முதல் 2.5 லட்சமாகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், சென்னையில் சென்னை குடிநீர் வாரியமும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இருப்பினும், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் பாட்டில் குடிநீரும், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் வெவ்வேறு கொள்ளளவு கொண்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாட்டில் குடிநீரும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீரும் விற்பனையாவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளச்சேரி மேம்பாலப் பணி 4 மாதங்களில் நிறைவு பெறும்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல்

வேளச்சேரி மேம்பாலப் பணிகள் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று. இங்குள்ள பிரதான சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம், வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழி சாலைகளை இணைத்து மேம்பாலம் கட்டப்படும் என்றும், இந்த மேம்பாலத்துடன் வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2012-ம்ஆண்டு அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நில ஆக்கிரமிப்பு வழக்கில் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை?- செங்கல்பட்டு போலீஸ் எஸ்பி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

நில ஆக்கிரமிப்பு புகாரில் குற்றச்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் அவரை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நரசிம்மன், தமிழ்நாடு மருத்துவ சேவை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் காட்டாங்குளத்தூர் கோனாதி கிராமத்தில் வரதராஜுலு என்பவரிடம் இருந்து 25 சென்ட் நிலம் வாங்கி செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் 1964-ல் பதிவும் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கல்பட்டில் தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு அருகே திருமணியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார்600 கோடி முதலீட்டில் மத்தியஅரசு நிறுவனமான எச்.எல்.எல்பயோடெக், ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை நிறுவியுள்ளது. குழந்தைகளுக்கான முத்தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி, வெறிநாய் தடுப்பூசி, தட்டம்மை தடுப்பூசி போன்ற ஒன்பது வகையான தடுப்பூசிகளை 56 கோடியே 40 லட்சம் டோஸ் அளவுக்கு உற்பத்தி செய்யக்கூடிய உலகதரத்திலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உற்பத்தி தொடங்காத காரணத்தால் அதி நவீன இயந்திரங்களும் உபகரணங்களும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்ற நிலையில் போடப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் உற்பத்தி தொடங்குமேயானால் மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் 2-வது தவணை கோவாக்சின் கிடைக்காவிட்டால் ஆன்லைனில் தெரிவிக்கலாம்

சென்னையில் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காவிட்டால், ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4,500-ஐ கடந்துள்ளது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,295 ஆக உள்ளது. மாதிரிகள் சேகரிப்பு நாளொன்றுக்கு 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 2,500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை: சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தகவல்

சென்னையில் கூடுதலாக 2,500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். சென்னை சிஐடி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகளை சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயம்பேடு சந்தையில் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் பேரை பரிசோதித்ததில் 29 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று: காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கடந்த ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட 10,567 பரிசோதனைகளில் 29 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு முக்கியமான கரோனா பரவல் மையமாக கோயம்பேடு சந்தை இருந்தது. இதைத்தொடர்ந்து சுமார் 3 மாதங்களுக்கு சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக சந்தைகள் செயல்பட்டு வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெல்லை, குமரி மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் நில அதிர்வு: அதிர்ச்சியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று மாலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதிகளான வள்ளியூர், பணகுடி, பழவூர், செட்டிகுளம், கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், ராதாபுரம், தெற்கு கள்ளிகுளம், விஜயாபதி, கூட்டப்புளி, ஆவுடையாள்புரம், இருக்கன்துறை மற்றும் கடலோர கிராமங் களில் நேற்று பிற்பகல் 3.38 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. 3 விநாடிகளுக்கு நீடித்தஇந்த நில அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நகை கடைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க- கோவையில் தங்க காசு ஏடிஎம் தொடக்கம்

கோவை கிராஸ் கட் சாலையில் ‘கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்கக் காசு ஏடிஎம் மையம் நேற்று தொடங்கப்பட்டது. தங்கம் வாங்க நினைக்கும் பொதுமக்கள் தங்கக் காசு ஏடிஎம் மூலம் 2 நிமிடங்களில் பணமாக செலுத்தியோ, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தியோ தங்கக் காசுகளை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்கியுள்ள கோவை தனியார் தங்கக் காசுகள் உற்பத்தி நிறுவன பங்குதாரரும், இத்திட்டத்தின் நிறுவனருமான சீனிவாசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(44). இவரது தந்தை முத்துவீரப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, தனது தந்தைக்கு படத் திறப்பு விழா நடத்த திட்டமிட்டிருந்த ரவிச்சந்திரன், அதற்காக மேலமேட்டுப்பட்டி நெடுஞ்சாலையோரம் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை; ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற மருத்துவர் உட்பட 2 பேர் கைது: மேலும் பலர் சிக்குவார்கள் என போலீஸார் தகவல்

கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிவைத்து ரூ.20 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக மருத்துவர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து, கரோனாதடுப்பு மருந்துகள் ஆகியவற்றைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதற்காக காவல் துறையில் தனிப்படைஅமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி புகார்

ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் உத்தர பிரதேச முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்