Skip to main content

Posts

Showing posts from March, 2022

ஆவணப்படம், குறும்படம் தயாரிப்பு உட்பட நான்கு திரைப்பட அமைப்புகள் என்எப்டிசி உடன் இணைப்பு

புதுடெல்லி: நான்கு திரைப்பட அமைப்புகள் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் (என்எப்டிசி) இணைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களைத் தயாரிப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது,படங்களைப் பாதுகாப்பது போன்றவற்றை தனித்தனி அமைப்புகள் செயல்படுத்துகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் ரத்து | ‘முகக்கவசம் கட்டாயமல்ல’ - மகாராஷ்டிர அரசு அறிவிப்பு; டெல்லியில் இனி அபராதம் இல்லை

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2020தொடக்கத்தில் கரோனா வைரஸ்பரவத் தொடங்கியது. இதையடுத்து, முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அந்த ஆண்டின் இறுதியில், தொற்று பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதே நேரத்தில் கரோனா 2-வது மற்றும் 3-வது அலையால் பாதிப்பு அதிகரித்தது. அதனால், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தின. பின்னர், அந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மார்ச் 31-ம் தேதியுடன் கெடு முடிந்தது; ஆதார்-பான் இணைக்காதவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு

புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி ஆகும். இவ்விதம் இணைக்காதவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இவ்விதம் இணைக்காத நிரந்தர கணக்கு எண் (பான்) ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் மார்ச் 2023 வரை வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடும் எதிர்ப்பையும் மீறி சார்டர்ட் அக்கவுன்டன்ட் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: கடும் எதிர்ப்பையும் மீறி சார்டர்ட் அக்கவுன்டன்ட் மசோதா மக்களவையில் நிறைவேறியது. சார்டர்ட் அக்கவுன்டன்ட் சட்டம் 1949, காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட் சட்டம் 1959 மற்றும் நிறுவன செயலர் சட்டம் 1980 ஆகிய மூன்றிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாவை நிறுவன விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஐசிஏஐ அமைப்பின் ஒழுங்குமுறை கமிட்டியில் ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்றும் அவர்களில் மூன்று பேர் பட்டய தணிக்கையாளர் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெறுவர் என திருத்தம் செய்யப்பட்டதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு இதை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என வலியுறுத்தினர். ஒழுங்குமுறை குழுவின் தலைவராக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலர் தலைவராக இருப்பார் என்ற விதி மாற்றத்துக்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,545 கோடி கூடுதல் செலவு; மத்திய அரசு ஊழியருக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு, கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங் கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது தங்கள் அடிப்படை ஊதியத்தில் 31 சதவீத தொகையை அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர். இதுபோல், ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 31 சதவீத தொகையை அக விலைப்படியாக பெற்று வரு கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதச்சார்பின்மை பற்றி பேசும் இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் வேற்று மதத்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்ட பரதநாட்டிய கலைஞர்

திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களில் முக்கியமானவர் மன்சியா (27). இஸ்லாமியரான இவருக்கு பரதநாட்டியத்தின் மீது சிறுவயதில் இருந்தேஈர்ப்பு அதிகம். பரதத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றஇவர், இப்போது மலையாள தொன்மக் கலைகளை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்ட கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மன்சியா பரதநாட்டியம் கற்றுக்கொண்டதும், ஆலயங்களில் பரத நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதும் இஸ்லாமிய மத கட்டமைப்புக்கு எதிரானது என அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், மன்சியா, தொடர்ந்து தனது பரதத்தை அரங்கேற்றி வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வீடு மீது தாக்குதல்: பாஜக இளைஞர் அணியினர் 70 பேர் கைது

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டு முன்பு பாஜக இளைஞர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கேஜ்ரிவால் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 70 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 1990-களில் காஷ்மீரை விட்டு இந்துக்களான பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என அந்த மாநில சட்டப்பேரவையில் கடந்த வாரம் பாஜக உறுப்பினர் ஒருவர் கோரினார். முதல்வர் கேஜ்ரிவால் பதில் அளிக்கும்போது, பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த உயர்வு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாதுகாப்பு பெட்டக அறையில் 84 வயது முதியவரை வைத்து பூட்டிய வங்கி ஊழியர்: 18 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஒரு வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டக அறையில் 84 வயது முதியவரை வைத்து வங்கி ஊழியர் பூட்டிவிட்டார். அவர் 18 மணி நேரம் வரைபெட்டக அறையிலேயே காற்று கூட இல்லாமல் தவித்து விட்டார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் சாலை எண் 67-ல் யூனியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று முன் தினம் மாலை சரியாக 4.20 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த வியாபாரியான கிருஷ்ணா ரெட்டி (84) என்பவர் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் ம.பி.யில் கட்டப்பட்ட 5.21 லட்சம் வீடுகளை திறந்து வைத்தார் மோடி

போபால்: பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்தியபிரதேசத்தில் கட்டப்பட்ட 5.21 லட்சம் வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கை எட்ட பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் (பிஎம்ஏஒய்) நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டி முடிக்கப்பட்ட 5.21 லட்சம் வீடுகள் நேற்று பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய நிலையில் இந்து மதத்தை அவமதிப்போரின் கணக்கை முடக்காதது ஏன்? - ட்விட்டருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘ஏத்திஸ்ட்ரிபப்ளிக்’ என்ற ட்விட்டர் கணக்கில் இந்து மதக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பதிவுகள் போடப்பட்டுவந் துள்ளது. அந்தப் பதிவுகளை நீக்கவேண்டும் என்றும், அந்த ட்விட்டர்கணக்கை முடக்க வேண்டும் என்றும் ஆதித்யா சிங் தேஷ்வால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் நவின் சாவ்லா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை அன்று இம்மனுவை விசாரித்தது. அப்போது, பிற மத மக்களின் உணர்வைப் புண்படுத்தும் கணக்குகளை நீக்குவதில் ட்விட்டர் அலட்சியம் காட்டுவதாக நீதிபதிகள் ட்விட்டர் நிறுவனத்தை விமர்சித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹிஜாப் விவகாரம் | கர்நாடகாவில் 21,000 மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வை புறக்கணித்தனர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடக அரசு தடை விதித்தது. இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். ஹிஜாப்பை கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் அதிருப்தி அடைந்த முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீடுகளுக்கு திரும்பினர். கர்நாடகா முழுவதும் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் மட்டுமே முதல் நாள் தேர்வு எழுதினர். 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது. இதில் முஸ்லிம் மாணவிகள் எத்தனை பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily N...

அமெரிக்காவின் பெடெக்ஸ் சிஇஓ-வாக இந்தியர் நியமனம்

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசஅளவில் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராஜ்சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள் ளார். இதுவரை இப்பதவியில் இருந்த நிறுவனர் பிரெட் ஸ்மித், பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் உயர் பதவியில் நியமிக்கப்படுவது தொடர்கிறது. அந்த வரிசையில் தற்போது ராஜ் சுப்ரமணியமும் இடம்பெற்றுள் ளார். திருவனந்தபுரத்தில் பிறந்து ஐஐடி மும்பையில் பயின்றவர் ராஜ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடுகளுடன் மருத்துவ சுற்றுலா ஒப்பந்தம் செய்ய தயார்: வங்கதேச சுதந்திர தின விழாவில் தமிழக அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

சென்னை: வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் மருத்துவச் சுற்றுலா ஒப்பந்தங்கள் செய்துகொள்ள தமிழகம் தயாராக உள்ளது என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார். இந்தியா - வங்கதேசம் இடையே மொழி, கலாச்சாரம் என பல வகையிலும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. வங்கதேசத்தின் துணைத் தூதரகம் தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கப்பட்டது. இதன் சார்பில் அந்நாட்டின் 51-வது சுதந்திர தின விழா முதன்முறையாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள கோயிலில் உகாதி பண்டிகையன்று ஏழுமலையானை வழிபடும் முஸ்லிம்கள்

கடப்பா: இரண்டாம் நூற்றாண்டில் ரோமானிய பயணி டாலமி என்பவர் திருப்பதியை அடுத்துள்ள ஊருக்குவந்தார். அவர் இந்த ஊருக்கு ‘கரிபே-கரிகே’ என பெயர் சூட்டினார். இதுவே மருவி ‘கடப்பா’ வாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த ஊரில் இருக்கும் லட்சுமி பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ‘தேவுண்ணி கடப்பா’ என்றபகுதியில் கோயில் அமைந்துள்ளது. தேவுண்ணி கடப்பா என்றால் கடவுளின் வாசற்படி என்று பொருளாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகா | ஹிஜாப் அணிந்த தேர்வு பார்வையாளர் சஸ்பெண்ட்: 100+ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு புறக்கணிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணியின் போது ஹிஜாப் அணிந்திருந்ததாக பார் வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு பிறகு, நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நேற்று ஷிமோகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுந்த வந்த முஸ்லிம் மாணவிகளை, ஹிஜாபை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் வலியு றுத்தியது. இதனை ஏற்று பெரும் பாலான மாணவிகள் ஹிஜாபை அகற்றிய நிலையில் 8 மாணவிகள் தேர்வை புறக்கணித்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதே போல பாகல்கோட்டை, பீஜாப்பூர், சிக்கமகளூரு, கோலார், உடுப்பிஉள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப்அணிய அனுமதி மறுத்ததால் எஸ்எஸ்எல்சி தேர்வை புறக்கணித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வு குறித்துவிவாதிக்க அனுமதி மறுத்ததால்எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் மாநிலங் களவை ஒத்திவைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், நேற்றுகாலை 6 மணி முதல் மார்ச் 30-ம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் பொதுத்தேர்வு எழுதினர்: கர்நாடக கல்வி அமைச்சர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதினர் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. ஹிஜாப் தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாநிலத்தில் பொதுத்தேர்வு நெருங்குவதால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து "தேர்வுக்கும் ஹிஜாப் அணிவதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இந்த விவகாரத்தை பரபரப்பாக்காதீர்கள்" என தெரிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

புதுடெல்லி: தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை ஒடிசா மாநிலம் பலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து காலை 10.30 மணி அளவில்சோதனை முறையில் ஏவப்பட்டது. இது திட்டமிட்டபடி வான் பகுதியில் தொலைதூரத்தில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கி அழித்தது” என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவ்வப்போது, சோதித்துப் பார்ப்பது வழக்கமான செயல்தான் என்றும் டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். - பிடிஐ from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக தொண்டர்களை தாக்கி வழக்கு: திக்விஜய் சிங் உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

இந்தூர்: பாஜக தொண்டர்களை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஜூலை 17-ம் தேதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்கு திக்விஜய் சிங் சென்றார். அவருக்கு எதிராக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினர். அப்போது பாஜக தொண்டர்களுக்கும் காங் கிரஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதி முகேஷ் நாத் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பின்னர் குற்றவாளிகள் 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திக்விஜய் சிங் கூறும்போது, "முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் கிடையாது. அரசியல் அழுத்தம் காரணமாக எனது பெயர் சேர்க் கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்...

எஸ்எஸ்எல்சி தேர்வு தொடக்கம் - ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை: கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர மாநில அரசு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் உறுதி அவர் மேலும் கூறியதாவது: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் நாளை (இன்று) தொடங்கவுள்ளன. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுத வருபவர் களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்து கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவா முதல்வராக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்பு

பனாஜி: கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப் பட்டது. இந்த சூழலில் 3 சுயேச் சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற் போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் 25 எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தார். இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உ...

திருப்பதி அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

அனந்தபூர்: திருப்பதி அருகே நிச்சயதார்த்தத்துக்கு சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தைச் சேர்ந்தவர்கள், திருச்சானூரில் நடக்கவிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். மணமகனின் தந்தை, உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்தனர். இரவு 11 மணி அளவில் திருப்பதி - பீலேர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பாகராபேட்டை மலைப்பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசை கண்டித்து இன்று முதல் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும்

சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். வார இறுதியில் 2 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக மாநில பள்ளிகளில் சரஸ்வதி சிலைகள் உடைப்பு: போலீஸார் தீவிர விசாரணை

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள ஹரோ ஹள்ளி அரசு ஆரம்ப பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி, விவேகானந்தர் மற்றும் காந்தியின் சிலை கடந்த வாரத்தில் சேதப்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, போலீ ஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்