Skip to main content

Posts

Showing posts from April, 2023

100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட அரசியல் வழிகாட்டி யார்?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசும்போது தனது அரசியல் வழிகாட்டி லஷ்மண் ராவ் இனாம்தார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பிரதமர் குறிப்பிட்ட லஷ்மண் ராவ் இனாம்தார் யார் என்பது குறித்து இணையதளத்தில் பலரும் தேட தொடங்கி உள்ளனர். கடந்த 1917-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புணே அருகேயுள்ள காவ்தவ் கிராமத்தில் லஷ்மண் ராவ் இனாம்தார் பிறந்தார். பூர்ணா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் கடந்த 1943-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். ஹைதராபாத் நிஜாம் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொழிலாளர்களின் குரலுக்கு புத்துயிர் தாருங்கள்!

இன்றைய உலகைக் கட்டியெழுப்புவதில் தொழிலாளர்களின் பங்களிப்பு மற்றும் தியாகத்தை சர்வதேச தொழிலாளர் தினம் குறிக்கிறது. நியாயமான மற்றும் சமமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், பணியிடம், நீீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தில் அவர்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை ஆகியவற்றுக்காக தொழிலாளர்கள் நடத்திய நீண்ட போராட்டத்தை இன்று நாம் நினைவில் கொள்கிறோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு பயிற்சி பெறமுடியாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு உள்ளுறைப் பயிற்சி பெற முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, மருத்துவம் படிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி லட்சக்கணக்கானோரின் மனதின் குரலாக உள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி லட்சக்கணக்கானோரின் மனதின் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார் கடந்த 2014ம் ஆண்டு அக்டோலர் 3ம் தேதி தொடங்கிய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி தொடர்ந்து மாதம்தோறும் ஒலிபரப்பாகி வருகிறது. அதன் 100வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தகவல்

பாட்னா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைவர்கள் பலர் ஈடுபட்டுள்ளதால், இந்த தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெறலாம் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணைa

புதுடெல்லி: கடந்த 2019 ஆகஸ்ட் 23 முதல் அதே ஆண்டு அக்டோபர் 30 வரை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார். அப்போது, ஊழியர்கள் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெறவும் கிரு நீர் மின்சக்தி திட்டத்துக்கான கட்டுமான பணி ஒப்பந்தத்தைப் பெறவும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்து சத்யபால் மாலிக்கிடம் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி விசாரணை நடத்தியது. இந்நிலையில், டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள சத்யபால் மாலிக் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

பெங்களூரு: பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வழியாக கல்வி வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் பைஜூஸ். இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாக பைஜூஸ் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு சில லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

30-04-2023 சோபகிருது 17 சித்திரை ஞாயிற்றுக்கிழமை திதி: தசமி இரவு 8.29 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: மகம் பிற்பகல் 3.30 வரை. பிறகு பூரம். நாமயோகம்: விருத்தி காலை 11.23 வரை. பிறகு துருவம். நாமகரணம்: தைதுலம் காலை 7.36வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11. யோகம்: மந்தயோகம் பிற்பகல் 3.30 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50. அஸ்தமனம்: மாலை 6.23 from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: ஐ.நா. சபையில் நேரடி ஒலிபரப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை வானொலியில் ஒலிபரப்பாகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய பாஜக ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம்நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்றார். அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்தியவானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் முதல் முறையாக உரையாற்றினார். அப்போதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முடங்கிய நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம்!

சென்னை: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடங்கிய நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தின் சார்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பிரதான ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ-யின் ட்விட்டர் பக்கத்தை, ட்விட்டர் நிர்வாகம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முடக்கியது. இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு, ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், "ட்விட்டர் கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும். இதில் ட்விட்டர் நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த விதியை மீறும் வகையில் உங்கள் கணக்கு இருப்பதால், அது முடக்கப்படுகிறது. பின்னர் உங்கள் கணக்கு டெலிட் செய்யப்படும்" என தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய 6 பேர் கைது

ரஜவுரி: காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கடந்த 20-ம் தேதி நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் தீவிரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டிஜிபி தில்பக் நேற்று கூறியதாவது: ராணுவ வாகனத்தின் மீது 3 முதல் 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் தீவிரவாதிகளுக்கு 3 மாதங்களாக உணவு, தங்குமிடம் கொடுத்து வழிகாட்டியுள்ளனர். ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் வந்துள்ளன. அதை உள்ளூர் நபர்கள் எடுத்து, தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளனர். காடுகளுக்கு அருகில் உள்ள இடங்களை, தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் தேர்வு செய்கின்றனர். அங்கு அவர்களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு கிடைக்கிறது, தப்பிச் செல்ல வழி இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தம...

மதுராவில் மது, இறைச்சிக்கு தடை விதித்தது ஏன்? - உ.பி. முதல்வர் ஆதித்யநாத் விளக்கம்

முசாபர் நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் மே 4 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மதுரா, பிரோசாபாத், ஆக்ரா ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற ஆதித்யநாத் பேசியதாவது. மதுரா நகரம் மிகவும் புனிதமானது. முன்பு இந்த நகரம் பால் ஆறுகள் என்று பிரபலமாக அறியப்பட்டது. அதனால் மதுரா நகரில் இனிமேல் இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வரை இந்த நகரில் இறைச்சி, மது விற்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை விற்க தடை கொண்டு வரப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக சிலர் அவற்றை விற்கின்றனர். அவர்கள் மில்க் ஷேக், காய்கறி விற்க வேண்டும். இந்த நகரத்தின் புனிதத்தை காக்க வேண்டும். இந்த அரசு யாருக்கும் பாரபட்சம் பார்க்காது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பைக்கில் 3 பேர் பயணிக்கும் வகையில் குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு அனுமதி: மத்திய அரசை அணுக கேரளா திட்டம்

கேரளாவின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் செயற்கை நுண் ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக் கூடும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கலைப்பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு: குடியரசுத் தலைவர் ஜூன் 5-ல் சென்னை வருகை

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, வரும் ஜூன் 5-ம் தேதி சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் பங்கேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் - ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்பேது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,852 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது வழக்கு

அகமதாபாத்: குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி' சமூகத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து பிஹார் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீது குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைவாக நிறைவடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: முக்கியமான முடிவு என பிரதமர் பதிவு

புதுடெல்லி : தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் சுகாதார துறை ஊக்கம் பெறும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கடந்த 2014 முதல் நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 84 மாவட்டங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை இன்று தொடங்குகிறார் பிரதமர்

புதுடெல்லி : நாடு முழுவதும் பண்பலை வானொலி (எஃப்.எம். ரேடியோ) இணைப்பை மேம்படுத்தும் வகையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளரும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளில் ரேடியோ ஒலிபரப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே நல்லுறவு” - சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

டெல்லி : ஷாங்காய் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ புதுதில்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா - சீன எல்லை விவகாரம் குறித்தும் இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர். இந்த சந்திப்பின் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்திற்கு வித்திடுவதன் மூலமே இந்தியா - சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த முடியும். எல்லை கட்டுப்பாட்டுக் கோடு சார்ந்த அனைத்து விவகாரங்களுக்கும், தற்போது அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் தீர்வு காண்பது அவசியம் . அமலில் உள்ள ஒப்பந்தத்தை மீறுவது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்துவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, H...

'ஆபரேஷன் காவேரி' | சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் புதுடெல்லி வந்தடைந்தனர். சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மன் கி பாத் 100-வது நிகழ்ச்சியையொட்டி மாநாடு: பிரதமர் மோடிக்கு நடிகர் ஆமிர் கான் பாராட்டு

புதுடெல்லி: வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில், ‘மன் கி பாத்-100' என்ற மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ரவீணா டாண்டன், விளையாட்டு வீராங்கனைகள் தீபா மாலிக், நிகத் ஜரீன், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாக். மீது அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு: கோவாவில் பிலாவல் புட்டோவுடன் இருதரப்பு பேச்சுக்கு வாய்ப்பில்லை

புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் சிக்கலானது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதால், கோவாவில் அடுத்தவாரம் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் கோவாவில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளதால், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்திருந்தார். இதை ஏற்று பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவினர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய் வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங் களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடன்களை ஒவ்வொன்றாக பைசல் செய்வீர் கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் - சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழப்பு

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஐஇடி வகை கண்ணிவெடியை சாலையில் புதைத்து, போலீஸாரின் வாகனம் சாலையைக் கடக்கும்போது வெடிக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாவட்ட ஆயுத போலீஸ் படை (டிஆர்ஜி) போலீஸார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அரண்பூர் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த ஐஇடி வகை கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், 10 போலீஸார், வாடகை வேனின் ஓட்டுநர் உயிரிழந்தனர். இந்த கண்ணிவெடி தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் 11 உள்பட நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி : நாடு முழுவதும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

”கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் மிகும், கலவரம் நடக்கும்” - அமித் ஷா

பெங்களூரு: "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அங்கு ஊழலும், வாரிசு அரசியலும், வன்முறைகளும் முன் எப்போதும் இலலாத அளவுக்கு அதிகரிக்கும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2024 மக்களவை தேர்தல் தாக்கம் | உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2024 இன் மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். உ.பி.,யில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நிலவுகிறது. இங்கு இதர மாநிலங்களை விட அதிகமாக முஸ்லிம்கள் எண்ணிக்கை சுமார் 24 சதவிகிதம் உள்ளனர். இவர்களது வாக்குகளால் உ.பி.,யின் பல சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு தேர்தலிலும் பிளவுபடும் முஸ்லிம் வாக்குகளால் பாஜகவின் வெற்றி சாதகமாகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூடங்குளம் அணுமின் நிலையம்: 5-வது அணு உலைக்கான பாகங்களை அனுப்பியது ரஷ்யா

புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்டு வரும் 5-வது அலகுக்கு தேவைப்படும் நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்களை ரஷ்யாவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அனுப்பியுள்ளது. கூடங்குளம் அணு உலை நிர்வாகம், கட்டுமானத்தில் இந்த நிறுவனம்தான் முக்கிய பங்காற்றி வருகிறது. நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வளர்த்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். ரிஷபம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வாகனச் செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். கலை பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வந்தே பாரத், நீர்வழி மெட்ரோ சேவை கேரளாவில் பிரதமர் தொடங்கி வைத்தார்: பயணிகள், மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகம்

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலில் பயணிகள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக சென்ற அவருக்கு பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு

சண்டிகர் : உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

25-04-2023 சோபகிருது 12 சித்திரை செவ்வாய்க்கிழமை திதி: பஞ்சமி காலை 9.46வரை. பிறகு சஷ்டி. நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 4.26 வரை. பிறகு புனர்பூசம். நாமயோகம்: அதிகண்டம் காலை 7.49 வரை. பிறகு சுகர்மம். நாமகரணம்: பாலவம் காலை 9.46 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: மந்தயோகம் பின்னிரவு 4.26 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51. அஸ்தமனம்: மாலை 6.22 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,7,9 சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தன்பாலின திருமணத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது: பார் கவுன்சில் ஆப் இந்தியா தீர்மானம்

புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் பார் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பல்வேறு மாநிலங்களின் பார் கவுன்சில் நிர்வாகிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ் வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையுண்டு. கலை பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி அலை கர்நாடக தேர்தலிலும் தொடரும்: மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா நம்பிக்கை

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2 தொகுதிகளில் போட்டியிடும் கர்நாடக வருவாய்துறை அமைச்சர் ஆர்.அசோகா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியதாவது... மூத்த தலைவர்களுக்கே தொகுதிகள் கிடைக்கவில்லை. உங்களுக்கும் சோமண்ணாவுக்கும் மட்டும் 2 தொகுதிகள் எப்படி கிடைத்தது? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் வாபஸ்

சென்னை : கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் பாஜக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை பழனிசாமி சார்பில் தம்பிதுரை எம்.பி. சந்தித்து, கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பழனிசாமியின் விருப்பத்தை தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா | போலீஸாரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் சிறை

ஹைதராபாத் : போலீஸாரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் காவல் அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TSPSC தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் அம்மாநிலத்தில் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, இதே விவகாரத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த மாதம், ஹைதராபாத்தில் இந்த பிரச்சனைக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை: பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நாளை தொடங்கி வைக்கிறார்

கொச்சி: நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி கேரளாவின் கொச்சி நகரில் நாளை தொடங்கி வைக்கிறார். கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது. கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் 76 கி.மீ. தொலைவுக்கு 15 நீர் வழித் தடங்களில் மெட்ரோ சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பத்து தீவுகளில் 38 நீர்வழி மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மழையில் நனைந்த பிரதமர் மோடியின் ‘கட் அவுட்’டை துடைத்த முதியவர் - அமித் ஷா வீடியோவை பகிர்ந்து நெகிழ்ச்சி

பெங்களூரு : பெங்களூரு அருகே மழையில் நனைந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட்டை முதியவர் ஒருவர் தனது துண்டால் மழை நீரை துடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் நடைபெற இருந்தது. திடீர் மழை காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், அங்கு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட் மழையில் நனைந்து கிடந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்கள் இயல்பான, இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். பயணங்கள் சிறப்பாக அமையும். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பிற்பகல் முதல் தடைகள் உடைபடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு : கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி (63) கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

37 நாட்கள் தலைமறைவாக இருந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது

சண்டிகர் : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 37 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், குருத்வாராவுக்கு உரையாற்ற வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கினார். அசாமின் திப்ருகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பஞ்சாபின் அமிர்தசரஸ் அடுத்த ஜல்லபூர் கெரா கிராமத்தை சேர்ந்தவர் அம்ரித்பால் சிங் (30). பள்ளிப் படிப்பை முடித்த அவர், துபாயில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டில் பஞ்சாப் திரும்பிய அவர், ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவராக பதவியேற்றார். காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் மதரீதியாக பிரச்சாரம் செய்து வந்தார். அதோடு ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்' என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி. என்கவுன்ட்டரில் பெண் மாவோயிஸ்ட்கள் 2 பேர் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டம் கட்லா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர். நேற்று அதிகாலை, கட்லா வனப்பகுதியில் மத்தியபிரதேச மாநில சிறப்பு போலீஸ் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுன்ட்டரில் 2 பெண் மாவோயிஸ்ட்கள் உயிரிழந் தனர். ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீஸார் அறிவித்துள்ளனர். அவர்கள் சுனிதா, சரிதா காதியா மோச்சா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை: அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏவுதல் திட்டம் வெற்றியடைந்த பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி!

சென்னை: பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டெலியோஸ்-2’ உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர, வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கரோனா பாதிப்பு: வழக்கு தேங்குவதை தடுக்க அமர்வுகள் மாற்றம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் குணமடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்