Skip to main content

Posts

Showing posts from September, 2023

கவனத்தை திசைதிருப்பும் ஆயுதமானது சமூக ஊடகம்: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

கோவா: கோவா மாநிலத்தின் மர்மகோவா பகுதியில் உள்ள ஜி.ஆர்.காரே சட்டக் கல்லூரியில் ‘ஜிஆர்கே - சட்ட பேச்சுகள்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை நீதிபதி மகேஷ் சோனக் பேசியதாவது: நாம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களை போற்றும் யுகத்தில் வாழ்கிறோம். ஆனால், சிந்திக்க முயற்சிக்கும் மனிதர்களை பற்றி சந்தேகப்படுகிறோம் அல்லது எச்சரிக்கையாக இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கு சில சிறப்புகள் உள்ளன. இயந்திரங்களும், கணிப்பு நெறிமுறைகளும் எவ்வளவு புத்திசாலித்தன மாகவும் இருக்கட்டும். ஆனால், நாம் நமது சிந்திக்கும் திறனையும், விவேகமாக செயல்படும் திறனை யும் அவற்றுக்கு அடமானம் வைத்தால், அது சோகமான நாளாகவும், சோகமான உலகமாகவும் இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புவிக்கு அப்பால் 9.2 லட்சம் கி.மீ.தொலைவில் ஆதித்யா விண்கலம்: சூரியனின் எல் 1-ஐ நோக்கி சீரான பயணம்

சென்னை : ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டு முழுமையாக விடுபட்டு, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் செல்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு, அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்.7-ம் தேதி வரை அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை : ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், அதேநேரத்தில் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், அவற்றுக்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தாவில் ட்ரோன்களில் மளிகை, மருந்து விநியோகம்

கொல்கத்தா : டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ட்ரோன்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ட்ரோன் சேவையை தொடங்க உள்ளது. இதுகுறித்து ஸ்கை ஏர் நிறுவன துணைத் தலைவர் இஷான் குல்லார் கூறும்போது, ‘‘கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் ட்ரோன்கள் மூலம் மளிகை பொருட்கள், மருந்து பொருட்களை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். முதல்கட்டமாக நியூ டவுன் பகுதியில் பொருட்களை ட்ரோன்கள் வாயிலாக விநியோகம் செய்வோம்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வீட்டுக்குள் 500 பேர் கொண்ட கும்பல் நுழைய முயற்சி

இம்பால் : மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் வசிக்கும் வீட்டை 500 முதல் 600 பேர் கொண்ட கும்பல் முற்றுகையிட்டு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். மணிப்பூரில் மாதக்கணக்கில் மைத்தேயி, குகி இனத்தவர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த கலவர சம்பவங்களால் இதுவரை அங்கு 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான பேர் வீடுகளை விட்டு வெளியே அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே.வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி குற்றச்சாட்டு

புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையில 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளன. முதல்வர் மம்தா தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அறிய முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வாரணாசி : கியான்வாபி மசூதியில், தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் ஆய்வை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகேயுள்ள கியான்வாபி மசூதி, கோயில் வளாகத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அங்கு அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தவேண்டும் என்று கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அங்கு தொல்பொருள் ஆய்வுத்துறை ஆய்வு மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்கான் கோசாலை விவகாரம் - ரூ.100 கோடி இழப்பீடு கோரி மேனகா காந்திக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: பாஜக எம்பி மேனகா காந்தி ரூ.100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி இஸ்கான் அமைப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட கோசாலைகள் செயல்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி பிரச்சினை | குடகு மாவட்டத்தில் எதிரொலிக்காத பந்த் - வாட்டாள் நாகராஜ் கைது

பெங்களூரு : தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. அங்கு போக்குவரத்து, திரையரங்கம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாலை கட்டுமானத்தில் கழிவுகள் பயன்படுத்த திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான கொள்கையை இறுதி செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இதுகுறித்து அமைச்சர் நிதின்கட்சி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான கொள்கையை நாங்கள் இறுதி செய்கிறோம்.கட்டுமான சாதனங்கள் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாத நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினர், உறவினர், நண்பர்களால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும். ரிஷபம்: நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்க திட்டமிடுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, டேனிஸ் அலி மீதான புகார்கள் உரிமைமீறல் குழுவுக்கு பரிந்துரை: மக்களவை சபாநாயகர் நடவடிக்கை

புதுடெல்லி: பாஜக எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஸ் அலி ஆகியோர் மீதான புகார்களை உரிமை மீறல் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரைத்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற போது மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஸ் அலியை தீவிரவாதி என்று கூறி தகாத வார்த்தைகளால், பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி திட்டினார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். ரமேஷ் பிதூரியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி விவகாரம் | கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழ‌ர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழகஅரசு பேருந்துகளும், வாகனங்களும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது. டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டத்தில், “த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 3000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும்''என பரிந்துரை செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் வெறுப்புப் பேச்சு: எம்.பி ரமேஷ் பிதுரியை விசாரிக்க பாஜக பரிந்துரையால் சிறப்புரிமைக் குழு

புதுடெல்லி : பாஜக அரசின் எம்.பி.யான ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு குழுவை அமைக்க பாஜகவும் பரிந்துரை செய்துள்ளது எனத் தெரிகிறது. பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, 14 பேர் கொண்ட சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுனில் குமார் சிங் உட்பட 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். "வெறுப்பு பேச்சு தொடர்பான அனைத்து புகார்களையும் சிறப்புரிமைக் குழு ஆய்வு செய்யும்" என்று மக்களவை செயலக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதன பேச்சு சர்ச்சை: பிஹாரில் விஎச்பி பேரணி; போலீஸ் விடுமுறை ரத்து

பாட்னா: தமிழகத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்து மதத்தின் மீதான தாக்குதலை தடுக்கவும், சனாதனத்தை காப்பாற்றவும் விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்புகள் வட மாநிலங்களில் ஷவுர்ய ஜாக்ரண் யாத்திரையை நடத்த உள்ளன. அடுத்த 2 வாரங்களுக்கு பிஹாரின் வெவ்வேறு நகரங்களில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

28-09-2023 சோபகிருது 11 புரட்டாசி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர். கிரஹப்பிரவேசம், திருமணம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர். ரிஷபம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 53 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பு குறித்து விசாரணை

புதுடெல்லி : காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த விசாரணையின் தொடர்ச்சியாக, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 53 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கனடாவில் கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை இந்திய முகவர்கள் கொன்றதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சட்டவிரோத கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

27-09-2023 சோபகிருது 10 புரட்டாசி புதன்கிழமை திதி: திரயோதசி இரவு 10.17 வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.08, சதயம் மறுநாள் பின்னிரவு 4.27 வரை. பிறகு பூரட்டாதி நாமயோகம்: திருதி காலை 7.52, சூலம் மறுநாள் பின்னிரவு 3.52 வரை. பிறகு கண்டம் நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.02 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5. யோகம்: மந்தயோகம் காலை 7.08 வரை. சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.27 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 6.01. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 6,7,9 சந்திராஷ்டமம் பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

51,000 பேருக்கு பணி நியமன ஆணை: பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கினார்

புதுடெல்லி : ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 51,000 பேருக்கு மத்திய அரசு பணி நியமனத்துக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கிவைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடெல்லி/ பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் கடந்த 12-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதுவே உத்தரவாக பிறப்பிக்கப்ப‌ட்டது. இதற்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்கள் ரசனைக்கேற்ற இடம் அமையும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். பழைய வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். பணவரவு உண்டு. ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வேற்றுமொழி பேசுபவர், வேற்று மதத்தவர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில் தலித் பெண்ணின் ஆடையை களைந்து சித்ரவதை

பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐஜத - ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாட்னா மாவட்டம், மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தலித் தொழிலாளி ஒருவர் ரூ.1,500 கடன் வாங்கியிருந்தார். அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை. கடன் வாங்கிய தொழிலாளியின் மனைவி கடந்த 23-ம் தேதி இரவு குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் பொது குழாயடிக்கு சென்றார். அப்போது பிரமோத்தும் அவரது கூட்டாளிகளும் தொழிலாளியின் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கடன் மற்றும் வட்டி பணத்தை தருமாறு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். பிரமோத்தின் மகன் அன்சூ குமார், பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: உதயநிதியை கண்டித்து டெல்லியில் துறவிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கொசு, டெங்கு காய்ச்சல் போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லி கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள துறவிகளும், தலைவர்களும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியின் துறவிகள் மகா மண்டலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி மற்றும் திமுக தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகனின் தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

26-09-2023 சோபகிருது 9 புரட்டாசி செவ்வாய்க்கிழமை திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 1.44 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: திருவோணம் காலை 9.40வரை. பிறகு அவிட்டம். நாமயோகம்: சுகர்மம் காலை 11.44 வரை. பிறகு திருதி. நாமகரணம்: பவம் பிற்பகல் 3.24 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: சித்தயோகம் சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம் : பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 6.02. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 5,6,8 சந்திராஷ்டமம் புனர்பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசு பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனை சாவடி வரை இயக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டன. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், தமிழகத்துக்கு காவிரிநீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வெளி வட்டாரங்களில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐடி ஹார்டுவேர் உதிரிபாகங்கள் தயாரிப்பு அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி : இந்தியாவில் லேப்டாப் உட்பட ஐடி ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு மத்திய அரசு விரைவில் கட்டுப்பாடுகள் கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஐடி ஹார்டுவேர் உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்நாட்டில் பல மடங்கு உயரும் என்று எதிர்பாக்கப்படுகிறது. தற்சமயம் ஐடி ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்கள் உள்நாட்டிலிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்பில் பெறப்படுகிறது. சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வரும்பட்சத்தில் உள்நாட்டு கொள்முதல் 20 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் சர்வதேச வர்த்தகத்தின் அடித்தளமாக அமையும்: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அதே ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 105-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய நிகழ்ச்சியை இஸ்ரோ யூடியூப் சேனலில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரலையில் பார்த்துள்ளனர். இது நாட்டு மக்கள் சந்திரயான்-3 மீது எவ்வளவு ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை எதிர்ப்பதா? - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் கண்டனம்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் 2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம், கேரளா, மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன. இதனால், கேரளாவில் காங்கிரஸும், இடதுசாரிகளும் தனித்தனியாக போட்டியிடும் என கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

``இந்தியா, அதுவே பாரத்" -  கவனம் ஈர்த்த ராகுல் காந்தியின் ஜாலி பதில்

டெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தது கவனம் ஈர்த்தது. `நெட்ஃப்ளிக்ஸ் அல்லது ஜிம்முக்குச் செல்வீர்களா?' என்ற கேள்விக்கு `ஜிம்முக்குச் செல்வேன்!' என்று ஜிம்மை தேர்ந்தெடுத்தார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது இருந்த அவரின் தாடி குறித்து கேள்வி கேட்டதற்கு, "காங்கிரஸுக்கும் என்னிடமிருக்கும் பிரச்சினையே. தாடி, உணவு, உடை ஆகியவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எதுவாக இருந்தாலும் அப்படியே இருந்துவிடுவேன்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

`வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல்'- பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு

டெல்லி : பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி என நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உட்பட பலர் போராட்டம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6-ம் நாள் திருப்பதி பிரம்மோற்சவம் | அனுமன் வாகனத்தில் மலையப்பர் பவனி: தங்க தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்திலும், மாலை தங்க தேரிலும், இரவு யானை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

24-09-2023 சோபகிருது 7 புரட்டாசி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாரணாசியில் ரூ.451 கோடியில் கிரிக்கெட் மைதானம்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.451 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். வாரணாசி ரிங் சாலை அருகேயுள்ள காஞ்சரி பகுதியில் 30.6 ஏக்கர் பரப்பில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு சார்பில் ரூ.121 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்காக பிசிசிஐ சார்பில் ரூ.330 கோடி செலவிடப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்: டெல்லியில் முதல் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி : ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை டெல்லியில் நேற்று நடைபெற்றது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்த மசோதாவைக் கொண்டு வர முதலில் முயற்சித்தது காங்கிரஸ் கட்சிதான். தற்போது இந்த மசோதாவானது, சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது. அதில் 2 விஷயங்களை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒன்று மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலாவதற்கு முன்னதாக ஒபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். இரண்டாவது தொகுதி மறுவரையறையையும் செய்து முடித்திருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டுமே செய்யப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ தொடர் முயற்சி

சென்னை : சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் கடந்த ஆக.23-ம் தேதி நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. இவை 12 நாட்கள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களை நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நில அதிர்வின் தன்மைஉட்பட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சை பேச்சு - தமிழக அரசு, உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி : சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நவ.10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்.2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில்தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜாமீன் மனு தள்ளுபடி - சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2018-ல் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக கூறி, சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அவருக்கு 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது. இதையடுத்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதலீடுகளை ஈர்க்க துபாய் பயணம் - லுலு குழும அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் மம்தா

கொல்கத்தா : மேற்கு வங்கத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக புறப்பட்டார். கடந்த 12-ம் தேதி ஸ்பெயின் சென்றடைந்த அவர், அங்கு மாட்ரிட், பார்சிலோனா ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்தார். மம்தா தனது பயணத்தில் பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை சந்தித்தார். மேற்கு வங்கத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க ஸ்பெயின் கால்பந்து அமைப்பான லா லிகா உடன் மேற்கு வங்க அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது உட்பட இப்பயணத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன்?: ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.பி. ஒவைசி விளக்கம்

புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி. அசதுதீன் ஒவைசி விளக்கம் அளித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாநாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதன்மூலம், நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் 33% பெண்கள் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் மக்களவையில் அனைத்து கட்சிகளின் 454 எம்.பி.க்களும் வாக்களித்து ஆதரவை தெரிவித்தனர். ஆனால், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் அசதுதீன் ஒவைசி, இம்தியாஸ் ஜலீல் ஆகிய 2 எம்.பி.க்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவில் உறக்க நிலையில் உள்ள லேண்டர், ரோவர் மீண்டும் இயங்குமா?: தீவிர முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

சென்னை : நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் ஆகியவை ஆக.23-ம்தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள் ஆய்வு செய்து பலஅரிய தகவல்களை நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நிலஅதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் விநாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்க‌ உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மாதம் அவசர மனு தாக்கல் செய்தது. இதை விசாரிக்க, நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் தனி அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''இது வெறும் சட்டம் அல்ல'' - மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி

புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனையைக் காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா சட்டமாக மாற இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் மட்டும் தேவை. 454 எம்.பி.க்கள் ஆதரவுடன் நேற்று மக்களவையில் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா

புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒருமனதாக ஆதரவு கிடைத்தது. ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த மசோதா சட்டமாக மாற இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் மட்டும் தேவை. 454 எம்.பி.க்கள் ஆதரவுடன் நேற்று மக்களவையில் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என சித்தரிக்க முயற்சி: ரோஜா

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைதை அரசியல் பழிவாங்கல் என அக்கட்சியினர் சித்தரிக்க முயற்சிப்பதாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் நடத்தை கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமாஜ்வாதி எம்.பி. சட்டை காலரை பிடிக்க முயன்ற சோனியா: பாஜக எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி : மக்களவையில் நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியதாவது: கடந்த 2011-ம் ஆண்டு ஐ.மு. கூட்டணி அணி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தபோது, அவர்களின் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை மக்களவையின் மையப் பகுதியில் வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தினர். அதேபோல் கடந்த 2012-ம் ஆண்டு பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவாதம் நடந்தது. அப்போதைய காங்கிரஸ் அமைச்சராக இருந்த நாராயணசாமி மசோதாவை தாக்கல் செய்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் எஸ்.சி.பிரிவு எம்.பி யஷ்விர் சிங், அமைச்சர் நாராயணசாமியின் கையில் இருந்த மசோதாவை பறித்துச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முழு ஆதரவுடன் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது | முழு விவரம்

புதுடெல்லி : மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் முழு ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அன்று மாலை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு கூட்டத் தொடரின் 2-வது நாள் நிகழ்வுகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 19-ம் தேதி செயல்படத் தொடங்கியது. இதில் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை (நாரி சக்தி வந்தன் அதிநியம்) தாக்கல் செய்து பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்