Skip to main content

Posts

Showing posts from January, 2024

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, வியாபாரம் தொடங்க, சொத்துப் பத்திரப் பதிவு செய்ய, புது வேலையில் சேர, தாலிக்கு பொன் உருக்க, தங்க நகைகள் வாங்க நன்று. திருமணப் பேச்சுவார்த்தை நடத்த இந்நாள் பொன்னாள் ஆகும். பழைய வழக்குகள் தொடர்பாக வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவு செய்வது நல்லது. நரசிம்ம மூர்த்திக்கு பானகம் கரைத்து நிவேதனம் செய்வது நல்லது. மேஷம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர். பணவரவு திருப்தி தரும். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

புதுடெல்லி: அரசு நிர்வாகத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: புதிய நாடாளுமன்றத்தில் இது எனது முதல் உரையாகும். அமிர்த காலத்தின் தொடக்கத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கொள்கைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹேமந்த் சோரன் கைது, புதிய முதல்வர் சம்பாய் சோரன்... - ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர், ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதையடுத்து, ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஹேமந்த் சோரனின் தீவிர விசுவாசி ஆவார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். ஹேமந்த்திடம் விசாரிப்பதற்காக 8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை. இறுதியாக ஜனவரி 20 அன்று ஜார்க்கண்டில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கே வந்து விசாரித்து சென்றனர் அமலாக்க அதிகாரிகள். எனினும், விசாரணை முழுமையடையததால் மீண்டும் ஆஜராக வேண்டும் என ஹேமந்துக்கு 9-வது முறையாக சம்மன் அனுப்பினர். அதற்காக இரண்டு தேதிகள் அவரை தேர்ந்தெடுக்க சொல்லப்பட்டது. அதன்படி, ஜனவரி 29-ஐ தேர்ந்த...

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர் களுக்கு எதிரான மற்றொரு வெற்றிகர நடவடிக்கையாக, அவர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்கள் 11 பேர், பாகிஸ்தானை சேர்ந்த அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலை துப்பாக்கி முனையில் கடத்தினர். மேலும் அதிலிருந்து 19 பாகிஸ்தானியர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். பிணைக் கைதிகள் அவசர உதவி கோரியதை தொடர்ந்து தெற்கு அரபிக் கடலில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் அங்கு விரைந்தது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து, மீன்பிடிக் கப்பலையும்அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் மீட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

திருவனந்தபுரம்: கேரள பாஜக நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன். கேரள பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுதலைவராக பதவி வகித்து வந்த அவர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர்19-ம் தேதி காலையில் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட தயாரானார். அப்போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஞ்சித் சீனிவாசனை சரமாரியாக தாக்கினர். இதில், அவரது உடலில் 56 இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது முகம் முழுமையாக சிதைக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே ரஞ்சித் சீனிவாசன் உயிரிழந்தார். தாய், மனைவி, மகளின் கண்எதிரேகொடூரமாக அவர் படுகொலை செய்யப்பட்டது, கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பிரமுகர் மன்வேந்திர சிங் சாலை விபத்தில் படுகாயமடைந்தார்

அல்வார்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், முன்னாள் எம்.பி-யுமான மன்வேந்திர சிங், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் அவருடன் பயணித்த அவரது மனைவி சித்ரா சிங் உயிரிழந்தார். டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதில் அவரது 25 வயது மகன் ஹமிர் சிங் மற்றும் ஓட்டுநர் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். குடும்பத்துடன் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் பயணித்த போது விபத்தில் சிக்கி உள்ளார். அவர்கள் பயணித்த காரினை மன்வேந்திர சிங் தான் ஓட்டி வந்துள்ளார். சாலையோர தடுப்பக்கட்டையில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பயணித்த காரணத்தால் காரின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க அயோத்தி, மதுரை உட்பட 30 நகரங்கள் தேர்வு

புதுடெல்லி: யாசகம் பெறுவோர் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கலாச்சாரம், வரலாறு அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 30 நகரங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தேர்வு செய்துள்ளது. வடக்கில் அயோத்தி, தெற்கில் திருவனந்தபுரம், கிழக்கிஸ் குவாஹாட்டி, மேற்கில் திரிம்பகேஷ்வர் என நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த நகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மதுரை, கோழிக்கோடு, விஜயவாடா, மைசூரு உள்ளிட்ட நகரங்களும் இடம் பெற்றுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: பிப்.1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இதில் பல சலுகைகள், புதிய திட்டங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இது மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டமாக அமையும். ஜனவரி 31-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை கூடும். தொழில்ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. ரிஷபம்: சாதுர்யமாக செயல்படுவீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் உடனான மனக் கசப்புகள் நீங்கும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வராக 9-வது முறை பதவியேற்றார் நிதிஷ்குமார்: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி

பாட்னா: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. முதல்வராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பிஹார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதா தளம், பாஜக ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

28.01.2024 ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கியான்வாபி மசூதி தொடர்பான தொல்லியல் துறை அறிக்கை தீர்ப்பு அல்ல: மசூதி குழு செயலாளர் முகமது யாசின்

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள கியான்வாபி மசூதி, முகலாய மன்னர்களால் அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்திய ஏஎஸ்ஐ, தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் நகல்கள் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைச்சரவையை மட்டும் மாற்றியமைக்க நிதிஷ் குமார் முடிவு: பாஜக ஆதரவுடன் பிஹாரில் புதிய ஆட்சி

பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் இன்று தனது அமைச்சரவையை மாற்றியமைத்து புதிய ஆட்சி அமைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தனது கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். பாஜக, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி அமைத்து அவர் ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு ‘பல்து ராம்’ (அடிக்கடி கட்சி மாறுபவர்) என்ற புனைப் பெயரும் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” - தெலங்கானா முதல்வர் உறுதி

ஹைதராபாத்: தெலங்கானாவில் விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவர் இதனை தெரிவித்தார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) ஹைதராபாத் தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இண்டியா’ கூட்டணியில் இருந்து விலகுகிறார் - பாஜக கூட்டணிக்கு வருகிறார் நிதிஷ் குமார்?

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது.மேலும் இண்டியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை,இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். தாயாரின் உடல் நிலை சீராக அமையும். அலைச்சல், குறையும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் முப்படை அணிவகுப்புகளுக்கு பெண்கள் தலைமை தாங்கினர் - தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர்

புதுடெல்லி: நாட்டின் ராணுவ வலிமை, அறிவியல் வளர்ச்சி, கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார். 10.25 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் கடமைப் பாதைக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், 21 பீரங்கி குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் மீண்டும் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்: எம்எல்சி பதவி வழங்கியும் காங்கிரஸை விட்டு விலகினார்

பெங்களூரு/புதுடெல்லி: கடந்த தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக மூத்த தலைவரும், முன்னாள்முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு (67) பாஜக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். ஹூப்ளி-தர்வாட்மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் மேலிடம் எம்எல்சி பதவி வழங்கியது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவர் மீண்டும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தன்னை மீண்டும்கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிட உள்ள பிரதமர் மோடி, நேற்று உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷண், விஜயகாந்துக்கு பத்ம பூஷண் - பத்ம விருதுகள் முழு பட்டியல்

புதுடெல்லி: கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்), தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என தகவல். சிரஞ்சீவி, பத்மா சுப்ரமண்யம், வெங்கய்ய நாயுடு என பெருவாரியான மக்களால் அறியப்படுபவர்களுக்கும் விருதுகள் அறிவிப்பு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil...

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கு ராமர் கோயிலே சான்று” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை @ Republic Day

புதுடெல்லி: "ராமர் கோயிலின் கட்டுமானம் என்பது உரிய நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பின், நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்ற முடிவுக்குப் பின் தொடங்கியது. இப்போது பிரம்மாண்டமான கட்டுமானமாக நிற்கும் இது, மக்களின் நம்பிக்கையை உரிய முறையில் வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி நீதித்துறை நடவடிக்கைகளில் மக்கள் கொண்டுள்ள மிகப் பெரும் நம்பிக்கையின் சான்றாகவும் இருக்கிறது" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: “75-வது குடியரசு தின விழா நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதும் எவ்வளவு தூரம் நாம் பயணித்திருக்கிறோம் என்பதை நான் திரும்பிப் பார்க்கும்போது எனது மனம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது. குடியரசின் 75-வது ஆண்டு நாட்டின் பயணத்தில் பலவழிகளில் உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நாம் நிறைவு செய்தபோது நமது தனித்துவமான பெருமிதம் மற்றும் பன்முகக் கலாச்சாரத்தை சுதந்திரத்...

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ‘இண்டி’ கூட்டணியில் விரிசல்

மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து பல மாதங்களுக்கு முன்பே இண்டி கூட்டணியை உருவாக்கின. ஆனால் நாடாாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான கே.சி. தியாகி சமீபத்தில் கூட்டணிக்கென ஒரு திட்டமோ அல்லது செயல்வடிவமோ இல்லையென்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ‘இண்டி' கூட்டணியானது பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்றால், கிரிக்கெட் பாணியில் சொல்வதானால் - பேட்டிங்கில் திறமையாக இருந்தால் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும். அல்லது பந்து வீச்சில் பலமாக இருந்தால் எதிரணியை இத்தனை ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பது போல எத்தனை இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு வேண்டும். அல்லது பாஜகவை எத்தனை இடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாகனம் செலவு வைக்கும். ரிஷபம்: பணவரவு திருப்தி தரும். நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். வேற்று மதத்தவர், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம், பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: தனித்து போட்டியிடுவதாக திரிணமூல், ஆம் ஆத்மி அறிவிப்பு

கொல்கத்தா/ சண்டிகர்: மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி, பகவந்த் மான் ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அவர்கள் அறிவித்திருப்பது, இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இக்கூட்டணியில் திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) உட்பட 28 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். சமீபத்தில் காணொலி வாயிலாகவும் ஒரு கூட்டம் நடந்தது. ஆனாலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu...

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு 81% பேர் ஆதரவு

புதுடெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவாக 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 2023 செப்டம்பரில் அமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

புதுடெல்லி : பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு . பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (ஜன.23) அறிவித்தார். கர்பூரி தாக்கூர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னம் விருது வழங்கப்படுகிறது. கர்பூரி தாக்கூர் பிப்ரவரி 17, 1988ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - டெல்லியிலும் அதிர்வு உணரப்பட்டது

புதுடெல்லி : சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் இரவு 11 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சீனாவை தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன்” - ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி

அயோத்தி : "உண்மையில் நான்தான் அதிர்ஷ்டசாலி" என அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை யை வடிவமைத்த சிற்பி கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிற்பி அருண் யோகிராஜ், "இப்போது நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன். இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள்" என நெகிழ்ச்சியுடன் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"இன்றாவது ராவணனை பற்றி பேச வேண்டாம்" - ராகுலை குறிப்பிட்டு அசாம் முதல்வர் சாடல்

குவாஹாட்டி : "இன்றைக்காவது ராவணனைப் பற்றி பேச வேண்டாம்" என்று ராகுல் காந்தியை குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். சட்டம் - ஒழுங்கு காரணங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் தடைவிதித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்துடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் நேற்று (ஜன.22) சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். துறவி, அறிஞர், சமூக - மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார். ஆனால், அந்தக் கோயிலுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவ...

“ராம ஜோதியை ஏற்றி குழந்தை ராமரை வரவேற்பீர்” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி : பிராணப் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராம ஜோதியை ஏற்றிக் குழந்தை ராமரை வரவேற்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், "குழந்தை ராமர் இன்று அயோத்தி தாமில் உள்ள தமது பிரமாண்டமான ஆலயத்தில் அமர்ந்துள்ளார். இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், ராம ஜோதியை ஏற்றி, தங்கள் வீடுகளிலும் அவரை வரவேற்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம்!" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா, தென்கொரியாவை இணைக்கும் அயோத்தி இளவரசி

அயோத்தி : முதலாம் நூற்றாண்டில் தென்கொரியாவில் காராக் மன்னராட்சி நடைபெற்றது. அப்போது இந்தியாவின் உ.பி. அயோத்தியை சேர்ந்த இளவரசி சூரி ரத்னாவை, காராக் குலத்தின் மன்னர் கிம் சுரோ திருமணம் செய்தார். இதன்பிறகு இளவரசி சூரி ரத்னாவின் பெயர் ஹூ ஹ்வாங் ஓக் என்று மாற்றப்பட்டது. தென்கொரிய மக்கள் தொகை 5.17 கோடி. இதில் சுமார் 1.5 கோடி பேர் காராக் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அயோத்தி இளவரசிசூரி ரத்னாவின் வாரிசுகளாக அறியப்படும் இவர்கள், இந்தியா மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான தென் கொரிய மக்கள் அயோத்திக்கு சுற்றுலா வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா: நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அயோத்தி : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது. உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் திறப்பு விழா | ரஜினி முதல் ராம்தேவ் வரை - அயோத்தி வந்த விஐபிகள் லிஸ்ட்

புதுடெல்லி : நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழா விற்காக பல முக்கிய பிரபலங்கள் அயோத்திக்கு வந்திறங்கி உள்ளனர். நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ், கங்கணா ரணாவத், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பாபா ராம்தேவ் என இந்தப் பட்டியல் நீள்கிறது. உத்தரப்பிரதேசம் அயோத்தியில் நாளை திறக்கப்பட உள்ள ராமர் கோயில் விழா வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிமிருந்தும் பல முக்கியப் பிரபலங்களும் அயோத்தி வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பையிலிருந்து அயோத்திக்கு1,425 கி.மீ தூரம் நடைபயணமாகச் செல்லும் முஸ்லிம் பெண்

மும்பை : மும்பையிலிருந்து ராமர் கோயில் திறக்கப்படவுள்ள அயோத்திக்கு 1,425 கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக முஸ்லிம் பெண் ஒருவர் சென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் 1,425 கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு சிறப்பு அழைப்பிதழ்

புதுடெல்லி : ஸ்ரீ ராம ஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வில் இடம்பெற்றிருந்த தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட 5 நீதிபதிகளுக்கு ராமர் கோயில் பிரதிஷ்டைக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமஜென்மபூமி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு வழங்கிய தீா்ப்பில், ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பசுக்களுக்கு உணவளித்து, வெறும் தரையில் உறங்கி 11 நாட்கள் கடுமையாக விரதம் இருக்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி : ராமர் கோயில் திறப்பையொட்டி 11 நாள் விரதத்தை கடைபிடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், பசுக்களுக்கு உணவளித்தும், கட்டாந்தரையில் படுத்து உறங்கியும் தினந்தோறும் அவர் கடுமையான விரதத்தை கடைபிடித்து வருகிறார். அயோத்தியில் வரும் 22-ம்தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு, பிரதமர் 11 நாள் விரதத்தை அறிவித்து அதனை கடுமையாக பின்பற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் நாட்டில் வேலை | ஹரியாணா அரசு ஆட்சேர்ப்பு முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புதுடெல்லி : காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்யும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஹரியாணா அரசு, இஸ்ரேலில் உள்ள 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்களை கடந்த டிசம்பரில் வெளியிட்டது. தச்சர்கள், பீங்கான் டைல்ஸ் ஒட்டுநர்கள், மேஸ்திரிகள், உருக்காலை தொழிலாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.1.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தங்க வில் - அம்பு: அயோத்தி ராமர் சிலையின் முழு தோற்றம் வெளியீடு

மைசூரு : அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராமர் குழந்தையாக நிற்கும் நிலையில் தங்க வில் மற்றும் அம்புகளை ஏந்தியவாறு சிலை சித்தரிக்கிறது. 51 இன்ச் உயரம் கொண்ட இந்த குழந்தை ராமர் சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ளார். நேற்று கருவறைக்குள் சிலை வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகின. என்றாலும் அது துணியால் மூடப்பட்டிருந்தது. பின்னர் சிலையின் கண்கள் மட்டும் மூடியிருந்த மற்றொரு படம் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதனிடையேதான் முழுமையான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களில் குழந்தை ராமரின் முகம் மற்றும் தங்க வில் மற்றும் அம்பு ஆகியவற்றை அடங்கிய முழுமையான தோற்றமாக காட்சியளிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுற்றுலா சென்றபோது துயரம் - 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து ஏற்பட்டது எப்படி?

வதோதரா : வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல். மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், விபத்து தொடர்பாக 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்கள் தேடும் பணி நிகழ்விடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் துயரம்: ஏரியில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 14 பேர், ஆசிரியர்கள் இருவர் உயிரிழப்பு

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்கள் தேடும் பணி நிகழ்விடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. நடந்தது என்ன? - வியாழக்கிழமை (ஜன.18) அன்று ஹார்ணி ஏரிக்கு மாணவர்கள் சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளனர். இந்தச் சூழலில் 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்த படகு ஏரியில் மதியம் கவிழ்ந்துள்ளது. இதில் 7 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல். 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால...

ராமர் கோயில் திறப்பு நிகழ்வும், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ரியாக்‌ஷன்களும் - ஒரு பார்வை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் ‘ராமர் கோயில்’ திறப்புக்கு எதிர்க்கட்சிகள் ரியாக்‌ஷன் என்ன என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று ராமர் கோயிலில் பூஜைகள் தொடங்கியிருக்கும் சூழலில், கோயில் திறப்பு விழாவை பாஜக அரசியலாக்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. அழைப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் என்னென்ன? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்கும் முயற்சி: மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நிதி கமிஷனில் பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமையிலான பாஜக அரசின் தலையீடு காரணமாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி பெருமளவு குறைவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பான தகவலை தங்களிடம் அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ல் நாட்டில் பிரதமர் மோடியின் ஆட்சி அமைந்தது முதலே மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி குறைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் நீண்ட ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “14-வது நிதி கமிஷனில் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு சட்டத்துக்கு முரணாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய வரி வருவாயின் பங்கினை களவாடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டம்: பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இதில், மக்கள் பயன்பெறும் வகையில் பல சலுகைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் திறப்பு விழா | இலவச விஐபி நுழைவுச் சீட்டு குறித்த போலி மெசேஜ்: வாட்ஸ்அப் மோசடி

சென்னை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப்பில் இலவச விஐபி நுழைவுச் சீட்டு குறித்த போலி மெசேஜ் வலம் வந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை எக்ஸ் தளத்தில் பயனர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையையும் வழங்கி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் சுமார் 6,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீட்டில் பழுதடைந்த மின்னணு, மின்சார சாதனங் களை மாற்றுவீர். பிரச்சினை எதுவானாலும் சமாளிக் கும் மன வலிமை கூடும். தாய்வழி உறவினர்களின் வருகையுண்டு. பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். முக்கிய பிரமுகர்கள் சிலரின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமராவதி: திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில், ஒரு முன்னாள் முதல்வரான என்னை கைது செய்ய 17-ஏ சட்டப்பிரிவின் படி, ஆளுநருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், திடீரென சிஐடி போலீஸார் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்தது சட்டப்படி செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு தரப்பில் கடந்தஆண்டு செப்டம்பர் 23ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு இதே வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடமாநிலங்களில் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, ரயில்கள் தாமதம், பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: வடமாநிலங்களில் உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இதன்காரணமாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன்காரணமாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிஹாரில் வரும் 20-ம் தேதி வரை, 1 முதல் 8-ம்வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது” - பிரதமர் மோடி

சென்னை: தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியை வாட்டும் குளிர் - 17 விமானங்கள் ரத்து; ரயில் சேவை கடுமையாக பாதிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குளிருடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால், டெல்லி பாலம் மற்றும் சஃப்டர்ஜங் விமான நிலையங்களில் காணும் திறன் 500 மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 30 விமானங்கள் தாமதமாகின. 17 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.16) காலை வெளியிட்ட அறிக்கையில், “பஞ்சாப் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லி, ஹரியாணா, வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்குவங்கத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்குப் பகுதிகளிலும் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டமும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடரும். இதனால் டெல்லிக்கு செவ்வாய் ம...