Skip to main content

Posts

Showing posts from July, 2020

“இதுக்கு முன்னே இப்படி இல்லை”- ஜூலையில் பருவமழை பற்றாக்குறை

பருவமழை தொடங்கி அவ்வப்போது பெய்துவந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலையில் மழை குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினாலும், ஜூலையில் தடுமாறியுள்ளது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவைவிட பத்து சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மிகக்குறைவான அளவே மழை பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது பருவகாலம் பற்றிய வானிலை அறிக்கையில், செப்டம்பரில் கனமழைக்கு வாய்ப்பு  இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழையின் அளவு சராசரியாக 104 சதவீதமாக இருக்கும். ஆனால் ஆகஸ்ட் மாதம் 97 சதவீதம் மட்டுமே மழை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. “செப்டம்பர் மாதத்தில் பசிபிக் பகுதியில் ஏற்படும் வெப்பம் மற்றும் காற்றின் மாறுதல்களால் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக அது கோடை மழைக்கு உதவியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சாதாரண பருவமழையே எதிர்பார்க்கப்படுகிறது” என்கிறார் இந்திய வானிலை மைய...

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன்?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தலைவர் கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன் என திமுக எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சிதலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ எனவும் புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்திற்கு புரட்சி தலைவி ஜெ.ஜெயலிலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ எனவும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர் அண்ண ஆலந்தூர் மெட்ரோ என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவித்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், ₹14,000 கோடி செலவில், அன்றைய துணைமுதல்வர், தளபதி திரு @mkstalin அவர்களின் முன்முயற்சியால் மட்டுமே கொண்டு வரப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தலைவர் கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன் !! — தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) July 31, 2020 இந்நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது “ 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தமிழறிஞர் க...

பிரசாத் ஸ்டூடியோ மீது புகாரளித்த விவகாரம் : இளையராஜா வழக்கறிஞர் பேட்டி

இசையமைப்பாளர் இளையராஜா தரப்பிலிருந்து பிரசாத் ஸ்டூடியா மீது ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இடம் ஒதுக்கப்பட்ட விவகாரம் ஏற்கெனவே பிரச்னையில் உள்ளது. இந்நிலையில் சென்னை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை நோட்ஸ்களை சேதப்படுத்தியதாக சாய் பிரசாத் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன், “இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவை இளையராஜாவை நுழையவிடாத பிரச்சினை ஏற்கனவே தெரியும். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று தெரிவித்தார். இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலின் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலின்

இஸ்லாமிய மக்கள் நல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எழுச்சியுடன் கொண்டாடப்படும் - தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக முக்கியமான இந்தப் பண்டிகை தருணத்தில் - தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று, நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மருத்துவர்களின் தனிமைப்படுத்துதல் காலத்திற்கும் சம்பளம் வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

மருத்துவர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை விடுப்பு நாட்களாக கருதாமல் சம்பளம் வழங்க வேண்டும்  என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கான சம்பளம் தொடர்பான வழிகாட்டுதல்களை ஜூன் 17 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்டது. அதன்பிறகு ஜூன் 18 மத்திய அரசும் இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால் மஹாராஸ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.  “மாநில அரசுகள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவேண்டும். அவர்களின்  தனிமைப்படுத்துதல் காலத்தை விடுப்புக்காலமாக கருதக்கூடாது என்றும், இதுபற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தியாவிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவிலிருந்து சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் கட்டுப்பாடுகளுடன், விதிமுறையைப்பின்பற்றி விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தலா? - விசாரணை நடத்த கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கை, தற்போது தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏ விசாரித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணக்கில் காட்டாமல் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு மன்னிப்பு: மத்திய நிதி அமைச்சகம் திட்டம்

கணக்கில் வராத தங்கம் வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பையும், தங்கம் இறக்குமதியையும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதனால், இந்தியாவில் தங்கத்துக்கான தேவை எப்போதுமே அதிகமாகவே இருக்கும். அதேசமயம் வரி ஏய்ப்பு செய்பவர்களும், வருவாய் கணக்கை மறைப்பவர்களும் தங்கத்தை வாங்கி குவிப்பதும் வழக்கம். இந்நிலையில், கணக்கில் வராத தங்கத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“அதிகாரிகள் டார்ச்சரால்தான் இந்த முடிவு” - தபால்காரர் தூக்கிட்டு தற்கொலை

சீர்காழி அருகே செம்பதனிருப்பு போஸ்ட் மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே அல்லி விளாகம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் செம்பதனிருப்பு தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் “அஞ்சல் இடமாற்றம் செய்வது தொடர்பான அலுவலக பணத்தை நான் எடுத்ததாக பிரச்னை ஏற்பட்டது. அந்த பிரச்னையில் உயர் அதிகாரிகள் எனக்கு அதிக நெருக்கடி கொடுத்தனர். அதனால் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன். இதனால்தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த சீனிவாசன் மனைவி சுதா (35) பாகசாலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இறந்து போன சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும...

கொரோனா கால பணி: காவல் ஆய்வாளரின் நெகிழ்ச்சிப் பதிவு!

கொரோனா தடுப்புப் பணிகளில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் காவல்துறையிலும் பலருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இச்சூழலில் கொரோனா கால பணி அனுபவம் குறித்து பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் பேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு ஒன்று ‘வைரலாகி' வருகிறது. அப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘’சில நாட்களுக்கு முன்பு ஒரு இளம் வழக்குரைஞர் தம்பி காவல் நிலையம் வந்தார், பார்க்கும்போதே அவர் காய்ச்சலில் இருந்தது தென்பட்டது. அவரிடம் கொரோனா தாக்கத்தின் சூழலை எடுத்து சொன்னோம், ஏற்றுக்கொண்டார். ஆனால் இன்னும் சிலர் தங்களது அதிகாரத்தை காட்டிட முனைகிற இடமாக காவல் நிலையத்தை கருதுகின்றனர். சரியாக மூன்று தினம் கழிந்தது அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்தது. அனைவரும் டெஸ்ட் எடுத்தோம். மக்களின் குறைகளை இத்தருணத்திலும் ரிஸ்க் எடுத்தே விசாரித்து தீர்த்து வைக்கின்றோம் ஆனாலும் அரசின் உத்தரவினை பின்பற்றாமல் இருக்கின்றனர் சிலர். காவல் நிலையம் முன்பாக ஷாமியானா போடப்பட்டு பாதுகாப்புடன் தான் விசாரிக்கப்படுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு பக்கத்து லிமிட்டில் ஒரு மரணம். பிரேதத்தை வாங்காமல் சாலை...

கரோனா ஊரடங்கால் போதிய சவாரி கிடைக்காமல் குடியிருப்பு பகுதிகளில் ஆட்டோக்களில் காய்கறிகள் விற்கும் தொழிலாளர்கள்

ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், ஆட்டோக்களுக்கு போதிய சவாரி கிடைக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் ஆட்டோக்களில் காய்கறிகள், பழங்களை கொண்டு சென்று குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளன. மற்றொருபுறம் கரோனாஅச்சத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விமானவியல் குறித்து ‘பறக்கலாம் வாங்க’ வழிகாட்டி நிகழ்ச்சி; ஆக.5 ல் தொடக்கம்: வல்லுநர்கள் பங்கேற்பு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்துடன் (NDRF) இணைந்து‘பறக்கலாம் வாங்க’ (லெட்ஸ் ஃபிளை) எனும் விமானவியல் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 5-ம் தேதி (புதன்) தொடங்கி5 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது. இதில் விமானவியல் துறை தொடர்பான படிப்புகள்,கற்பதற்கான வழிமுறைகள், வேலைவாய்ப்பு என பல்வேறு தகவல்கள் குறித்து மூத்த அறிஞர்கள் உரையாற்ற உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம்: அறிவிப்பு வெளியீடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், வரும் கல்வியாண்டிற்கான முதுகலை படிப்பிற்கு விண்ணப்பப்படிவங்கள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் முதலாம் ஆண்டுக்காண மாணவ, மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதள வாயிலாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தற்போது முதுகலை பட்டப் படிப்புகளான M.Phil மற்றும் Ph.d பட்டப் படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பம், கடந்த ஜூலை 18 ஆம் தேதிதொடங்கிய வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதற்கான விண்ணப்ப படிவமானது www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் வசந்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வ...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்: தியாகத் திருநாளாம் ‘பக்ரீத்’ பண்டிகையின் மகத்துவம்

‘பக்ரீத்’ எனும் தியாகத் திருநாள்பண்டிகை உலக அளவில்இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைவனின் தூதரான இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இறைவன், தன் தூதர் இப்ராகீமை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினான். அவர் எல்லா சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக்காட்டினார். இறை சோதனைகளில் உச்சகட்டமாக வந்தது, ‘தன் மகனை அறுத்து பலியிட வேண்டும்’ என வந்த இறைக்கட்டளை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொதுப்பணித் துறை சார்பில் 18 மாவட்டங்களில் ரூ.280 கோடியே 90 லட்சம் மதிப்பில் 22 திட்டப்பணிகள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

பொதுப்பணித் துறை சார்பில் 18 மாவட்டங்களில் ரூ. 280 கோடியே 90 லட்சம் மதிப்பிலான 22 திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்டுமானப் பொறியியல், கட்டிடக் கலை துறையில் கற்பனை வளம், படைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கலாம்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தகவல்

கற்பனை வளமும், படைப்பாற்றலும் கொண்டவர்கள் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய துறைகளில் சாதிக்கலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தாவிஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியைகடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ஆன்லைனில்நடத்தி வருகிறது. கடந்த 30-ம் தேதி நடந்தநிகழ்ச்சியில் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் படிப்புகள் குறித்து துறை வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இதுக்கு முன்னே இப்படி இல்லை”- ஜூலையில் பருவமழை பற்றாக்குறை

பருவமழை தொடங்கி அவ்வப்போது பெய்துவந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலையில் மழை குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினாலும், ஜூலையில் தடுமாறியுள்ளது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவைவிட பத்து சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மிகக்குறைவான அளவே மழை பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது பருவகாலம் பற்றிய வானிலை அறிக்கையில், செப்டம்பரில் கனமழைக்கு வாய்ப்பு  இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழையின் அளவு சராசரியாக 104 சதவீதமாக இருக்கும். ஆனால் ஆகஸ்ட் மாதம் 97 சதவீதம் மட்டுமே மழை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. “செப்டம்பர் மாதத்தில் பசிபிக் பகுதியில் ஏற்படும் வெப்பம் மற்றும் காற்றின் மாறுதல்களால் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக அது கோடை மழைக்கு உதவியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சாதாரண பருவமழையே எதிர்பார்க்கப்படுகிறது” என்கிறார் இந்திய வானிலை மைய...

நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம்: அந்நிய செலாவணி சட்டத்தில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பாக தற்போது அமலாக்கத் துறை அந்நியச் செலாவணி வழக்கை பதிவு செய்துள்ளது. பிஹார் போலீஸ் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, தனது மகன் வங்கிக் கணக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும்சிலர் பரிவர்த்தனை மேற்கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம் : வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். ரிஷபம் : குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

01-08-2020 சனிக்கிழமை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்று யுஜிசி வாதிட்டு வருகிறது. இந்த பின்னணியில் சிவசேனா இளைஞர் அணி மற்றும் 31 மாணவர்கள் சார்பில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண்,சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெவ்வேறு இடங்களில் பேரவை, தலைமை செயலகம், உயர் நீதிமன்றம்; ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்: அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஒப்புதல்

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்படி அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கர்னூலில் உயர் நீதிமன்றம் செயல்படும். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயவாடா - குண்டூர் இடையே ஆந்திராவின் புதிய தலைநகரை அமைக்க கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். இப்பகுதிக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர் ஆருஷி ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில், ‘கரோனா வுக்கு சிகிச்சை அளிக்கும் மருத் துவர்களுக்கும் சுகாதாரப் பணி யாளர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படு வதில்லை. எனவே, அவர் களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க உத்தர விடவேண்டும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை விடுப்பாக கருதக் கூடாது. அதற்காக ஊதி யத்தை பிடிக்கக் கூடாது’ என்று கோரியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க திமுக கூட்டத்தில் தீர்மானம்

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நேற்று மாலை 4.30 மணியளவில் காணொலி மூலம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, சட்டப்பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செல்போன் எண் - வாட்ஸ்அப்களை ஹேக் செய்து நவீன மென்பொருள்களை பயன்படுத்தி நூதன மோசடி: எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுரை 

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்தியாவசியம் போல தொழில்நுட்பம் அடிப்படையாகி விட்டது. பிறப்பு முதல் இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நிழல்போல் நம்மைப் பின் தொடர்கின்றன. ஒரு தகவல் கடல் கடந்து, நாடு கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலம் மாறி தற்போது நொடிப் பொழுதில் சென்றடைந்து விடுகிறது. கரோனா ஊரடங்கால் தொழில் நுட்பத்தின் பயன்பாடு மேலும் இரட்டிப்பாகி விட்டது. ஆனால், பயனுள்ள தொலை தொடர்பு சாதனங்கள், செயலிகள், சமூக வலை தளங்களை தற்போது சிலர் தவறான நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கூட, நடிகர் சரத்குமார் பேசுவது போன்று போலி அழைப்புகள் விடுக்கப்பட்டது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வகை குற்றங்கள் ‘சைபர்’ குற்றங்கள். இதுபோன்ற குற்றங்கள் தற்போது அதிகரித்து வருவதாக போலீஸார் கவலை தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online...

மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம்

அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அதே பள்ளிகளில் தொடர வாய்ப்புள்ள 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“காத்துல பறந்துக்கிட்டு இருக்கேன்…” - ரஜினி பாராட்டால் மகிழும் துல்கர் பட இயக்குநர்!!

 நல்ல படங்கள் ஓடாமல் போவதும், கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் தமிழ் சினிமாவில் சகஜமாக நடக்கும் விசித்திரங்கள். மார்ச் மாதம் ஊரடங்கால் ஊரெல்லாம் தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்கள் வெளியான படங்களில் சில மட்டுமே அமோக வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் வருகிறது. படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டுப் பாராட்டியிருப்பதுதான் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்குக் கிடைத்த கொரோனா காலத்துக் கொடையாக மாறியிருக்கிறது. இதுபற்றி ட்விட்டரில் மிகுந்த உற்சாகத்துடன் எழுதியுள்ள பெரியசாமி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை அங்கீகரித்துள்ளதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாராட்டுவதால்தான் ரஜினிகாந்த் சந்திரனுக்கு மேலே இருக்கிறார் என்றும் நெகிழ்ந்துள்ளார்.   என்ன சொன்னார் சூப்பர்ஸ்டார். “சூப்பர்ர்ர்… அற்புதம்… ஹாஹாஹா… உண்மையில் நான் பழைய. காலத்துக்குப் போய்விட்டேன். வாழ்த்துகள். பெரிய எதிர்காலம் உங்களுக்கு” என்று வாழ்த்தியுள்ளார். பாராட்டு மழையில் நனைந்த இயக்குநர் பெரியசாமி, “காலையில் இரு...

இனி தனியார் நிறுவனங்களும் ராக்கெட்டுகளை செலுத்தலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன், புதிய தலைமுறையுடன் பகிர்ந்துகொண்ட தகவலில் “ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் ராக்கெட்டுகளை இனிமேல் தனியார் நிறுவனங்கள் விண்ணில் செலுத்தலாம். இதற்காக தொழில்நுட்ப உதவிகள் இஸ்ரோ சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். அண்மையில் விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த தகவலை சிவன் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

’சூரியன் பிரகாசிக்கும் என்பதை எப்போதும் நம்புங்கள்’ - அபிஷேக்பச்சன் வெளியிட்ட புகைப்படம்!!

அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் பச்சன், ஆராத்யா அனைவருமே கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். திங்களன்று ஐஸ்வர்யாராயும், மகள் ஆராத்யாவும் வீடு திரும்பிய நிலையில், அபிஷேக்பச்சன் சிகிச்சை பெற்று வருகிறார்.  அமிதாப், தன் கொரோனாகால தனிமை அனுபவங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் எழுதிவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். யாருடைய முகத்தையும் பார்க்காமல் ஒரு வாரம் இருப்பது கடினம் என்று தெரிவித்திருந்தார். மருத்துவனையின் தனிமையைப்போக்க இரவில் பாடிக்கொண்டிருப்பதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அபிஷேக்பச்சனும் மருத்துவமனை அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் சூரிய அஸ்தமனக் காட்சியின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மருத்துவனை அறையின் ஜன்னலில் இருந்து இந்தப் படத்தை  எடுத்துள்ளார். “சூரியன் பிரகாசிக்கும் என்பதை எப்போதும் நம்புங்கள். எப்போதும்” என்று அந்தப் படத்தை வெளியிட்டு அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.     View this post on Instagram Alw...