Skip to main content

Posts

Showing posts from August, 2020

169 நாட்களுக்கு பிறகு இன்று வணிக வளாகங்கள் திறப்பு

தமிழகத்தில் கரோனா தொற்றுபரவியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளை ஏற்று செப்டம்பர் 1-ம் தேதி முதல் வணிக வளாகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 169 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படும் நிலையில்,வளாக நிர்வாகத்தினர் நேற்றே முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினிதெளிக்கும் பணிகள், குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள், அடிக்கடி தொடும் இடங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள், கடைகளில் உள்ள பொருட்களை தயார்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தேவையான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர் களின் உடல் வெப்ப நிலைபரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபின்னர் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிவதையும் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Onl...

பத்து லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை... அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த எண்ணிக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதினைந்து லட்சமாக உயரக்கூடும் எனவும் கல்வி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, விதிமுறைகளுடன் ஆகஸ்ட் 17 ம் தேதியன்று 1,6,9 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக ஆகஸ்ட 24ம் தேதி பிளஸ் ஒன் வகுப்புகளுக்கும் தொடங்கப்பட்டது. மார்ச் முதல் ஊரடங்கும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்வதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நெருக்கடியான நிலையிலும், முழுமையான கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டிவருகின்றனர். மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் இருநாள்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ?

கமல்ஹாசன் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தப் படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அவர் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், கொரோனா சூழலில் அது தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதால், தற்போது கமல்ஹாசனே நாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கும் வகையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, தேர்தலுக்கு முன்பாக அந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வகையிலும் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

'ரெய்னாவுக்கு சென்னை அணி ஆதரவு உண்டு'-சிஎஸ்கே நிர்வாகம் !

சுரேஷ் ரெய்னா குறித்த என்.சீனிவாசனின் கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது. ஐபிஎல் மிகவும் நெருங்கிவிட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்ச்சை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணி நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ‌சூப்பர் கிங்ஸ் அணி பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரு குடும்பமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா துன்பம் நிறைந்த கட்டத்தில் உள்ள நிலையில் அவருக்கு அணி முழு ஆதரவாக இருக்கிறது என ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்காக எனக் கூறி, ஐபிஎல் தொடரிலிருந்து விலகி திடீரென நாடு திரும்பிவிட்டார். துபாயில் தான் விரும்பிய அறை கொடுக்கப்படாததால் கோபித்துக்கொண்டார் என்றும் எனவேதான் வெளியேறிவிட்டார் என்றும் தகவல் வெளியானது. "These boys, they’re family. They’ve been family for over a decade now...The franchise will always stand by him and he has our complete support during these times of distress." Mr N Srinivasan speaks ou...

சிஎஸ்கே அணிக்கு சென்னையில் இருந்து பரவியதா கொரோனா ?

ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில் இருந்து கொரோனா பரவியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் எதையும் முதல் அணியாக தொடங்குவது சிஎஸ்கேவின் வழக்கம். கொரோனா அச்சத்தால் நடப்பு சீசனுக்காக எந்த அணியும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் 5 நாட்கள் பயிற்சியை மேற்கொண்டனர். பயிற்சியை முடித்துக்கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சிஎஸ்கேவுக்கு, சிக்கலாக வந்தது கொடிய கொரோனா. இதர அணிகள் எல்லாம் அமீரகத்தில் ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டன. ஆனால் சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஹோட்டல் அறைகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர் சிஎஸ்கே வீரர்கள். துபாய் புறப்படும் முன்பு, கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த சென்னையில் சிஎஸ்கே அணியினர் பயிற்சி செய்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து சென்ற ஒரு சில நாளில் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இங்கு ஒன்றுகூடி பயிற்சி மேற்கொண்டபோது தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுந்து...

ராட்சத பட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

தைவானின் வடகிழக்கு நகரான ஹிசின்ஸுவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பட்டம் விடும் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதில், தைவான் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அதன்படி, ஹிசின்ஸுவில் நேற்று முன்தினம் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று விதவிதமான ராட்சத பட்டங்களை பறக்கவிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக, ஒரு ராட்சத பட்டத்தின் வால் பகுதியில் 3 வயது சிறுமி சிக்கிக் கொண்டாள். சுமார் 100 அடி உயரத்துக்கு சிறுமி இழுத்துச் செல்லப்பட்டாள். அதைப் பார்த்து சிறுமியின் பெற்றோரும், பார்வையாளர்களும் பயத்தில் அலறினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்களின் ஊடுருவல் முறியடிப்பு; லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம்: பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை

லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக லடாக் எல்லை யில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. ராணுவ தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரி ழந்ததாக தகவல் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் அமலுக்கு வந்த கட்டண உயர்வு !

தமிழகம்‌ முழுவதும் 21 இடங்களில் சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடி‌கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 21 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு‌ 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, கரூர் மாவட்டம் வேலஞ்செட்டியூர், மணவாசி, தருமபுரி மாவட்டம் பாளையம், விருதுநகர் மாவட்டம் புதூர் பாண்டியாபுரம்,‌‌ மதுரை மாவட்டம் எலியார்பத்தி, நாமக்கல் மாவட்டம் ராசம்பாளையம், விஜயமங்கலம், சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம், திருப்பராயத்துறை, பொன்னம்பலப்பட்டி, தஞ்சை மாவட்டம் வாழவந்தான்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி,‌ வீரசோழபுரம்‌, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் புதிய கட்ட‌ணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கூடுதலாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய்...

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது!

சென்னையில் 161 நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் 100 சதவீத போக்குவரத்து ஊழியர்களுடன் 3 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்று கூறியுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பழனி முருகன் தரிசனத்திற்கு இணையத்தில் முன் பதிவு !

பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய இணையத்தில் முன் பதிவு செய்‌வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சீட்டு இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் படி வழியாக மட்டுமே மலை ஏற முடியும் என்றும் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கரதம், அன்னதானம் போன்ற வழக்கமான நிகழ்வுகளும் நிறுத்திவை‌க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித் துறை நடவடிக்கை

பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.12,250 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.12,250 கோடியே 50 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி வலியுறுத்திள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் பெறப்பட்ட பொதுமக்களின் புகார்கள் குறித்து தெரிவிக்க காவல் ஆணையர் அறிவுறுத்தல்

வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் விவரங்கள் குறித்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என துணை ஆணையர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். கரோனா பரவலையடுத்து பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகம் வந்து நேரில் புகார் அளிக்க வேண்டிய தேவை இல்லை. பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு (வாட்ஸ்-அப் வீடியோ கால்) வழியாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நண்பகல் 12 முதல் 1 மணி வரை தன்னிடம் (63691 00100) தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருநின்றவூரில் மகன் இறந்தது தெரியாமல் 3 நாட்களாக சடலத்துடன் இருந்த மனநிலை பாதித்த தாய்

திருநின்றவூர், சி.டி.எச். சாலைபகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(35). மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கணவரைப் பிரிந்து கடந்த7 ஆண்டுகளாக மகன் சாமுவேலுடன்(7) தனியாக வசித்து வந்தார். சாமுவேல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை சரஸ்வதி, காவல் துறையின் அவசரஉதவி எண்ணை தொடர்பு கொண்டு, தன் மகனின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார். திருநின்றவூர் போலீஸார் உடனே அங்கு சென்று பார்த்தபோது, சாமுவேல் இறந்து 3நாட்கள் ஆனதும், மகன் இறந்ததுகூட தெரியாமல் சரஸ்வதி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து,போலீஸார் இறந்த சாமுவேலுவின்உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,000 கோடி சலுகை அல்ல; உரிமை: தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.12 ஆயிரம் கோடி, சலுகை அல்ல உரிமை என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று திறந்து வைத்த பின்னர், அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சென்னை புறநகர் சாலைகளில் போலீஸார் குவிப்பு

தென் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகன நெரிசலை சமாளிக்க சென்னை புறநகர் சாலைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தில் இன்று (செப். 1) முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு இடையே சென்று வரலாம், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன்இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன; நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: பக்தர்கள் தரிசனம் செய்ய டோக்கன் முறையைப் பின்பற்ற அறிவுறுத்தல்

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் நிலையில், நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாவட்டங்களுக்குள் இயக்கவே அனுமதி: தொலைதூர பேருந்துகள் இயங்காது

கரோனா ஊரடங்கில் தமிழக அரசின் புதிய தளர்வுப்படி, இன்று(செப்.1) முதல் மாவட்டத்துக்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து சேவை வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை. அதன்படி, விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் இயக்க வேண்டிய 1,174 பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீரான உணவு முறை, போதிய உடற்பயிற்சியால் நோய்களை தடுக்கலாம்: ‘நலம் 2020’ ஆன்லைன் நிகழ்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ரோட்டரி மாவட்டம்-3000 இணைந்து நடத்திய ‘நலம் 2020’ எனும் ஆரோக்கியம் குறித்த ஆன்லைன் நிகழ்ச்சி கடந்த ஆக.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு மருத்துவர்கள் பங்கேற்று கருத்துரையாடினர். இந்த ஆன்லைன் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர்டி.ராஜ்குமார் கடந்த 28-ம் தேதி தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம்-3000 புதுக்கோட்டை ஆளுநர் சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டு வேஷ்டி சில்க் சட்டையுடன் நாய்க்குட்டிகள்..கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஓணம் புகைப்படம்

வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ஓணம் விழா கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு, சமூகவலைதளத்தில் மற்ற நடிகைகளைப் போலவே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். குடும்ப உறுப்பினர்களுடன் உள்ள படங்களுக்கு "முதலில் குடும்பம்" என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவரது பாட்டி சரோஜாவும் இருக்கிறார். அவர் 'தாதா 87' படத்தில் சாருஹாசனுடன் சேர்ந்து நடித்தவர். தலை வாழை இலையில் பரிமாறப்பட்ட ஓணம் சிறப்பு விருந்தின் படங்களுக்கு "அடுத்து உணவு..." என்று பதிவிட்டுள்ளார். அடுத்து அனைவரையும் கவரக்கூடிய ஒரு புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் வளர்க்கும் நாய்க்குட்டிகள் பட்டு வேஷ்டியும் சில்க் சட்டையும் அணிந்து குதூகலத்துடன் காட்சி தருகின்றன. "என் நாய்க்குட்டிகளிடம் இருந்தும் என்னிடமிருந்தும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஓணம்..." என்றும் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள மூன்று ஓணம் பதிவுகளுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimura...

மும்பை சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற அதானி குழுமம் ஒப்பந்தம்

மும்பை விமான நிலையத்தில் 74 சதவீத பங்கை அதானி குழுமம் வாங்குகிறது. மேலும் புதிதாக வரவுள்ள நவி மும்பை விமான நிலையமும் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. மும்பை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ஜிவிகே குழுமத்திடம் இருந்து 50.5 சதவீத பங்கையும், தென் ஆப்பிரிக்க ஏர்போர்ட் கம்பெனியிடம் 10 சதவீதமும், தென் ஆப்பிரிக்க பிட்வெஸ்ட் நிறுவனத்திடம் 13.5 சதவீதமும் பங்குகளைக் கைப்பற்றுகிறது அதானி குழுமம். இதன்மூலம் மும்பை விமான நிலையம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜிவிகே குழுமமும், அதானி குழுமமும் நேற்று கையெழுத்திட்டன. மீதமுள்ள 26 சதவீத பங்குகள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) வசம் இருக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம் : உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். ரிஷபம் : இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவடையும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

01-09-2020 செவ்வாய்க்கிழமை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது

சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கிவந்த அகஸ்தியா திரையரங்கம் நாளையுடன் (செப்.1ம் தேதி) நிரந்தரமாக மூடப்படுகிறது. கடந்த 1967-ம் ஆண்டு திறக்கப்பட்ட அகஸ்தியா திரையரங்கில் முதல் திரைப்படமாக ‘பாமா விஜயம்’ திரையிடப்பட்டது. வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், 1,004 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய திரையரங்காகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொடரும் எல்லைப் பிரச்னை.. தென் சீனக் கடலுக்கு போர்க்கப்பலை அனுப்பிய இந்தியா..!

கடந்த ஜூன் மாதத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பிரச்னை காரணமாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்தியக் கடற்படை தென் சீனக் கடல் பகுதிக்கு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது கூட இந்திய கடற்படை, தென்  சீனக்கடல் பகுதியில் போர்க்கப்பலை  நிலைநிறுத்துவது தொடர்பதாக தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது சீனா. கடந்த  2009 முதலே இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலைகளை சீன கடலோர எல்லை பகுதியில் நிறுத்துவதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.  கடல் மூலமாக  இந்தியாவுக்கு  எந்தவித  அச்சுறுத்தலும்  ஏற்படக் கூடாது என்பதை கண்காணிப்பதற்காக போர்க்கப்பலை தென் சீனக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளதாக அரசாங்க வாட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை தனது போர்க்கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.  நீர் மூழ்கி  கப்பல்கள் மற்றும் ஆளில்லா தானியங்கி முறை கப்பல்களையும் கொண்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அ...

தோனியுடன் பிரச்னையா, வெற்றி தலைக்கேறியதா ? ரெய்னா குறித்து சீனிவாசன் !

சிஎஸ்கே நிர்வாகத்தினருடனும், தோனியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா சொந்தக் காரணங்களுக்காக இந்தியா திரும்பியதாக இரு நாள்களுக்கு முன்பு சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது. மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா விளையாடமாட்டார் என்றும் தெரிவித்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பதான்கோட்டில் மர்ம நபர்களால் தன் அத்தையின் குடும்பம் தாக்கப்பட்டதாலும் மாமா இறந்ததாலும் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்காகக்தான் ரெய்னா இந்தியா திரும்பியதாக சிஎஸ்கேவும் பிசிசிஐயும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் "தி அவுட்லுக்" பத்திரிகை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ரெய்னாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்பே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது. சுரேஷ் ரெய்னா ஆகஸ்ட் 21 ஆம் தேதி துபாயில் இறங்கியதில் இருந்து நிர்வாகத்துடன் பிரச்னை ...