Skip to main content

Posts

Showing posts from October, 2020

கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் நோய்த் தொற்று 15 மடங்கு குறைந்துள்ளது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

கரோனா தடுப்பு பணிகளோடு சேர்த்து தொற்று நோய்களையும் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதால், மழைக் காலத்தில் பரவும் டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 15 மடங்கு குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்ற நேர்மையான அதிகாரிகளால் முடியவில்லை: காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி நெ.1 டோல்கேட்டில் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்ட பிறகே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தாமதத்துக்கான காரணத்தை ஆளுநரும், முதல்வரும் விளக்க வேண்டும். அதேபோல, நீதியரசர் கலையரசன் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில், மாநில அரசு 7.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்தது ஏன்?. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னாபிஷேகம் எளிமையான முறையில் நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று 100 மூட்டை பச்சரிசியால் கோயில் வளாகத்திலேயே சாதம் சமைத்து பதிமூன்றரை அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு அபிஷேக ஆராதனை நடத்தப்படுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை: சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35 சதவீதம் குறைந்தது

தீபாவளி பண்டிகைக்கு எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35 சதவீதம் குறைந்துள்ளது. சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உப தொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுவைக்கு பேருந்துகள் இயக்க அனுமதி: இ-பதிவு முறையை ரத்து செய்தது தமிழக அரசு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் - புதுச்சேரி இடையே இ-பதிவு இல்லாமல் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருந்ததாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயம்பேடு சந்தையில் சற்றும் குறையாத காய்கறி விலை: பெரும்பாலானவை கிலோ ரூ.20-க்கு மேல் விற்பனை

கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறையாமல் உயர்ந்தே நீடித்து வருகிறது. எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.20-க்கு மேல் விற்பனையாகி வருகின்றன. திருமழிசையில் காய்கறி சந்தை தற்காலிகமாக இயங்கி வந்ததால், அங்கு இருப்பு வைக்க போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக காய்கறிகள் அளவோடு வரவழைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால் காய்கறி விலை உயர்ந்திருந்தது. கூடுதல் நேரம் செலவிட்டு, கூடுதல் தூரம் பயணித்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி வந்ததால், அவர்களும் விலையை ஏற்றி விற்றனர். இதனால் காய்கறி செலவு பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இதற்கிடையே காய்கறி சந்தை கோயம்பேட்டில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், அங்கு காய்கறிகளின் விலை குறையவில்லை. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.20 மேல் விற்பனை செய்யப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மின்கம்பங்களை எடுக்காமல் மழைநீர் வடிகால்: அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, 18-வது வார்டில்வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிறிய மழைக்கே இங்குள்ள பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும். போதிய வடிகால் வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் அவதிப்பட்டு வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராயப்பேட்டை மருத்துவமனையில் ஆதரவற்ற மூதாட்டிக்கு சிகிச்சை: மனிதநேயத்துடன் செயல்பட்ட ஊழியர்கள்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மூதாட்டியை அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த ஊழியர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்குள் உள்ள சிடி ஸ்கேன் எடுக்கும் அறைக்கு எதிரே நேற்று முன்தினம் இரவு 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இரு கால்களிலும் ரத்த காயங்களுடன் படுத்துக் கிடந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் விசாரித்ததில், அவர் ஆதரவற்றவர் என்பதும், தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரை ஆட்டோவில் அழைத்து வந்து மருத்துவமனையில் விட்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது: முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை

வேல் யாத்திரைக்கு தமிழக அரசுஅனுமதி அளிக்கக் கூடாது எனவிசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் திருமாவளவன் மீது அவதூறு பரப்புவதாக கூறி, விசிக சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கடம்பாடியில் உள்ள மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கடம்பாடியில் உள்ள திருவதீஸ்வரர் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. கடம்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு எண்ணூரில் தண்ணீர் செல்லும் பாதைகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் தண்ணீர் செல்லும் பாதைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை ஆட்சியர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர்கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை முன் னிட்டு, தண்ணீர் செல்லும் பாதைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரப் பகுதியில் ஆங்காங்கே உருவாகும் மணல் திட்டுக்களால் தண்ணீர் செல்லும் பாதை தடைபடுகிறது. எனவே,அப்பகுதியில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மணல் திட்டுகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72. மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை கூறியிருந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண் துறையில் முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவந்தவர் அமைச்சர் துரைக்கண்ணு என ஆளுநர் கூறியுள்ளார். துரைக்கண்ணுவின் மறைவு அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என ஆளுநர் இரங்கல் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

அமைச்சர் துரைக்கண்ணு படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை.!

அமைச்சர் துரைக்கண்ணு படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை கூறியிருந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. இந்நிலையில் அமைச்சரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்திய பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவரது மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என தெரிவித்தார்.   Source : WWW.PUTHIYATHALAIMURAI....

எம்ஜிஆர் காலத்தில் தொடங்கிய அரசியல் பயணம்... அமைச்சர் துரைக்கண்ணுவின் கதை.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72. அவரது அரசியல் பயணம் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கியது. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்தார். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க வில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் பதவி வகித்தார் அமைச்சர் துரைக்கண்ணு. 2006, 2011, 2016 என மூன்று முறை தொடர்ந்து அதிமுக சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். 2016ஆம் ஆண்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், நான்கு மகள்களும் உள்ளனர்...

வெற்றியுடன் நிறைவு செய்யுமா சிஎஸ்கே?.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை..!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் உடன் தனது கடைசிப் போட்டியில் சென்னை மோதுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறாமல் சென்னை அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில் கடைசிப் போட்டியில் வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த இரு ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பினால் சென்னை அபார வெற்றிப்பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது சென்னை அணி. இந்தப் போட்டியிலும் பஞ்சாபை வெற்றிப்பெற்றால் அந்த அணியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறாமல் போகும். பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் 6-ல் வெற்றி, 7-ல் தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு நடந்து சில ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைந்தால் பஞ்சாப்புக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். அந்த அணியில் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள். 13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என்...

RCB VS SRH : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின.  டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்தார்.   இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலிப்பும் பெங்களூரு அணிக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.    படிக்கல் 8 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கிளீன் போல்டானார். தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 7 ரன்களில் வெளியேற பவர் பிளே ஓவர் முடிவில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்.சி.பி. டிவில்லியர்ஸும், ஜோஷ் பிலிப்பும் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்ய முயன்றனர். இருப்பினும் அந்த முயற்சியில் தோல்வியை தழுவினர். டிவில்லியர்ஸ் 24 ரன்களிலும், பிலிப் 32 ரன்களிலும் வெளியேறினர். வாஷிங்க்டன் சுந்தர் தன் பங்கிற்கு 21 ரன்களை எடுத்தார்.  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை எடுத்தது பெங்களூரு.    ஹைதராபாத் அணிக்காக தமிழகத்தை சேர்ந்த நடரா...

விளையாட்டாய் சில கதைகள்: விளையாட்டால் கிடைத்த வீராங்கனை

கேரளாவின் பையோளி கிராமத்தில் உள்ள பள்ளியின் பி.டி. ஆசிரியரான பாலகிருஷ்ணன், ஒருநாள் மைதானத்தில் உலவிக்கொண்டு இருந்தார். தூரத்தில் 4-ம் வகுப்பு மாணவிகள் சிலர் ஓடிப்பிடித்து விளையாடுவதை எதேச்சையாக அவர் பார்த்துள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர், மற்றவர்களுக்கு போக்குக்காட்டி வேகமாக ஓடுவதைக் கண்டதும் அவரது கண்கள் மலர்ந்துள்ளன. மாணவியின் ஒல்லியான உடல்வாகும், ஓட்டத் திறமையும், கண்டிப்பாக அவரை ஒருநாள் உச்சத்துக்கு கொண்டுபோகும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த நாள் பள்ளியில் ஏற்கெனவே ஓட்ட வீராங்கனையாக திகழும் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் அந்த சிறுமிக்கு ஓட்டப்பந்தயம் வைத்துள்ளார். ஆசிரியரின் கணிப்பு வீண்போகவில்லை. பந்தயத்தில் 7-ம் வகுப்பு மாணவியை 4-ம் வகுப்பு மாணவி வீழ்த்தியுள்ளார். அந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர், அவரது பெற்றோரை சந்தித்து, மாணவிக்கு தான் பயிற்சி அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆரம் பத்தில் இதற்கு சம்மதிக்காத பெற்றோர், பின்னர் விளையாட்டின் மூலம் எதிர்காலத்தில் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசிரியர் கூறியதால், அதற்கு சம்மதித்த...

எம்ஜிஆர் காலத்தில் தொடங்கிய அரசியல் பயணம்... அமைச்சர் துரைக்கண்ணுவின் கதை.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72. அவரது அரசியல் பயணம் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கியது. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்தார். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க வில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் பதவி வகித்தார் அமைச்சர் துரைக்கண்ணு. 2006, 2011, 2016 என மூன்று முறை தொடர்ந்து அதிமுக சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். 2016ஆம் ஆண்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், நான்கு மகள்களும் உள்ளனர்...

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72. மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை கூறியிருந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண் துறையில் முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவந்தவர் அமைச்சர் துரைக்கண்ணு என ஆளுநர் கூறியுள்ளார். துரைக்கண்ணுவின் மறைவு அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என ஆளுநர் இரங்கல் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

ப்ளே ஆஃப் செல்லுமா?: போல்ட், பும்ரா பந்துவீ்ச்சில் சரிந்தது டெல்லி: தொடர்ந்து 4-வது தோல்வி: மும்பை முதலிடம்

போல்ட், பும்ராவின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்தது. 111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ்அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 111 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு

இலவச தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் டோக்கன் வாங்குவதில் நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பதி திருமலை கோயிலில் இலவச டோக்கன் மூலம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 5 நாட் களாக திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்காக முதல்நாள் இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: முக்கிய வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். செய்நன்றி மறந்த ஒருவரை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

01-11-2020 ஞாயிற்றுக்கிழமை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஆரோக்கிய சேது’ செயலி பற்றி பதில் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கரோனா தொற்று பரவலை கண்காணிக்க 'ஆரோக்கிய சேது' செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்தச் செயலியை உருவாக்கியது யார் என்ற ஆர்டிஐ கேள்விக்கு தங்களிடம் தகவல் இல்லை என தேசிய தகவல் மையம் (என்ஐசி) அண்மையில் கூறியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு என்ஐசி-க்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தொழில் மற்றும் கல்வித் துறை நிபுணர்களுடன் இணைந்து மிகவும் வெளிப்படையான முறையில் ஆரோக்கிய சேது செயலியை என்ஐசி உருவாக்கியது. இந்த செயலி குறித்தோ அல்லது கரோனா பரவல் கட்டுப்பாட்டில் இதன் பங்கு குறித்தோ எவ்வித சந்தேகமும் வேண்டாம்” என விளக்கம் அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது ஆந்திராவில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

திருமண விழாவுக்கு சென்று வீடு திரும்பும்போது மலையில் இருந்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், டாகூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், வெலுகுபண்டா கிராமத்தைச் சேர்ந்த மணப் பெண்ணுக்கும் நேற்று முன்தினம் இரவு, கோகவரம் தண்டிகொண்டா மலைப்பகுதியில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. அரசியலில் தீவிரம் காட்டும் பிரியங்கா: 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் பலன் தெரியும்

காங்கிரஸ் கட்சியினரின் பல ஆண்டு கால எதிர்பார்ப்புக்கு பிறகுபிரியங்கா, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீவிர அரசியலில் குதித்தார். பிரியங்கா வரவால் உ.பி.யில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறும் என கட்சியினர் நம்பிக்கை வைத்தனர். எனினும் அமேதியில் 3 முறை எம்.பி.யாகஇருந்த ராகுல் காந்தியே கடந்த மக்களவைத் தேர்தலில் தோற்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராத பிரியங்கா தொடர்ந்து உ.பி. அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசைகடுமையாக விமர்சித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த சகாயம் ஐ.ஏ.எஸ்..!

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ் விண்ணப்பித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ் சகாயம். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வருகிறார். அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விஆர்.எஸ் கேட்டுள்ளார். வி.ஆர்.எஸ்.க்கு விண்ணப்பித்த சகாயம் இன்னும் 2 மாதங்களில் அரசு பதவிவியிலிருந்து விடுவிக்கப்படுவார். முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் சகாயம் இந்த முடிவை எடுத்துள்ளார். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் விருப்ப ஓய்வை கேட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

ஆட்டோகிராஃப்களை அள்ளி வழங்கிய தோனி- தன்னை பவுல்டு ஆக்கிய வருணுக்கும் உண்டு

வருண் சக்ரவர்த்தி அன்று தோனியை பிரமாதமாகக் கட்டிப்போட்டு பிறகு ஸ்டம்பைப் பெயர்த்தார். இது இளம் பவுலர் வருணுக்கு மிகபெரிய கொண்டாட்டத் தருணம். ஆனால் இதை விடவும் கொண்டாட்டத்தருணம்தான் தோனி அவருக்கு சிலபல டிப்ஸ்களை வழங்கி ஆட்டோகிராப் போட்ட தருணம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ப்ளே ஆஃப் ரேஸில் ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ், சாம்ஸன் காட்டடி ஆட்டம்: சதத்தை தவறவிட்டாலும் சாதனை படைத்த கெயில்: பஞ்சாப் தோல்வி

ஸ்டோக்ஸின் மின்னல் வேக அரைசதம், சாம்ஸனின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

’கட்டுமானத்தை அதிகாரிகளே இடித்தனர்’ - மருத்துவக்கல்லூரி கட்டிடம் குறித்து பேசிய அமைச்சர்.!

நாமக்கல்லில் ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்திக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவர் கட்டி வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், கட்டுமானத்தை அதிகாரிகளே இடித்ததாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். நாமக்கல்லில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில், சத்தியமூர்த்தி அன் கோ என்ற நிறுவனம், 150 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கட்டி வருகிறது. கட்டடத்தின் நுழைவாயில் முகப்பு அமைக்க கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முகப்பில் இருந்த தூணும், முன்பகுதியும் இடிந்து சேதமுற்றதாகவும், இதில் வட மாநிலத் தொழிலாளர்கள் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். கட்டட விபத்து குறித்து வெளியான தகவலைத் தொடர்ந்து, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அங்கு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் “வெல்டிங் வ...

துருக்கி நிலநடுக்கம் - தற்போதைய நிலை என்ன?

துருக்கி நிலநடுக்கத்தில் சிதிலமடைந்த கட்டிடங்களில் சிக்கி 22 நபர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன   துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 20க்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்தன. அதே போல கிரீஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நகரத்தின் பல பகுதிகள் புகைமண்டலமாக காட்சி அளித்தது. நிலநடுக்கம் காரணமாக இஷ்மீர் மாகாணம் செஃபெரிஹிசர் மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்டது. அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமெரிக்காவின் புவியியல் மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி கிரீஸின் கார்லோவாசி பகுதியில் அதிகபட்சமாக 14 கிலோமீட்டருக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சிதிலமடைந்ததில், 22 நபர்கள் பலியானதாகவும் 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. போர்க் கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டு, மீட்பு பணிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM fro...