Skip to main content

Posts

Showing posts from November, 2020

முறைகேடு செய்யும் அரசு ஊழியரின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

முறைகேடு செய்யும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஊழலை தடுக்க முடியும் என உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பளூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திமுக விரைவில் போராட்டங்களை அறிவிக்கும்: உதயநிதி ஸ்டாலின் தகவல்

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற திமுக தேர்தல் பிரச்சாரபயணத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தை நேற்றுபார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனிமொழி கூட்டத்தில் ‘வெற்றிவேல், வீரவேல்' முழக்கம்

ஈரோட்டில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘வீரவேல் வெற்றிவேல்’ என முழக்கம் எழுப்பப் பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. கனிமொழி எம்.பி., ஈரோடு கவுந்தப்பாடியில் நேற்று காலை திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது, திமுக தொண்டர் ஒருவர் அவருக்கு வாள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பாஜகவின் வேல் யாத்திரையை நினைவுபடுத்துவது போல், ‘வெற்றிவேல் வீரவேல்’ என அவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி முனையை டிசம்பர் 3ம் தேதி அன்று நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

80 ஆண்டுகளாக ஒலித்த வயலின் கானம்!- இசை மேதை டி.என்.கிருஷ்ணனுக்கு நினைவஞ்சலி

வயலின் வாசிப்பில் தனது தனிப்பட்ட திறமையால் கர்னாடக இசை உலகில் ராஜபாட்டை அமைத்தவர் டி.என்.கிருஷ்ணன் அண்ணா. கர்னாடக இசை உலகில் பெருவாழ்வு வாழ்ந்த அவர், கடந்த நவ.2-ம் தேதி தனது 92-வது வயதில் காலமானார். 1950, 60-களின் தொடக்கத்தில் நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே, இசைத் துறையில் அவரது அன்பான வழிகாட்டுதல் எனக்கு கிடைத்தது. ஆலப்புழாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் என்னை பாடவைத்து மகிழ்வார். நான்பாடுவேன். பிரபல வித்வான் மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர் என் பாட்டிக்கு கொடுத்திருந்த வயலினை டிஎன்கே வாசிப்பார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா- 50% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு, அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் தொடர்பான நூல்கள், அகராதி, அரிய நூல்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி சென்னையில் இன்று போராட்டம் தொடக்கம்: முகக் கவசம் அணிந்து பங்கேற்க ராமதாஸ் வேண்டுகோள்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடக்கவுள்ள தொடர் போராட்டம், சென்னையில் இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று எழுதியுள்ள கடிதம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலியில் ராகுல் ஆலோசனை: அதிமுகவை வீழ்த்த கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுரை

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை வீழ்த்த காங்கிரஸார் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாழ்வு மண்டல நகர்வு தொடர்ந்து கண்காணிப்பு மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் உயர் அதிகாரிகளுடன் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தம்: புயல் எச்சரிக்கையால் குஜராத், மும்பையில் கரை சேர்ந்த மீனவர்கள்

வங்கக்கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அது, இன்று காலை புயலாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாராபுரம் முன்னாள் எம்எல்ஏ சிவகாமி வின்சென்ட் காலமானார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முன்னாள் எம்எல்ஏ சிவகாமி வின்சென்ட்(65) உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். பாமக சார்பில் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற சிவகாமி வின்சென்ட், பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். எனினும், 2006 தேர்தலில் அதிமுக சார்பில் அவருக்குப் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கவுன்டன்யா ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், குடியாத்தம் போடிப்பேட்டை கோபால் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், இவரது மனைவி நதியா(31). மகள்கள் நிவிதா(11), ஹர்ஷினி(8) ஆகியோர் கவுன்டன்யா ஆற்றின் கரையோரத்தில் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் வெள்ளநீரை பார்ப்பதற்காக நதியா, தனது 2 மகள்களுடன் கவுன்டன்யா ஆற்றங்கரையோரத்துக்கு சென்றுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவிகளின் படிப்பு செலவை ஏற்ற திமுக நிர்வாகி

அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவிகளின் எம்பிபிஎஸ் படிப்புக்கான முழு செலவையும் திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.அய்யாதுரைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டுள்ளார். மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகியுள்ள அரசு பள்ளிகளில் படித்த7 மாணவிகளின் 5 ஆண்டு படிப்புக்கான முழு செலவையும் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை - ஏ.வெங்டேஷ்குமார் நினைவு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், திமுக வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவருமான எஸ்.அய்யாத்துரைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 7 மாணவிகளின் எம்பிபிஎஸ் படிப்புக்கான முழுப் செலவையும் ஏற்பதாக அய்யாதுரைப் பாண்டியன் நேற்று அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் பெரும்பாலானோர் குணமடைந்ததால் கரோனா சிகிச்சைக்கான 25,000 படுக்கைகள் காலியாகின

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், கண்காணிப்பு மையங்களில் 25,000 படுக்கைகள் காலியாகஉள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 750 படுக்கைகளுடன் அரசு கரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களை சந்தித்தால்தான் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் தெரியும்: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

மக்களை சந்தித்தால்தான் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார். தென்சென்னை பகுதியில் தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகள், அடுத்த காலாண்டில் ஜிடிபி.யை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 சாலை மேம்பாலங்களைத் திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டிப் போட்டுக் கொண்டு கேரளாவில் இளம்பெண்களை களம் இறக்கும் அரசியல் கட்சிகள்

கேரளாவில் வரும் 8, 10, 14-ம் தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, இளைஞர் அமைப்பான டிஒய்எப்.யை சேர்ந்தோருக்கு அதிகளவில் வாய்ப்பு கிடைத்து வந்தது. இதனால் கேரளத்தில் அடுத்தடுத்த தலைமுறையில் மார்க்சிய சிந்தனையாளர்களும் உருவாகிக் கொண்டிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளும் அதிகளவில் இளம்பெண்களை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளன. அதனால், கேரளத்தில் சகல கட்சிகளும் அழகிப் போட்டி நடத்துவது போல் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இ...

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’ இழந்த ஆதரவற்ற இளைஞர்

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் சித்தாந்த் பத்ரா, வயது 18. அப்பா இல்லை. அம்மாவிடம் வளர்ந்து வந்தார். அவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதன்பின், ஆதரவற்ற நிலையில் இருந்து வருகிறார். எனினும், பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதினார். அதில், அகில இந்திய அளவில் 270-வது இடத்தைப் பிடித்தார். அதன்பின், பாம்பே ஐஐடி.யில் மின்சார பொறியியல் படிக்க பி.டெக் தேர்ந்தெடுத்தார். ஆனால், 2 வாரங்களில் அவருடைய ‘சீட்’ ரத்து செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவை ‘ஆடியோ' பாதித்தது ஏன்?- ஆர்டிஐ கேள்விக்கு மத்திய பொதுப் பணித் துறை விளக்கம்

‘‘மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதத்தின் போது, எம்.பி.க்கள் மைக்ரோபோன்களை சேதப்படுத்தியதால் ஆடியோ சேவை பாதிக்கப்பட்டது’’ என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) சட்டம், விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம் ஆகியவை மக்களவையில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜன்தன், பண பரிவர்த்தனையால் ஏடிஎம்.களின் பயன்பாடு அதிகரிப்பு

மத்திய அரசின் ஜன்தன் கணக்கு மற்றும் அரசின் நேரடி பண பரிமாற்றம் (டிபிடி) ஆகியவை காரணமாக கிராமப் பகுதிகளில் ஏடிஎம்.களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் இயங்கும் ஏடிஎம்.கள் கூட அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 2 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்ட ஏடிஎம்.கள் தற்போது 12 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2020 நிலவரப்படி டெபிட் கார்டு பயன்படுத்துவோர் 86 கோடியாகும். இவற்றில் பிரதமரின் ஜன்தன் கணக்குக்கு வழங்கப்பட்ட ரூபே கார்டுகளின் அளவு 35 சதவீதம். அதாவது 30 கோடி கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎம்ஏ நிதிநிறுவன மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்

ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமதுவை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஐஎம்ஏ நிதி நிறுவனம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. இவ்வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் முகமது மன்சூர்கான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை கைது செய்தனர். முன்னாள் ஐஜிபி ஹேமந்த் நிம்பல்கரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லைகளை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை; வேளாண் துறை அமைச்சருடன் அமித் ஷா அவசர ஆலோசனை: விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் ஸ்தம்பித்தது

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தலைநகரில் உள்ள 5 எல்லைகளை முற்றுகை யிட போவதாக எச்சரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களை சந்திக்காமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது; அரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை: ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களிடம் ரஜினிகாந்த் திட்டவட்டம்

மக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்றும் தற்போதைய சூழலில் அரசியலில் நுழைவது சரியாகப் பட வில்லை என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு டிச.31-ல் அரசிய லுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினி காந்த், புதிய கட்சி தொடங்கி 234 தொகுதி களிலும் தனித்துப் போட்டியிடுவோம் என் றார். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், ரஜினி கட்சி தொடங்குவது தாமதமாகி வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத்தை தொழில்வளம் மிக்க நகரமாக உருவாக்குவோம்: மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா வாக்குறுதி

நவாப்புகளின் நகரமாக உள்ள ஹைதராபாத்தை தொழில்வளம் மிக்க நகரமாக பாஜக மாற்றும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 150 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சியில் சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனது உருவத்தை வரைந்து அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் உள்ள பால்வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் அஜய் டேக். இவர் அண்மையில் பிரதமர் மோடியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்தார். அந்த ஓவியத்துடன் ஒரு கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பி வைத்தார். ஓவியத்தைப் பார்த்து வியந்த பிரதமர் மோடி சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “உங்களதுஓவியத் திறமை மிகவும் அபாரம்.கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய நாட்டைப் பற்றிய உங்கள்கருத்துகள் உங்கள் எண்ணங்களின் அழகை விளக்குகின்றன. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உங்களது படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் தொடர்புடைய பிரச்சினைகள்குறித்த விழிப்புணர்வை உங்கள்நண்பர்களிடம் ஏற்படுத்த திறமையைப் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நோட்டாவுக்கு அதிக வாக்கு கிடைத்தால் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் வழக்கு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கான சின்னங்களைப் போல நோட்டாவும் கடைசியில் இடம்பெற்றிருக்கும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வாக்காளர்கள் அனைவருக்குமான உரிமையே நோட்டாஎன்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கான பொத்தானை அழுத்தலாம். இதன் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று அர்த்தம் கொள்ளப்படும். அண்மையில் நடைபெற்ற பிஹார் பேரவைத் தேர்தலில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். பாஜக மூத்த தலைவரும் வழக்கறிருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனி அலுவலகம், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நியமனம்: ஐ.டி. நிறுவனங்கள் போல செயல்படும் அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகள்

சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்ப அணி மிகப் பெரிய சக்தியாக மாறியுள்ளது. இவை, ஐ.டி. நிறுவனங்களைபோல அலுவலகம், ஊழியர்களுடன் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிவேகமாக வளர்ந்து வரும்தொழில்நுட்பத்தால் இப்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்ப அணி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருக்கும்போதே தகவல் தொழில்நுட்பத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்த தொடங்கிவிட்டார். குஜராத்தில் அவரது தொடர் வெற்றிக்கும், பிரதமராக அவர் உயர்ந்ததற்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அடல் ஓய்வூதிய திட்டத்தில் 17.36 லட்சம் பேர் சேர்ப்பு

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 17.36 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அமைப்புசாரா துறைகளில் வேலை செய்பவர்களும் ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதற்காக ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 மே மாதம் அறிமுகப்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 17.36 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் ரூ.3.86 கோடி முறைகேடு; மோசடி வழக்கில் கைதானவர் பிரபல கார் பந்தய வீரர்: தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாக போலீஸார் தகவல்

போலி ஆவணங்கள் மூலம் வாகனக் கடன் பெற்று பல்வேறு வங்கிகளில் ரூ.3.86 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் பிரபல கார் பந்தய வீரர் என்பது தெரியவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மேலாளர் தில்லை கோவிந்தன், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். ‘சென்னையில் உள்ள பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் போலி ஆவணங்களை கொடுத்து, வாகனக் கடன்கள் மூலம் சொகுசு கார்களை பெற்று, வாகனக் கடனையும் செலுத்தாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கும்பலை கைது செய்ய வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட பூதேவி சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட உலோகத்தாலான பூதேவி சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஒன்றரை அடி உயர உலோகத்தாலான பூதேவி சிலை இருந்தது. சிலையின் சக்கரம், சிரசு ஆகிய பகுதிகள் அறுக்கப்பட்டிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்: அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம்

அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கு இடையே 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை மகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஏற்றி வைத்தனர். நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 20-ம் தேதி கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் தொடங்கியது. ஏகன் அநேகன் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்ளகரம் - புழுதிவாக்கம் பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா? - பொதுமக்கள் எழுப்பும் கேள்வியும் சந்தேகமும்

உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்து இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலஇடங்களில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இத்திட்டம் தோல்வியா என பொதுமக்கள் மத்தியில் கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது, சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் 168, 169 வார்டுகளுக்கு உட்பட்ட உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 2011-ம் ஆண்டு ரூ.34.01 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன. 2019-ம் ஆண்டு நிறைவுற்ற இத்திட்டத்துக்காக 79,524 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் கழிவுநீர் இணைப்பு பெற்று பயன்பெறும் வகையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் போராட்டம்: பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் என்ற போர்வையில் சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நிவர் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நொச்சிக்குப்பம், சைதாப்பேட்டை ஆரோக்கிய மாதா நகர் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பல்வேறு கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு

கார்த்திகை தீப திருநாளை ஒட்டி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் கச்சபேஸ்வரர், முக்தீஸ்வரர், கயிலாசநாதர், சத்யநாதஸ்வாமி, வழக்கறுத்தீஸ்வரர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகாதீப சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், குமரக்கோட்டம் உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

400 கனஅடி நீர் வீணாகக் கடலில் கலப்பு: செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை உடனடியாக சீரமைக்க துரைமுருகன் வலியுறுத்தல்

செம்பரம்பாக்கம் ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் மதகுகளை சரி செய்ய வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘நிவர்' புயலையொட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3-வது மதகுகளை மூடமுடியாமல் இப்போது 400 கனஅடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயர் கல்வி படித்து பணக்கார நாடுகளுக்கு இடம்பெயர்வோரில் இந்தியர்கள் முதலிடம்

உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படித்துவிட்டு பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்வோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். உலகில் உள்ள 32 நாடுகள் இணைந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பை (ஓஇசிடி) ஏற்படுத்தியுள்ளன. இந்த ஓஇசிடி நாடுகள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளாக உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லண்டன் அரண்மனைக்கு அடுத்ததாக மும்பையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘அன்டிலியா’ பங்களா புகைப்படம் வெளியிட்டார் முகேஷ் அம்பானி

மும்பை மாநகரின் முக்கிய அடையாளங்களில் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா பங்களாவும் ஒன்று. மிகவும் விலை மதிப்பு மிக்க தனியார் சொத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி. இந்த பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். தனது மனைவி நீட்டா மற்றும் 3 குழந்தைகள் ஆனந்த், ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோருடன் உள்ள புகைப்படங்களையும் அவர்வெளியிட்டுள்ளார். இஷா திருமணமாகி அவர் கணவர் ஆனந்த் பிரமளுடன் வோர்லி பங்களாவில் தற்போது வசிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக: பாஜகவின் எழுச்சியால் மாறும் தமிழக அரசியல் களம்

பாஜகவின் எழுச்சியால் தமிழகஅரசியல் களம் மாறத் தொடங்கியுள்ளது. ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை போக்கும் முயற்சியில் திமுகவினர் களமிறங்கி உள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தி வருகிறது. 1 முதல் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுவந்த ஹரியாணா, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் இயக்கப்படும் 13 சிறப்பு ரயில்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு 70% நிறைவு

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு 70 சதவீதம் முடிந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2021-ம்ஆண்டு ஜன.14 முதல் 17-ம் தேதிவரை 4 நாட்கள் பொங்கல் விடுமுறை வருகிறது. இதையொட்டி சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, ஜன.12, 13-ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்கள் பெரும்பாலும் விற்றுவிட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை: அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு

ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவுகளை ரஜினி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். அதையடுத்து, மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை, ரசிகர்களை சந்திப்பது என அடுத்தடுத்து அரசியல் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலாற்றில் உதயம்பாக்கம் - படாளம் இடையே ரூ.270 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக்கு ஒப்புதல்: விரைவில் முதல்கட்ட பணிகள் தொடங்கும் என தகவல்

உதயம்பாக்கம் - படாளம் இடையே பாலாற்றில் ரூ.270 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் பாலாறு கீழ் வடி நிலக் கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பாலாற்றில் 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதன்படி வாயலூர், வள்ளிபுரம் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை காய்கறி கடைகள் திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு விற்பனையை தொடங்கினர்

கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்கு பிறகு சில்லறை விற்பனை காய்கறி கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கோயம்பேடு சந்தையில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அங்குள்ள சில்லறை காய்கறி மற்றும் பழக் கடைகள் மூடப்பட்டன. மொத்த காய்கறி மற்றும் பழக்கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. கரோனா மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து மே 5-ம்தேதி சந்தை வளாகம் முழுவதும் மூடப்பட்டது. காய்கறி சந்தை திருமழிசைக்கும், பழச் சந்தை மாதவரம் பேருந்து நிலையத்துக்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை புறநகரில் பெய்த கனமழையால் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் 50 சதவீதம் நீர் நிறைந்தது: தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு இணையாக மாற்ற மக்கள் கோரிக்கை

சென்னை புறநகரில் பெய்த கனமழையால் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் 50 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு இணையாக இதை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகருக்கு மாதம் ஒரு டிஎம்சி நீர் தேவை. தற்போது சென்னைக்கு முக்கிய நீராதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இதில் நீர் ஆவியாதல் போன்ற சிக்கல்களும் உள்ளன. அதனால் சென்னை மாநகரின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் நீர்த்தேக்கங்கள் தேவை. இதன் காரணமாகவே திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ரூ.380 கோடியில் கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரை டிஎம்சி (500 மில்லியன் கன அடி) நீரை சேமிக்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.15 கோடியில் சீரமைக்கப்பட்ட பல்லாவரம் ஏரியில் மீண்டும் கழிவுநீர் கலப்பு

பல்லாவரம் பெரிய ஏரியை, உலக வங்கி நிதியுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தும்கூட, அதில் மீண்டும் கழிவுநீர் கலப்பதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையால் 2 பகுதிகளாக பிரிந்து கிடக்கும் பல்லாவரம் பெரிய ஏரியின் ஒருபகுதியில், நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்த இந்த ஏரி உலக வங்கி நிதி ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் துார்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி, கருங்கற்கள் பதித்து, மதகு அமைத்து, கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் அமித் ஷா வேண்டுகோளை ஏற்க மறுப்பு: பேச்சுவார்த்தைக்கு அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவை நியமிக்க வலியுறுத்தல்

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள விவசாய சங்கங்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவைநியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் இயற்றியது. இந்த சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், முழுக்க முழுக்க பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, விளைபொருட்களுக்கான ஆதார விலை நிறுத்தப்படும் என அச்சம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு மறுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.9.35 கோடி சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஒடிசா ஐஎப்எஸ் அதிகாரி அபே காந்த் பதக் சஸ்பெண்ட்

சொத்துக்குவிப்பு வழக்கில் தனது மகனுடன் கைது செய்யப்பட்ட ஐஎப்எஸ் (இந்திய வனப் பணி) அதிகாரி அபே காந்த் பதக்கை ஒடிசா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசா அரசில் கூடுதல் முதன்மைதலைமை வனப் பாதுகாவலர் (ஏபிசிசிஎப்) ஆக இருந்தவர் அபேகாந்த் பதக். 1987-ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக அபே காந்த் பதக்மற்றும் அவருக்கு நெருக்கமானவர் களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் நிவர் புயலால் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

ஆந்திராவில் நிவர் புயலால் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திராவில் நிவர் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சித்தூர், கடப்பா மற்றும் நெல்லூர் மாவட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் அவர் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் ஆட்சியர்கள், வருவாய், பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சி, வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கி அதிகாரிகள் போல போனில் பேசி பணம் திருடும் கும்பலை பிடிப்பதில் சிரமம்: சைபர் கிரைம் போலீஸார் விளக்கம்

வங்கி அதிகாரிகள் போல பேசி, பணத்தை கொள்ளையடிக்கும் நபர்களை கண்டுபிடிப்பது மிகவும்சிரமமான செயல் என்று சைபர்கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். வங்கியில் இருந்து மேலாளர்பேசுவதாகக் கூறி, டெபிட் மற்றும்கிரெடிட் கார்டு விவரத்தைப் பெற்று,பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றன. இவ்வாறு 100 புகார்கள் பதிவானால்அதில் 2 பேருக்கு மட்டுமே பணம்திரும்ப கிடைக்கிறது. பாதிக்கப்படும் பலர் அலைக்கழிப்புக்கு ஆளாகி சோர்ந்து விடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இந்து தமிழ் திசை’ - ‘ஓம் சாந்தி’ நடத்தும் கார்த்திகை தீப அலங்கார போட்டி

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் பரிசுத்தமான பூஜை பொருட்கள் தயாரிக்கும் ‘ஓம் சாந்தி’ நிறுவனமும் இணைந்து கார்த்திகை தீப அலங்காரப் போட்டியை நடத்துகின்றன. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அனைவரும் வீடுகளில் தீபங்களையேற்றி அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இதனால் சாந்தியும் மன அமைதியும் கிடைக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்