Skip to main content

Posts

Showing posts from January, 2022

கனவில் கடவுள் கிருஷ்ணர் வருவதாக அகிலேஷ் சிங் பேச்சு; தூங்குபவர்களுக்குதான் கனவு வரும்: காணொலி மூலம் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: ‘‘உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். ஆனால், பழிவாங்கும் அரசியலில் சமாஜ்வாதி ஈடுபடுகிறது’’ என்று பிரதமர் மோடி காணொலி மூலம் முதல் முறையாக பிரச்சாரம் செய்தார். உ.பி.யின் மிக முக்கியமான மேற்குப் பகுதிகளில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் நேற்று காணொலி காட்சி மூலம் முதல் முறையாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். உ.பி.யின் ஷாம்லி, முசாபர்நகர், பக்பத், சகாரன்பூர், கவுதம புத்தர் நகர் ஆகிய பகுதி வாக்காளர்களிடம் பிரதமர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய காவலர் சஸ்பெண்ட்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள‌ எஸ்.ஜே.பார்க் போக்குவரத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் நாராயணா. கடந்த 24‍-ம் தேதி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மஞ்சுளா என்ற மாற்று திறனாளியின் 3 சக்கர வாகனத்துக்கு அபராதம் விதித்து வேனில் ஏற்ற முயற்சித்தார். அப்போது மஞ்சுளாவின் வாகன கண்ணாடி உடைந்ததால் உதவி ஆய்வாளர் நாராயணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நாராயணா தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் மஞ்சுளா அவர் மீது மண்ணை அள்ளி வீசியுள்ளார். இதனால் நாரா யணா மஞ்சுளாவை பூட்ஸ் காலால் உதைத்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா மாநிலத்தில் நடைபாதையில் சிறுவன் காரை ஏற்றியதால் 4 பெண்கள் உயிரிழப்பு: தந்தை உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு

கரீம்நகர்: தெலங்கானாவில் 16 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் ஏற்றியதில் அங்கு அமர்ந்திருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய சிறுவன், அவனது 2 நண்பர்கள், கார் கொடுத்த தந்தை என 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பைக்கில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி காரில் வைத்திருந்த ரூ.43 லட்சம் கொள்ளை: சினிமா பாணியில் தெலங்கானாவில் சம்பவம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சித்திப் பேட்டாவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நரசய்யா, தனக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரை சேர்ந்த அரசு ஆசிரியர் தர் ரெட்டி என்பவருக்கு ரூ. 64.24 லட்சத்திற்கு விற்க ஒப்பந்தம் நடந்தது. நேற்று காலை இரு தரப்பினரும் தனித்தனியாக காரில் சித்திப் பேட்டா பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, தர் ரெட்டி ரூ. 43.50 லட்சத்தை, நிலம் விற்கும் நரசய்யாவிற்கு கொடுத்தார். அந்த பணத்தை அவர் தனது காரின் பின் இருக்கையில் வைத்து, பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கார் ஓட்டுநர் பரசுராமிடம் கூறிவிட்டு, பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது பைக்கில் முகக் கவசம் அணிந்து வேகமாக வந்த இருவர், கார் கண்ணாடியை உடைத்து, பணப்பையை எடுக்க முயன்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யின் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவை எதிர்த்து மத்திய அமைச்சர் போட்டி

லக்னோ: உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு வரும் 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மெயின்புரி மக்களவைத் தொகுதி யின் கீழ் வரும் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், திடீர் திருப்ப மாக பாஜக சார்பில் அகிலேஷை எதிர்த்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்பி சிங் பாகெல் போட்டியிடுகிறார். கடைசி நேரத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்; 2022-23 நிதி ஆண்டில் 8.5% வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி விகிதம் வரும் நிதி ஆண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் நிதி ஆண்டில் இதைவிட குறைவான வளர்ச்சியே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் டாக தாக்கல் செய்யப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்

இம்பால்: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கி உள்ளது. மியான்மர் எல்லையில் உள்ளது மணிப்பூர் மாநிலம். மலைகள் நிறைந்த இந்த மாநிலம் சமீபத்தில்தான் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடித்தது. இம்மாநிலத்துக்கு கடந்த 6-ம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அசாம் மாநிலம் சில்சர் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடியை பாராட்டியதால் எழுத்தாளர் ரஸ்கினுக்கு எதிர்ப்பு

புதுடெல்லி: நாட்டின் மூத்த ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (87). பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளரான இவர் பல்வேறு நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்தியாவின் ஆங்கில, குழந்தைகளுக்கான எழுத்தாளர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார். ரஸ்கின் பாண்டின் தந்தை ஆப்ரே அலெக்சாண்டர் பாண்டே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானப் படையில் பணியாற்றினார். கடந்த 1934-ம் ஆண்டு மே 19-ம் தேதி உத்தராகாண்டின் முசோரியில் பிறந்த ரஸ்கின், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். பிறந்த மண்ணை தாய் மண்ணாகக் கருதிய அவர், நாட்டைவிட்டு வெளியேறவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உள்ளிட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் நைரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓரிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உள்ளூர் கமாண்டராக செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி ஜாகித் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், உள்ளூர்வாசிகளான வாஹித் ரஷீத், இனாயதுல்லா மிர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி கபீல் ஆகியோர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்; ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் - ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: ஊழலற்ற இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டு மக்களுடன் 85-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் மாஃபியாக்கள் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர், மீரட், காஜியாபாத், ஹர்பூர், கவுதம புத்தர் நகர், புலந்த்ஷாகர், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காஜியாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறும்போது, “முந்தைய உத்தரபிரதேச அரசு (அகிலேஷ் யாதவ் அரசு) காஜியாபாத்தில் ஹஜ் இல்லம் கட்டியது. ஆனால் பாஜக அரசு காஜியாபாத்தில் ரூ.94 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கைலாஷ் மானசரோவர் பவனை கட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவா சட்டப்பேரவைத் தேர்தல்- 12 கத்தோலிக்க வேட்பாளரை களமிறக்கியது பாஜக

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக 12 கத்தோலிக்க வேட்பாளர்களை பாஜக களமிறக்கி உள்ளது. கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதி களுக்கு, பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் கோவாவில் முதல் முறையாக 12 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாதி, மதத்தை வைத்து பாஜக, சமாஜ்வாதி பிரச்சாரம்: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புகார்

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட் சியை தக்க வைக்க பாஜக.வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதியும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பாஜக, சமாஜ்வாதி மீது பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்வரும் பகுஜன் தலைவரு மான மாயாவதி கூறும்போது, ‘‘உ.பி. தேர்தலில் சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்படுகிறது. இந்த செய்தி களே பத்திரிகைகளிலும், ஊட கங்களிலும் நிறைந்துள்ளன. இந்து - முஸ்லிம் மோதலை உருவாக்குவதுடன், சாதி பிரி வினையும் பாஜக, சமாஜ் வாதி பிரச்சாரங்களில் முன்னிறுத்தப் படுகிறது. இந்த விஷயத்தில் உ.பி.வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை; பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

எதிர்வரும் நிதி ஆண்டுக்கான (2022-23) பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன 31) தொடங்குகிறது. தொடக்க நாளன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.4,847.78 கோடி... நாட்டிலேயே பாஜகவின் சொத்து மதிப்புதான் அதிகம்; தமிழகத்தில் அதிமுகவுக்கே முதலிடம்

புதுடெல்லி: நாட்டிலேயே பாஜகவின் சொத்து மதிப்பு தான் அதிகம் எனத் தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம், அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டன. பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தாமாகவே அளித்த தகவல்களை கொண்டு ஆய்வு செய்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 2019-20 நிதியாண்டில், பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.4,847.78 கோடி என்றளவில் உள்ளது. அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698.33 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளது. நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ், ரூ.588.16 கோடி சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுபான்மை பற்றி ஹமீது அன்சாரி பேச்சு: அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: அண்மையில் இந்திய - அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் சார்பில் நடைபெற்ற காணொலி வழி குழு விவாதக் கூட்டத்தில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றார். அவர் பேசும் போது, “நாட்டில் அதிகரித்து வரும் ‘இந்து தேசியவாதம்’ என்ற போக்கு கவலை அளிக்கிறது. குடிமக்களை வேறுபடுத்தி பார்ப்பது, சகிப்புத் தன்மையின்மை மற்றும் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தி நடைபெறும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: 2014-க்கு முன்பு நாட்டில் அடிக்கடி வகுப்புக் கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் சாதாரணமாக நிகழ்ந்து வந்தன. ஆனால் தற்போது நாடு அந்தச் சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக உள்ளது. ஓரிரண்டு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அது தனிப்பட்ட நிலையிலும் சமூகத்தின் நிலையிலும் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சீரிய தலைமையில் நாடு அமைதியான நிலையில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Ta...

நாட்டின் அதிக வயதான வேட்பாளர் பாதல்

சண்டிகர்: சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், நாட்டின் அதிக வயதான வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கும் சிரோமணி அகாலிதளத்துக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அகாலி தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், கட்சியின் லம்பி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது 94 வயதாகிறது. கடந்த 2016-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய 92-வது வயதில் போட்டியிட்டார். இதன்மூலம் நாட்டின் அதிக வயதான மூத்த வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. தற்போது அகாலி தள மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தன்னுடைய 94-வது வயதில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரு கோடி பேருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி: மத்திய சுகாதார துறை அமைச்சர் பெருமிதம்

புதுடெல்லி: ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு கடந்த 10-ம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், சுகாதார, முன்கள ஊழியர்களுக்கு 3-ம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலி தரிசன டிக்கெட்டு வழங்கி ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்த பின்னரே சாதாரண பக்தர்கள் தரிசிக்கும் நடைமுறை உள்ளது. இதனை அறியாமல் பக்தர்கள் பலர் நேரடியாக திருப்பதிக்கு வந்து விடுகின்றனர். அவர்கள், ரயில், பஸ் நிலையம் மற்றும் தங்கும் விடுதிகளின் அருகே சுற்றித் திரியும் இடைத்தரகர்களை அணுகி, தரிசன டிக்கெட்டுக்காக பணத்தை கொடுத்து ஏமாறு கின்றனர். கடந்த 27-ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த சி.சுப்ரமணியம் மற்றும் அவரது நண்பர் 2 பேர் ரூ. 300ஆன்லைன் டிக்கெட்டுடன் வைகுண்ட காம்ப்ளக்ஸுக்குள் சென்றனர். அப்போது டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது, அது போலி என்று தெரிய வந்தது. யாருடைய டிக்கெட்டையோ, ஊர், பெயர், ஆதார் எண்ணை மாற்றி இவர்களுக்கு கொடுத்தது தெரிய வந்தது. அதன் பின்னர் சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தியதில், தரிசன டிக்கெட் இல்லாமல் வந்ததாகவும், பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மவுன குமார் மற்றும் அவரது நண்பர் சவுந்தர் ஆகிய இருவரும் தரிசன டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்து ரூ.8,000 பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த இடைத்தரகர்களை தேடி வருகின்றனர். from இ...

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வுகளை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது: வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அரசுப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினருக்கான பதவி உயர்வை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. இது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஜர்னைல் சிங், நாகராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேர்தலை தள்ளிவைக்க 55% பேர் ஆதரவு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 5 மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு சார்பில் 5 மாநிலங்களிலும் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 55 சதவீதம் பேர் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்று 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 4 சதவீதம் பேர் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது டெல்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‘‘டெல்லி நகரில் கரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு 10 சதவீதத்துக்கு கீழ் உள்ளது’’ என்று தெரிவித்தார். கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊர டங்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா நிலவரம் குறித்து ஆளுநர் அனில் பைஜால் மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இடையே நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனினும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா, மத்திய ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா, மத்திய ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியமாகும். இதன்மூலம் பிராந்திய பாதுகாப்பு, வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்தார். அப்போது முதல் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானுடனான உறவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ரத சக்கரம் எரிப்பு

சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் அடுத்துள்ள புகழ்பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்தரதத்தின் சக்கரங்கள் பழுதாகின. அந்த சக்கரங்களை கழற்றி கோசாலை அருகே பாதுகாப்பாக வைத்திருந்தனர். மர்ம நபர்கள் சிலர் புதன்கிழமை நள்ளிரவு ரதத்தின் சக்கரங்களை எரித்துவிட்டுதப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சிலமாதங்களுக்கு முன்னர், அந்தர்வேதி பகுதியில் உள்ள  லட்சுமி நரசிம்மர் கோயிலின் ரதத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனை தொடர்ந்து, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொண்ட பிட்ரகுண்டா பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் ரதத்தையும் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். பிரசித்தி பெற்ற விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலின் ரதத்தில் இருந்த 3 வெள்ளி சிங்கங்கள் திருடப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செப்.10-ல் ஆசிய விளையாட்டு போட்டி: சீனாவில் தொடங்குகிறது

மும்பை: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்.10 முதல் 25-ம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுகளான நீச்சல், வில்வித்தை, தடகளம், பூப்பந்து, குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, ஹாக்கி, ஜூடோ, கபடி உள்ளிட்ட 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஈ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரேக்டான்சிங்கிற்கு இந்த ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதால் இவை பதக்க விளையாட்டுகளாக அறிமுகமாகிறது. மேலும், பார்வையாளர்களின் உற்சாகத்தை உயர்த்தும் வகையில் 11 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்