Skip to main content

Posts

Showing posts from July, 2024

டெல்லியில் கனமழை: நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர்

புதுடெல்லி: டெல்லியில் இன்று பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. மேலும் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பழைய ராஜிந்தர் நகர் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் தண்ணீர் முட்டியளவு தேங்கி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயநாடு நிலச்சரிவுக்கு ‘காலநிலை மாற்றம்’ மட்டும் காரணம் அல்ல... ஏன்? | HTT Explainer

வயநாட்டில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட வரலாறு காணாத நிலச்சரிவுக்கு வைக்கப்படும் முதன்மையான காரணம் என்பது காலநிலை மாற்றமாக இருந்தாலும், அந்த மாற்றம் நிகழக் காரணமான வேர்களை அறிந்து, அதற்கேற்ப அரசு கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய தருணம் உணர்த்தப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, அருகி வரும் வனப்பரப்பு ஆகியன வயநாடு வரலாறு காணாத நிலச்சரிவுக்கு சரியான காரணமாக அமைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல. இதனை உறுதிப்படுத்த நிறைய தரவுகளும் இருக்கின்றன. எச்சரித்த இஸ்ரோ ஆய்வறிக்கை: இஸ்ரோ கடந்த ஆண்டு வெளியிட்ட நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் அடங்கிய வரைபடத்தில், “இந்தியாவில் உள்ள 30 நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளில் 10 கேரளாவில் உள்ளன. 30 இடங்களில் கேரளாவின் வயநாடு 13-வது இடத்தில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கொங்கன் மலைப் பகுதியில் 0.09 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு, அதாவது தமிழகம், கேரள, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளடக்கிய பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை. குறிப...

கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் சுட்டுக் கொலை: டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கோகுல்புரி பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதியம் 3.15 மணி அளவில் இந்த பயங்கர செயல் அரங்கேறியுள்ளது. ஹீரா சிங் என்பவர் தனது மனைவி சிம்ரன்ஜித் கவுர் உடன் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கோகுல்புரி பாலத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனமும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டது இதற்கு காரணம் என தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக் கட்டியது பாஜக” - மக்களவையில் சு.வெங்கடேசன் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய ரயில்வே மீதான வரவு செலவு அறிக்கை மீது இன்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், ரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக் கட்டிய பெருமை பாஜகவையே சேரும் என்று மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதுகுறித்து மதுரை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன் மக்களவை யில் பேசியது: “ஒரு காலத்தில் ரயில்வேக்கு என்று இருந்த பட்ஜெட் இன்று இல்லை. அரசாங்கங்கள் பட்ஜெட்டில் சில துறைகளுக்கான நிதியை ஒழித்துக்கட்டும். ஆனால், ஒரு பட்ஜெட்டையே ஒழித்துக் கட்டிய பெருமை பாஜகவையே சாரும். நான் எனக்காக மட்டும் கேட்கவில்லை. மத்திய அமைச்சருக்காகவும் சேர்த்துக் கேட்கிறேன். ஜூலை 18-ல் துவங்கி ஜூலை 30 வரை, 13 நாட்களில் 9 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. ஆனால் பொது பட்ஜெட்டில் கவச் எந்திரம் பற்றிய ஒரு சொல் கூட இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும். ரிஷபம்: பழைய பிரச்சினைகள் மனதை வாட்டும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் தொடரும் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ 

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 371 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட 55 சதவீதம் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்ஜெட் மூலமாக நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்திவிட்டது பாஜக: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்திவிட்டது என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. மக்களவையில் பட்ஜெட் தொடர்பான தனது கருத்துகளை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனக்குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறை வேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளி வடைவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. ரிஷபம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத் தில் பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ள வும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு; விசாரணை குழு அமைப்பு

புதுடெல்லி: திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள இந்த விசாரணை குழு, 30 நாட்களுக்குள் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, நடவடிக்கைகள் மற்றும் கொள்கை மாற்றங்களை பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு திட்டங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும்: பாஜக முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அரசின் நலத்திட்டங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும் என பாஜக முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு, முதல் முறையாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்றுநடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உடல் சோர்வு, வயிற்று பிரச்சினை வந்து நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப் பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் வெள்ளம் புகுந்ததில், நீரில் மூழ்கி 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு டெல்லி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பயிற்சிமையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில்,ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ளது. இங்கு, கேரளா,உத்தர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: மாநில அரசுகள் மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் மாற்றம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி மழை: யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ளம் - 2 மாணவிகள் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை கனமழை பொழிந்தது. இந்நிலையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார். சனிக்கிழமை மாலை டெல்லியில் பரவலாக மழை பதிவானது. இந்த சூழலில் 7 மணி அளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் நீர் தேங்கியது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 

திராஸ்: கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஒருபோதும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. அரசியலைவிட நம் நாட்டின் நலன் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். கடந்த 1999-ம் ஆண்டு தொடக்கத்தில் காஷ்மீரின் லடாக் பிராந்தியம், கார்கில் மலைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் அத்துமீறி ஊடுருவினர். அவர்களது நடமாட்டத்தை அப்பகுதி கிராம மக்கள் கண்காணித்து இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, 1999 மே முதல் ஜூலை வரை கார்கில் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் போர் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவம் வெற்றிவாகை சூடியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அம்மாநிலம் தனது தலைநகரை கட்டமைக்கவும், பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் ஆதரவு தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: “அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,” என்று திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு, “சீனாவில் இருந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டு இருக்கிறதா? மற்ற பொருட்களை எவ்வளவு மதிப்புக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்? எந்த நாட்டிலிருந்தும் இதையெல்லாம் இறக்குமதி செய்யக்கூடாது என்று தடை செய்யப்பட்ட பொருட்கள் உண்டா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் செல்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகை என்பது வரி அல்ல. அது குத்தகை கட்டணம்தான் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழக அரசுக்கு அந்த நிறுவனம் ராயல்டி (உரிமைத் தொகை) வழங்கியது. ஆனால், அத்துடன் சேர்த்து தமிழக அரசு ‘செஸ்’ வரியும் விதித்தது. இதையடுத்து, ‘சுரங்கங்கள், கனிம நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, தமிழகஅரசு விதித்த வரியை திரும்ப பெற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட கனிம நிலத்தை பயன்படுத்த வரி விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Lat...

நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

புதுடெல்லி: பாரபட்சமான, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான மத்திய பட்ஜெட்டை கண்டித்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார். இதில், ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி, பிஹாருக்கு ரூ.26 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் உள்ளது. அதேபோல, பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே, இது கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை 2025-ல் பயன்பாட்டுக்கு வருவதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் வெளியிட்ட தகவல்: 261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 61.74% அளவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும். இந்தத் திட்டம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை – பெங்களூரு இடையேயான பயணத் தொலைவு மற்றும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வருமான வரி புதிய விகிதத்தில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை: மூத்த ஆடிட்டர்கள் தகவல்

புதுடெல்லி: தனிநபர் வருமான வரி முறையில் பழைய வரி விகிதத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சமாக நீடிக்கிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 % வரி, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20% வரி, ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% வரி என்ற விகித முறை அப்படியே தொடர்கிறது. புதிய வரி விகிதம்: த ற்போதைய நடைமுறையின் படி புதிய வரி விகிதத்தில் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9லட்சம் வரை 10% வரி, ரூ.9லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்” - பட்ஜெட் குறித்து எஸ்பிஐ தலைவர் பாராட்டு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது: “பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் மூலம் வங்கிகள் பலனடையும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் கிராமப் புறங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அபராதம் கட்ட முடியாமல் சிறையில் வாடும் ஏழைக் கைதிகளுக்கு உதவி: மத்திய பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: தங்களது தவறுக்கான தண்டணைக் காலம் முடிந்தும், அபராதம் கட்ட முடியாமல் பல ஏழைக் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். இதுபோன்றவர்களுக்கு உதவ மத்திய அரசு ரூ.20 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு உள்ளாவதும் வழக்கமாக உள்ளது. இதற்கான நீதிமன்ற வழக்குகளின் போது அக்கைதிகளுக்கு நீதிபதிகள் தண்டனை அளிப்பதுடன் குறிப்பிட்ட தொகைகளை அபராதங்களாகவும் விதிப்பது உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம்: பாஜக வரவேற்பு; காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் கடந்த 9-ம் தேதி பிறப்பித்த அலுவலக குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். முக்கிய பிரமுகர்கள் உதவுவர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் அமையும். ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தீர்மானம்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

பெங்களூரு: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை இன்று (ஜூலை 22) கூடியது. இந்த அமைச்சரவையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிரான இந்த மசோதாவில், நீட் தேர்வுக்கு பதில் பொது நுழைவுத் தேர்வின் (CET) அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். புதிய அரசில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

22.07.2024 குரோதி 6 ஆடி திங்கள்கிழமை திதி: பிரதமை மதியம் 1.12 மணி வரை, பிறகு துவிதியை. நட்சத்திரம்: திருவோணம் இரவு 10.19 வரை, பிறகு அவிட்டம். நாமயோகம்: பிரிதி மாலை 5.54 வரை, பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: கௌலவம் மதியம் 1.12 வரை, பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: அமிர்தயோகம் இரவு 10.19 வரை, பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52 அஸ்தமனம்: மாலை 6.38 ராகு காலம் காலை 7.30-9.00 எமகண்டம் காலை 10.30-12.00 குளிகை மதியம் 1.30-3.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3 சந்திராஷ்டமம் புனர்பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து, அமைதி திரும் பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது உத்திகளை கையாள்வீர்கள். ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இந்திய அரசியலில் மிகப்பெரிய ஊழல்வாதி சரத் பவார்” - அமித் ஷா @ புனே

புனே: எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று புனேவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியை கடுமையாக அவர் விமர்சித்தார். சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் ராகுல் காந்தியை அவர் விமர்சித்தார். “1993 குண்டுவெடிப்புக்கு கருணை கோரியவர்களுடன் உத்தவ் தாக்கரே இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியை தழுவிய பிறகும் அதை கொண்டாடுவதை முதல் முறையாக நான் பார்க்கிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண் கமலா புஜாரி காலமானார்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் பத்ராபுத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கமலா புஜாரி (76). இயற்கைவழி வேளாண்மையை ஊக்குவித்து வந்த இவர், 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வந்தார். இவருடைய இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், காய்ச்சல் மற்றும்வயது மூப்பு காரணமாக கோராபுட் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, கட்டாக் நகரில் உள்ளஎஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலையில் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

21.07.2024 குரோதி 5 ஆடி ஞாயிற்றுக்கிழமை திதி: பௌர்ணமி பிற்பகல் 3.47 வரை. பிறகு தேய்பிறை பிரதமை. நட்சத்திரம்: உத்திராடம் இரவு 12.12 வரை. பிறகு திருவோணம். நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 9.07 வரை. பிறகு பிரிதி. நாமகரணம்: பவம் பிற்பகல் 3.47 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51. அஸ்தமனம்: மாலை 6.38. ராகு காலம் மாலை 4.30-6.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 4,7 சந்திராஷ்டமம் திருவாதிரை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நகரங்கள், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களின் முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாவோயிஸ்ட்டுகள் பற்றி தகவல் அளித்தவருக்கு ரூ.86 லட்சம் பரிசு

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் ‘மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்த தேடப்படும் மாவோயிஸ்ட்டுகள் 12 பேரை கடந்த புதன்கிழமை என்கவுன்ட்டரில் கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட கமாண்டோ பிரிவினருக்கு ரூ.51 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் மறையும். பிள்ளை களால் பெருமை அடைவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபமுண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். ரிஷபம்: மனதுக்குள் குழப்பம் இருப்பதால் எந்த வேலை யையும் முடிக்க முடியாமல் திணருவீர்கள். வியாபாரத் தில் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை நாளை வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நாளை மதியம் 12 மணிக்குள் இணையதளத்தில் நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை வெளியிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 22-ம் தேதி நடைபெற உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். நீட் தேர்வை ரத்துசெய்ய கூடாது என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ திட்டம்!

புதுடெல்லி: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்தியாவில் உள்ள பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ என்ற திட்டத்தை நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக்காட்டுவீர். தம்பதி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். மதிப்பு உயரும். ரிஷபம்: எடுத்த வேலையை போராடி முடிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு: எதிர்ப்பால் மசோதா நிறுத்திவைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய‌ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கர்நாடக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை ‘நிறுத்திவைத்தது’ கர்நாடக அரசு!

பெங்களூரு: பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளின் எதிரொலியாக, கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவை நிறைவேற்றும் முடிவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. விரிவாக ஆலோசிக்கப்பட்ட பிறகு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்: மணல் கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: மணல் கடத்தல் தொடர்பான மனுவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் அளிக்கத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுகள் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் அத்துமீறி நிகழ்ந்து வருவதாகக் கடந்த 2018-ம் ஆண்டில் மனுதாரர் அழகிரிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் உதவியாளர் வழக்கறிஞர் பிரணவ் சச்தேவ் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத்திரங்களாக மாறும் கோயில் தங்க நகைகள்: தெலங்கானா அரசு முடிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். தங்கத்தை மும்பை மிண்ட் பகுதியில் உருக்கி, அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதற்கு தகுந்த பத்திரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பது என மாநில இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றமுண்டு. ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவுக்காக மார்பில் குண்டை ஏற்றுக் கொண்டார் ட்ரம்ப்: இடதுசாரிகளை விமர்சித்த கங்கனா ரனாவத்

புதுடெல்லி: குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவுக்காக மார்பில் துப்பாக்கி குண்டை ஏற்றுக் கொண்டார் என்று பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் நூலிழையில் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பாக பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

16.07.2024 குரோதி 32 ஆனி செவ்வாய்க்கிழமை திதி: தசமி இரவு 8.34 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: விசாகம் நள்ளிரவு 2.11 வரை. பிறகு அனுஷம். நாமயோகம்: சாத்தியம் காலை 7.14 வரை. பிறகு சுபம். நாமகரணம்: தைதுலம் காலை 8.02 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00 யோகம்: மந்தயோகம் நள்ளிரவு 2.11 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50. அஸ்தமனம்: மாலை 6.39 ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 5, 9 சந்திராஷ்டமம் அஸ்வினி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். வெளி வட்டாரத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் ஓர ளவு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டுவார். ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரரீதியான பயணம் ஆதாயம் தரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்