Skip to main content

Posts

Showing posts from May, 2025

ஜோதிட நாள்காட்டி 01.06.2025 | வைகாசி 18 - விசுவாவசு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

போபால் : இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளை முன்னிட்டு 'மகிளா சக்திகரன் மகா சம்மேளனம்' என்ற பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நமது அப்பாவி மக்களை ரத்தம் மட்டும் சிந்த வைக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்தனர். இந்த சவாலே தீவிரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அழிவாக மாறிவிட்டது. அவர்கள் தொடர்ந்த தாக்குதலால், தங்களுக்கு தாங்களே சாவுமணி அடித்துக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். ரிஷபம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 17 பெண்கள் முதல் முறையாக பட்டம் பெற்றனர்

புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக, என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் 75 ஆண்டுகால செயல்பாட்டில் முதல்முறையாக 17 பெண்கள் பட்டம்பெற்று சாதனை படைத்துள்ளனர். என்டிஏ-வில் கடுமையான பயிற்சிகளைப் பெற்று ஆண்கள் மட்டுமே பட்டங்களைப் பெற்றுவந்தனர். இந்த நிலையில், பெண்களையும் அந்த அகாடமியில் அனுமதிக்க கோரி கடந்த 2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, யுபிஐஎஸ்சி தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயில்வதற்கு முதல் முறையாக பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொழிலதிபரிடம் ரூ.5 கோடி லஞ்சம்: அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்தது சிபிஐ

ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் தேன்கனலை சேர்ந்தவர் ரதிகாந்த ரூட். இவர் சுரங்கம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னிடம் லஞ்சம் கேட்பதாக கூறி சிபிஐ-யிடம் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) 2025 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தெளிவான முடிவு எடுப்பீர். அடுக்கடுக்காக இருந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களை எடுத்து முடிப்பீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். ரிஷபம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பழைய வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆபரேஷன் சிந்தூர் ‘லோகோ' வடிவமைத்த ராணுவ அதிகாரிகள்

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்ததது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்கள் துல்லிய தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டன. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கான லோகோவை இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு

காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே உள்ள கே. கங்கவரம் மண்டலம், ஷெரிலங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த செவ்வாய் கிழமை பலர் கலந்து கொண்டனர். மதிய உணவுக்கு பின்னர், இதில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த காக்கிநாடா, மந்தவேடு, போலாவரம் பகுதிகளை சேர்ந்த 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் அதே பகுதியில் உள்ள கவுதமி கோதாவரி ஆற்றில் நீச்சல் பழக சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறியுள்ளது. தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜவஹர்லால் நேரு 61-வது நினைவு தினம்: ராகுல் காந்தி புகழஞ்சலி

புதுடெல்லி: ‘‘சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு’’ என அவரது 61-வது நினைவு தினத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அவர் இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்தார். அவரது 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழில​திபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன. கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,...

“ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெறுக” - சந்திரபாபு நாயுடு

கடப்பா: “ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்” என தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டுக் கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். . மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது பிரதமர் மோடி வசம் தேசத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது ரூ.500, ரூ.1,000 மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தனது பேச்சில் அவர் குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். காவல் துறையின் பரிந்துரையின் பேரில் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீஸாரின் பிஆர்ஓ, “மைனர் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லை. அவரும் அவரது தந்தையும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளோம். இதனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

ஆபரேஷன் சிந்தூரால் இந்தியர்களின் தலைநிமிர்ந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 122-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? - முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, பிஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 25.05.2025 | வைகாசி 11 - விசுவாவசு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பெண்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்களை இந்த அமைப்பு வரையறுக்கிறது. இதன் தலைவராக பிரதமர் பதவி வகிக்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர், துணைத் தலைவராக செயல்படுவார். உலக வங்கியில் 28 ஆண்டுகள் பணியாற்றிய சுமன் பெரி தற்போது நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 24.05.2025 | வைகாசி 10 - விசுவாவசு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரேவந்த் ரெட்டி, சிவகுமார் ரூ.3 கோடி நன்கொடை: நேஷனல் ஹெரால்டு குற்றப் பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: யங் இந்தியா நிறுவனத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ரூ.3 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளனர் என்று நேஷனல் ஹெரால்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1937-ம் ஆண்டு நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னஸ்ல் லிமிடெட் நிறுவனம் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இந்த பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டில் மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம்: பாஜக அறிவிப்புக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படங்கள் விரைவில் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனக் கூறினார். இதற்கான முடிவுகடந்த மே 21-ல் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பொது நோக்கக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த மூன்று படங்களில் இடம்பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவத்தினருக்கான வீரதீர விருது: குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்

புதுடெல்லி: நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று விருதுகளை வழங்கினார். பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 26 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு சவுரியா சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறியுள்ளது: உச்ச நீதிமன்றம் கண்டனம் - முழு விவரம்

புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியதன்மூலம் கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு அமலாக்க துறை இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. டாஸ்மாக் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக கூறி, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர். பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் தூதரக 2-வது அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் நடைபெற்றது. இந்நிலையில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை கடந்த 13-ல் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் 24 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. அவர் தனது அந்தஸ்துக்கு ஏற்ற பணியில் ஈடுபடாமல் பிற பணிகளில் ஈடுபட்டதால், அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாக். தூதரக அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகையை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் முக்கிய தலைவர் பசவராஜ் உட்பட 27 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நரயன்பூரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் உட்பட 30 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டாலு மலையில் ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட் என்ற பெயரில் 21 நாட்கள் மிகப் பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி

கொல்கத்தா: வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு பர்ஹாம்பூர் எம்.பி. யூசுப் பதானுக்கு பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் ஜா உள்ளிட்ட 7 பேரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து 

புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது’’ என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார்,கே.வி.விஸ்வாதன் அமர்வு விசாரித்து வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் 'யாத்ரி டாக்டர்' பாகிஸ்தான் உளவாளியா? - உளவு துறை தீவிர விசாரணை

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் 'யாத்ரி டாக்டரின்' பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் முதல் விஸ்டாடோம் ஜங்கிள் சபாரி ரயில்பெட்டி உத்தர பிரதேச அரசு அறிமுகம்

லக்னோ: உத்தரபிரதேச அரசு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தை துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் நாட்டின் முதல் விஸ்டாடோம் ரயில்பெட்டி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி ரயில் வழியாக ஒரு தனித்துவமான ஜங்கிள் (காட்டு) சபாரி அனுபவத்தை வழங்குவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: புகழ், கௌரவம் உயரும். பணவரவு உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உத்தியோகம் சிறக்கும். ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்

ஹைதராபாத்: தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அதி​காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைத​ரா​பாத்​தில் புகழ்​பெற்ற சார்​மி​னார் அருகே குல்​சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்​படு​கிறது. இந்த வளாகத்​தின் தரைதளத்​தில் நகைக் கடைகளும், மேல்​தளங்​களில் வீடு​களும் உள்​ளன. இங்கு நேற்று அதி​காலை 4 மணி அளவில் மின் கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 18.05.2025 | வைகாசி 4 - விசுவாவசு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு பயணம்: முழு விவரம்

புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர். காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்​திய கொடூர தாக்குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்கு நேரடி தொடர்பு இருப்​பது தெரியவந்த​து. இதையடுத்​து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு இந்​தியா பதிலடி கொடுத்​தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிர​வா​தி​கள் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்திய படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது!

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் தேசம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதே போல அண்டை நாடுகளான சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான் வீடியோக்களும் அடங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார். ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக ஏழுமலையானை சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். ரிஷபம்: புதியவர்கள் நண்பர்களாவர். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்: இந்திய ராணுவம்

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட 2 ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி, ராணுவ மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூன் 8-ல் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். உத்தர பிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா (40). இந்திய விமானப்படை விமானியான அவர், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அவர் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்த சூழலில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன?

புதுடெல்லி: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் பாதுகாப்பு குறித்து மோடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்