Skip to main content

Posts

Showing posts from November, 2022

இந்திய ஒற்றுமை யாத்திரை | ராகுலுடன் நடந்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இன்று காலை உஜ்ஜைனில் அவர் மேற்கொண்ட யாத்திரையின்போது உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர். இன்று யாத்திரையின் 83வது நாளாகும். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியகுமாரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை உஜ்ஜைன் நகரில் யாத்திரையில் ஈடுபட்ட அவருடன் உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்

புனே: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும். இந்தக் கப்பலுடன் போர் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில் (என்டிஏ) 143-வது குழு பயிற்சியை முடித்துள்ளது. பயிற்சி முடித்தவர்களை கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை: 100 பாரம்பரிய சின்னங்கள் மின்னொளியில் ஜொலிக்கும்

புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை தாங்குவதை முன்னிட்டு, நாடு முழுவதும் சுமார் 100 பாரம்பரிய சின்னங்கள், ஜி-20 அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஜொலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதிஅரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள், ஜி-20 அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்: 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி | இரண்டு மணி நேரம் நடந்த உடல் கூறு ஆய்வு: தந்தங்கள் எடுத்து லட்சுமி யானை அடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி - மணக்குள விநாயகர் கோயிலிருந்து உயிரிழந்த லட்சுமி யானையின் இறுதி யாத்திரை மதியம் தொடங்கியது. நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை வழியாக அடக்கம் செய்யும் வனத்துறை பின்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் உடன் வந்தனர். யாத்திரையின் போது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து கால்நடை பேராசிரியர் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் 18 பேர் உடற்கூறு அறுவைக்கான சாதனங்களுடன் வந்தனர். அதைத்தொடர்ந்து யானை லட்சுமிக்கு உடல் கூறு பரிசோதனை இரண்டு மணி நேரம் நடந்தது. அப்போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டது. அதில் 50 மூட்டைகள் உப்பு, விபூதி உள்ளிட்டவை தெளிக்கப்பட்டன. நிகழ்வுகள் அனைத்தும் இரவு 8 மணி அளவில் நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் அளித்தால், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுனில் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 2019-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் குறைபாடு குறித்து பலர் புகார் அளிக்கின்றனர். விசாரணையில், அவர்களது புகார் பொய் என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 49எம்ஏ-படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, புகார்தாரருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி | மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள்

புதுச்சேரி: ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு 100 தலையா இருக்கு? - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு 100 தலையா இருக்கு?’’ என கிண்டலாக கூறினார். குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் மனித குலத்துக்கு நீடிக்கும் அச்சுறுத்தல்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து

புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அறிஞர்களின் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்றனர். இதில் தீவிரவாதத்தை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியை ராவணன் உடன் ஒப்பிட்ட கார்கேவுக்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராமாயணத்தில் வரும் ராவணன் உடன் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்துவிட்டது’ பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு உள்ள பணிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அவர் எப்போதும் தேர்தல் பிரச்சாரத்திலேயே இருப்பதாக கார்கே விமர்சித்தார். அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அவர் பிரச்சாரத்திற்கு வந்துவிடுகிறார் என கார்கே குற்றம்சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, ...

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பற்றி சர்ச்சைக் கருத்து: கோவா திரை விழா தேர்வுக்குழு தலைவருக்கு இஸ்ரேல் தூதர் கண்டிப்பு

புதுடெல்லி: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைபடத்தை பிரச்சார நெடி கொண்ட படம் என விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வுக்குழு தலைவரும் தன் சக நாட்டவருமான நடாவ் லேபிடுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடாவ் லேபிடுக்கு ஒரு திறந்த மடல். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மீது அவர் முன்வைத்த விமர்சனத்தை ஒட்டி இதை எழுதுகிறேன். இதனை எனது இந்திய சகோதரர்கள், சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஹீப்ரூவில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். அந்தக் கடிதம் சற்று நீளமானது. அதனால் ஒரு வரியில் அதனை விளக்குகிறேன். நடாவ் நீங்கள் வெட்கப்பட வேண்டும். இந்திய கலாசாரத்தில் விருந்தினரை கடவுளுடன் ஒப்பிடுவர். ஆனால் அதனை நீங்கள் எவ்வளவு மோசமாக சிதைக்க முடியுமோ அவ்வளவு மோசமாக சிதைத்துள்ளீர்கள். உங்களை கோவை சர்வதேச திரைப்பட திருவிழாவின் தேர்வுக் குழு தலைவராக அழைத்துள்ளார்கள். அவர்கள் உங்களுக்கு அளித்த மரியாதையை, அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளீர்கள் என்று...

அசாம் மாநில பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மாடியில் இருந்து குதித்த மாணவன்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ரூகர் பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. இங்கு விடுதியில் தங்கிப் படித்து வந்த வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் ஆனந்த் சர்மாவை, சீனியர் மாணவர்கள் நேற்று ராகிங் செய்துள்ளனர். அவர்களின் ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க, பல்கலைக்கழகத்தின் 2-வது மாடியில் இருந்து ஆனந்த் சர்மா கீழே குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவரை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். இதுகுறித்து மாணவரின் தாய் சரிதா சர்மா போலீஸில் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம்: மத்திய அரசு பின்பற்ற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு (கொலீஜியம்) நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி களை நியமிப்பதற்கான பரிந் துரையை மத்திய அரசுக்கு வழங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் டிச.1-ல் முதல்கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.1-ல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: பாஜக தலைவர் நட்டா சரமாரி புகார்

புது டெல்லி: ‘‘திஹார் சிறையில் தனது அமைச்சருக்காக, ஆம் ஆத்மி கட்சி மசாஜ் சென்ட்டரை திறந்து வைத்துள்ளது’’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகார் தெரிவித்தார். டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சி எம்.பி. ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தொழிற்சாலைகள் நிறைந்த வசீர்பூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தனர். அப்போது நட்டா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

புது டெல்லி: உடலில் காய்ச்சல், சளி ஏற்படும்போது மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கணிசமான இந்தியர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காமல் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவர்கள் லேசான காய்ச்சல் ஏற்படும்போது தேவைக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில், தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டும். கம்யூனிட்டி அக்யூயர்டு நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், ஹாஸ்பிடல் அக்யூயர்டு நிமோனியாவுக்கு 8 நாட்களுக்கும் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். கண்காணிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் எம்பரிக் ஆன்டிபயாடிக் சிகிச்சை, தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் குறிப்பிட...

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அருவியில் செல்ஃபி எடுத்தபோது கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெலகாவி: அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை அருகேயுள்ள கிட்வட் அருவிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். பெலகாவி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி, கோல்காபூர் மாவட்டம் சந்கட் தாலுகாவில் உள்ளது. மாணவிகள் சிலரின் பெற்றோரும் உடன் சென்றிருந்தனர். அருவி நீரில் மாணவிகள் அனைவரும் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் 5 மாணவிகள் சற்று முன்னேறி, தண்ணீர் விழும் இடத்துக்கு அருகில் சென்று, செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் கால் இடறி, 15 அடி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் விழுந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக நன்மைக்கு வழிகாட்ட நடவடிக்கை எடுப்போம்: ஜி-20 தலைமை இந்தியாவுக்கு பெருமை - 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது பெருமை அளிக்கிறது. அதன் மூலம் உலக நன்மைக்கு வழிகாட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். வானொலியில் நேற்று ஒலிபரப்பான 95-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது. வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்கிறது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. ஜி-20 தலைமை இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நன்மை, ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா வழிகாட்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டம், நீதித் துறையில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் - தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்

புதுடெல்லி : சட்டம், நீதித் துறையில் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார். கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதுக்கு 128 பேர் தேர்வு

புதுடெல்லி : கடந்த 2019, 2020 மற்றும் 2021-ம்ஆண்டுகளில் இசை, நடனம், நாடகம், பாரம்பரிய இசை/நடனம்/நாடகம், பொம்மை கலை துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை அளித்த வெற்றியாளர்கள் 128 பேருக்கு அகாடமி புரஸ்கார் விருதுகளை சங்கீத நாடக அகாடமி நேற்று அறிவித்தது. மேலும், கலைத்துறையில் சிறந்து விளங்கிய 10 பிரபலங்களை அகாடமி கலைஞர்களாகவும், சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு அறிவித்துள்ளது. புரஸ்கார் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், அகாடமி கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிர பத்திரம் அளிக்கப்படும். தவிர விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் கீழ், 86 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகடாமி அம்ரித் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி : அரசியல் சாசன தின நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை நாம் அனுசரிக்கிறோம். 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு மற்றும் பொதுமக்கள் உரிமைகள் தினத்தை நாடு கொண்டாடிக் கொண்டிருந்தபோது, மனிதநேயத்தின் எதிரிகள் இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களுக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன்’’ என்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தில், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது. தீவிரவாதிகளை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு, தங்கள் உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது’’ என கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றி | 9 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது - பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை : பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் இஓஎஸ்-06 உள்ளிட்ட 9 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவைப்படும் தொலையுணர்வு வகை செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நீங்கள் 2002-ல் கற்றுக் கொடுத்த பாடத்தை அறிவோம்...” - அமித் ஷாவுக்கு ஒவைசி பதிலடி

"2002-ல் குஜராத் கலவரத்திற்குக் காரணமானவர்கள் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது" என்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. இது குறித்து ஒவைசி கூறும்போது, "மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் 2002-ல் கற்றுக்கொடுத்த பாடம் என்ன தெரியுமா? பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை மற்றும்காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியை படுகொலை செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தால் தான் டெல்லியிலும் மதக்கலவரம் நடந்தா என்பதை தெரிவிப்பீர்களா?" என காட்டமாக வினவியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வர தீவிர ஆலோசனை: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: கர்நாடகாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் இது குறிப்பிடப்படுவது வழக்கமாக உள்ளது. கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்திலும், குஜராத்திலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; கொலீஜியம் அதற்கு விதிவிலக்கல்ல" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி: ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல. அதற்கு கொலீஜியமும் விதிவிலக்கல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தை ஒட்டி டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பார் கூட்டமைப்பு சார்ப்பில் விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்லது. அதற்கு கொலீஜியம் முறை மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால் கருத்து வேறுபாடுகளோ, சிக்கல்களோ ஏற்படும்போது நாம் அந்த அமைப்புக்கு உட்பட்டே அதற்கு தீர்வு காண்பது அவசியம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் பாரம்பரியத்தில் பெருமை கொள்வோம் - அடிமை மனநிலையை கைவிட பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி : ‘‘அடிமை மனநிலையிலிருந்து வெளியேறி, நாட்டின் வளமான பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டிய நேரம் இது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். முகாலயர்களை எதிர்த்து போரிட்டு அசாம் கலாச்சாரத்தை காத்த வீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த ஆண்டின் நிறைவு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட பலர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ ஊடுருவல் - உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் புகார்

டேராடூன் : பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ கட்சிக்குள் ஊடுருவியுள்ளன. அவர்கள் எல்லா வகையிலும் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கரண் குற்றம் சாட்டியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் கரண் மகாரா பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்குள் பலரை பாஜக நுழைத்துள்ளது. அவர்கள் பாஜக ஆதரவாளர்கள். காங்கிரஸை வலுப்படுத்த யார் முயன்றாலும் அவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள் அல்லது வலுப்படுத்த முயற்சிப்பவர் மீது களங்கம் சுமத்துவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் அவலம் | 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தண்டனை ஐந்து உக்கி

பாட்னா: பிஹாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஊர் பஞ்சாயத்து வெறும் 5 உக்கிகளை தண்டனையாக வழங்கியுள்ளது. இந்தத் தண்டனை வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவ இது குறித்து பொதுமக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். கூடவே, பிஹார் அரசு இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். பிஹாரின் நவாடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மிட்டாய் வாங்கித்தருவதாகக் கூறி தனது கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிகிறது. அவரை கிராமத்தில் ஊர் பெரியவர்கள் எனக் கூறப்படுபவர்கள் முன்னியலையில் பஞ்சாயத்தில் முன் நிறுத்தினர். அந்த பஞ்சாயத்தில் சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்பில்லை. அச்சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்ற குற்றத்திற்காக மட்டும் அவரை தண்டிக்கிறோம். அவர் ஊர் பஞ்சாயத்து முன் ஐந்து உக்கி போட வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த நபரும் 5 உக்கிகளை அவசர அவசரமாக போட்டுவிட்டு அமர்கிறார். இந்த காட்சிகள்...

இந்தியப் பார்வையில் வரலாற்றை திருப்பி எழுதுங்கள்; மத்திய அரசு உதவி செய்யும்: அமித் ஷா

புதுடெல்லி: வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்றை திருப்பி எழுத வேண்டும். இந்திய பின்புலத்தில் எழுதப்படும் வரலாற்றுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் நேற்று அசாம் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "வரலாறு படித்த மாணவன் நான். நம் நாட்டின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை. அது சிதைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் அந்தத் தவற்றை இப்போது சரி செய்ய வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜும்மா மசூதியில் பெண்கள் நுழைய தடை - ஆளுநர் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வாபஸ் பெற்றார் இமாம்

புதுடெல்லி : டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜும்மா மசூதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இதன் 3 முக்கிய நுழைவாயில்களுக்கு வெளியே சில நாட்களுக்கு முன் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டது. பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேலைக்கு வராத மருத்துவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு

டேராடூன் : உத்தரகாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சலுகை கட்டணத்தில் படிப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டும். ஆனால், இவ்வாறு அரசு வேலையில் இருக்கும் மருத்துவர்கள் சிலர் முறையான தகவல் இல்லாமல் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து விடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையான தகவல் எதுவும் வழங்காமல் தலைமறைவான 109 மருத்துவர்களை சுகாதாரத் துறை தேடி வருகிறது. அவர்கள் பெயரை கருப்புப் பட்டியலில் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த 109 மருத்துவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பணிக்கு வரவில்லை. தங்களை பற்றிய தற்போதைய விவரங்கள் எதையும் அதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர்களை அரசு வேலையிலிருந்து நீக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இனி அவர்கள் அரசுத் துறையில் வேலைபெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்