Skip to main content

Posts

Showing posts from June, 2023

மககள தக பரககம இநதயவன வளரசசயல எனன தககதத ஏறபடததம?

இதுவரையில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகித்துவந்தது. தற்போது, இந்தியா முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது. ‘வேர்ல்டு பாப்புலேஷன் ரிவியூ’ (World Population Review) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும். சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது. முன்பு, மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக பார்க்கப்பட்டது. இந்தப் பார்வையின் நீட்சியாகத்தான் 1970-களில் - இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தது. தற்போது மக்கள் தொகை பெருக்கம் மீதான உலகளாவிய பார்வை மாறி இருக்கிறது. உலக அளவில் பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் காரணியாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான், மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தி இருப்பது, சர்வதேச கவனம் ஈர்த்து இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu T...

படன கடடததல பஙகறறவரகள ஊழலவதகள: பஹர கடடததல மததய அமசசர அமத ஷ கறறசசடட

முங்கர்: ‘‘பிஹார் தலைநகர் பாட்னாவில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் ஊழலில் ஈடுபட்டவர்கள்’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிஹார் தலைநகர் பாட்னா வந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் முங்கர் மாவட்டம் லக்கிசாராய் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அசோக் தாம் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அமித் ஷா வழிபட்டார். பின் லக்கிசாராய் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

30-06-2023 சோபகிருது 15 ஆனி வெள்ளிக்கிழமை திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 1.28 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: விசாகம் மாலை 4.20 வரை. பிறகு அனுஷம். நாமயோகம்: சாத்தியம் மறுநாள் பின்னிரவு 1.42 வரை. பிறகு சுபம். நாமகரணம்: பவம் பிற்பகல் 2.16 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45. அஸ்தமனம்: மாலை 6.39. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,7,9 சந்திராஷ்டமம் ரேவதி, அஸ்வினி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனமழயல பதரநததல நலசசரவ

கோபேஷ்வர்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சின்கா அருகே புதன்கிழமை இரவு முதல் கனமழை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து தடைபட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலை சென்றடைய முடியாமல் நடுவழியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, இதில் பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பக்தர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

600 கரகள பட சழ மகரஷடர சனற சநதரசகர ரவகக சரத பவர கணடனம

மகாராஷ்டிர மாநிலத்துக்கு 600 கார்கள் புடை சூழ சென்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தேசிய அளவில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றினார். வரும் தேர்தல்களில் பிற மாநிலங்களிலும் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரதமர வலயறததம பத சவல சடடததகக மஸலம தனநபர சடட வரயம எதரபப - ஆம ஆதம கடச ஆதரவ

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது சிவில் சட்டத்தை, கொள்கை அடிப்படையில் ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை 8.5 லட்சம் பேரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டுஉள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.ப. | 'பம ஆரம' சநதரசகர ஆசத மத தபபககச சட - நலழயல உயர தபபனர

சஹாரன்பூர் : ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவரது அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்த நிலையில், உடனடியாக தியோபந்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஃபரச வப தடர பரதத உ.ப.யல ர.2 ஆயரம களள நடட அசசடதத வளயடட கமபல சககயத

புதுடெல்லி : உத்தர பிரதேசத்தை சேர்ந்த பொற்கொல்லர் இர்ஷாத். இவர் சமீபத்தில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ‘ஃபார்சி’ என்ற பாலிவுட் வெப் தொடரை பார்த்துள்ளார். இது கள்ளநோட்டு அச்சடித்து, புழக்கத்தில் விடுவது பற்றிய படம். கரோனா தொற்று பரவிய காலத்தில் அதிக இழப்பை சந்தித்த இர்ஷாத்துக்கு, ‘ஃபார்சி’ வெப் தொடரை பார்த்தபின் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போதுதான், ரூ.2 ஆயிரம்நோட்டை திரும்ப பெறுவதாகரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, ரூ.2000 கள்ள நோட்டை அச்சடித்து,அதை குறைந்த தொகைக்கு பரிமாற்றம் செய்தால், அதை வாங்க பலர் முன்வருவர் என்ற யோசனை இர்ஷாத்துக்கு தோன்றியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்சினைகளிலிருந்து வெளி வருவீர்கள். உறவினர்களில் யார் நல்லவர் என்பதை உணர்வீர்கள். ரிஷபம்: புதிய யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இடையூறுகளைக் கடந்து சாதித்து காட்டுவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மககளவ தரதலல மஸலமகள கவர மட மதர சனறதழ வழஙகம பஜக

புதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களைக் கவர ’மோடி மித்ரா (மோடியின் நண்பன்)’ எனும் பெயரில் பாஜக நாடு முழுவதிலும் சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த வகையிலான முதல் கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் நகரில் ஜூன் 22-ல்நடைபெற்றது. இதற்கு, உலகப்புகழ் பெற்ற தாரூல் உலூம் மதரஸா உட்பட நூற்றுக்கணக்கான மதரஸாக்கள் அங்கு இருப்பது காரணம் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களையும், மவுலானாக்களையும் பாஜக அழைத்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இரவதமன சடடஙகளல நடட நடதத மடயம?; பத சவல சடடம அவசயம - பரதமர மட வலயறததல

போபால் : இரண்டு விதமான சட்டங்களால் நாட்டை எப்படி நடத்த முடியும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஆண்டில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மசமன வனல கரணமக ஹலகபடர தரயறககம - கயததல மமத பனரஜகக சகசச

கொல்கத்தா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 8ல் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் சென்ற அவர், இன்று மதியம் கொல்கத்தா திரும்பினார். ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடக வடகளககள 16 பர இரககமபத 3 அடகக மடய ஹடரலக மலம தககய உரமயளர கத

ஹைதராபாத் : வாடகை வீடுகளில் 16 பேர் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்கு மாடி வீட்டை உயர்த்த முயன்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையைவிட தாழ்வான நிலைக்கு மாறின. இதன்காரணமாக மழை பெய்தபோது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம்புகுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யடயபர தவரஜ படல சல வபததல மரணம

ராய்ப்பூர்: யூடியூப் பிரபலம் தேவ்ராஜ் படேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார் என தகவல். 'Dil se bura lagta hai' என்ற வீடியோ மூலம் அவர் பிரபலமானர். லாரி மோதியதில் அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற சூழலில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமசசலப பரதச கனமழ: மணட - கல சலயல 20 மண நரம நடதத பககவரதத நரசல!

மண்டி: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் மண்டி - குலு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. இந்தச் சூழலில், அந்தச் சாலையில் சுமார் 20 மணி நேரமாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போதைக்கு இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மண்டியில் இருந்து மணாலி வரையிலான சாலையில் போக்குவரத்து மேற்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பணகள தலமயல 1200 பர சறறவளதததல மணபபரல கத சயத 12 பர வடவததத ரணவம

இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 12 பேரை விடுவிக்க கோரி பெண்கள், குழந்தைகள் உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க அவர்களை ராணுவம் விடுவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும் குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே அரசு சலுகைகள், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறை நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்தபடி உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

26-06-2023 சோபகிருது 11 ஆனி திங்கள்கிழமை திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 2.16 மணி வரை, பிறகு நவமி. நட்சத்திரம்: உத்திரம் நண்பகல் 12.55 வரை, பிறகு அஸ்தம். நாமயோகம்: வ்யதீபாதம் காலை 6.17 வரை, பிறகு வரியான். நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.31 வரை, பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.38 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 8, 5, 3 சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமரகக எகபத நடகளககன பயணதத மடததக கணட நட தரமபனர பரதமர மட

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் புதுடெல்லி திரும்பிய அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக-வை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் மூலம் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக வர்த்தகம் சார்ந்த முதலீடுகளும் பெறப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸலமயரகள வழம 6 நடகளல கணட படடவரதன ஒபம: நத அமசசர நரமல சதரமன பசச

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதரககடசகள கடடததல தறமயக தலயடட ஆம ஆதம - கங. மதல மடதத மமதவகக பரடட

புதுடெல்லி : காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள்நேற்று முன்தினம் பாட்னாவில் கூடினர். இதில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பான தனது தனிப் பிரச்சினையை எழுப்பினார். இதில், காங்கிரஸின் முடிவை அறிவது அவரது நோக்கமாக இருந்தது. அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க தாங்கள் எடுத்த முயற்சிக்கு பலனில்லை என்று கூறி, கேஜ்ரிவால் வாக்குவாதத்தை தொடங்கினார். அப்போது இதற்கான பதிலை தங்கள் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளிப்பார் என ராகுல் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பகலல கறவ; இரவல அதகம | மறபடட மன கடடணம: மததய அரச தடடம

புதுடெல்லி: பகலில் குறைவு; இரவில் அதிகம் என்ற அடிப்படையில், மாறுபட்ட மின் கட்டணத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மின் அமைச்சகம் கூறியிருப்பதாவது: நாட்டின் மின்சார விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை பகல் நேரத்தில் 20 சதவீதம் வரை குறைக்கவும், இரவு நேரத்தில் 20 சதவீதம் வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணபபர நலவரம | பரதமரடம பசத நளலல - அனதத கடசக கடடததல அமத ஷ தகவல

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. மாலை 3 மணிக்கு தொடங்கிய கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜமம-கஷமரல 4 தவரவதகள சடடக கல

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஓசி) பகுதி வழியாக தீவிரவாதிகள் நேற்று ஊடுருவ முயன்றனர். அப்போது, அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். ராணுவம், காவல் துறை இணைந்து நடத்திய இந்த கூட்டு நடவடிக்கையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதரககடசகள ஒனறணநத தரதலகள சநதகக சமமதம - பஜகவகக எதரக 17 கடசகள மடவ | வரவன வவரம

பாட்னா: நிதிஷ்குமார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தல்களை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக, இக்கூட்டத்தை நடத்திய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் செய்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டம ஆஃப ட மன கடடணம அறமகம ஸமரட மடடரங வதகள சரமபப: மததய அரச தகவல

புதுடெல்லி : டைம் ஆஃப் டே மின் கட்டணம் அறிமுகம், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை எளிமைப்படுத்தி, மத்திய அரசு மின்சார (நுகர்வோர்உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்வதன் மூலம், நடைமுறையில் உள்ள மின் கட்டண அமைப்பில் இரண்டு மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டைம் ஆஃப் டே (டிஓடி) கட்டணத்தை அறிமுகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை சீரமைத்தல் ஆகியவை அந்த மாற்றங்களாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஜகவ அகறறஎதரககடசகளகளம அமககம பஹர -2024 மககளவ தரதலல எனன சததயம?

புதுடெல்லி: கலிங்கப் போரால் பாடம் கற்ற பின் போர் நடத்தாமலேயே மவுரியப் பேரரசை கட்டிக் காத்தார் மாமன்னர் அசோகர். அவரது தலைநகரான பாடலிபுத்திரம் எனும் பாட்னா, ஓர் அரசியல் போருக்கு தயாராகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறுகிறது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் இதை முன்னின்று நடத்துகின்றனர். இக்கூட்டத்தில், மாநில முதல்வர்களான தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாபின் பகவந்த் சிங் மான், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அகிலேஷ் சிங் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோரும் ஒன்று கூடுகின்றனர். சரத் பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். மொத்தம் 18 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கூடுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்...

நலலத நடககம

23-06-2023 சோபகிருது 08 ஆனி வெள்ளிக்கிழமை திதி: பஞ்சமி இரவு 8.06 வரை.பிறகு சஷ்டி. நட்சத்திரம்: மகம் இன்று முழுவதும். நாமயோகம்: வஜ்ரம் மறுநாள் பின்னிரவு 4.43 வரை. பிறகு சித்தி.நாமகரணம் : பவம் காலை 6.53வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: மந்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,5,9 சந்திராஷ்டமம் உத்திராடம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''சமக நத மணணல எதரககடசகளன பர மழககம'' - படன சனறடநத மதலவர ஸடலன

பாட்னா : எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின். வரும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, புதிய ஒருங்கிணைப்புக்கான ஆதரவை கோரினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடச ரயல வபதத ஏறபடட பஹனக கரமததன மமபடடகக ர.2 கட நத - அமசசர அஸவன வஷணவ அறவபப

புவனேஸ்வர் : கடந்த 2-ம் தேதி ஒடிசாவில், மூன்று ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற பஹனகா கிராமத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அப்போது அவர், பஹனகா கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசம மநலததல 19 மவடடஙகளல வளளபபரகக

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மொத்தம் உள்ள 31-ல் 19 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டில் இதுவரை 523 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 5,842 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கி உள்ளது. குவாஹாட்டி, சில்சார் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'எதரககடசத தலவர பதவ வணடம; கடச பதவ கடஙகள' - அஜத பவர தடர பரககட

மும்பை : எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ஆர்வம் இல்லை; அதனால் என்னை அதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அதன் மூத்த தலைவர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எதாவது பொறுப்பில் என்னை நியமிக்க வேண்டுகிறேன். எதிர்க்கட்சித் தலைவராக நான் சரியாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வம் இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத மரநத கடததலகக எதரக டலலயல பலஸர சதன

புதுடெல்லி: “ஆபரேஷன் கவாச்’’ நடவடிக்கையின் கீழ் டெல்லியில் போதை மருந்து கடத்தலுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவினர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். போதைப் பொருள் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த"ஆபரேஷன் கவாச்" நடவடிக்கை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு எதிராக குற்றப்பிரிவு காவல் துறை கடும் நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனல கறற | உ.ப பஹர மநலஙகளகக சகதர நபணரகள அனபப வககபபடவர - மததய அமசசர அறவபப

புதுடெல்லி: அனல் காற்று வாட்டி வதைத்து வரும் உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் சுகாதார நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகிறது. இந்த 2 மாநிலங்களில் சுமார் 100 பேர் அனல் காற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணபபர கலவரதத மடவகக கணடவர வணடம - பரதமரகக எதரககடச தலவரகள வலயறததல

புதுடெல்லி : பிரதமர் மோடி தலையிட்டு, மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாநில முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் 10 பேர் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து பேச, மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஜக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு, பிரதமர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி வேண்டுகோள் விடுத்தனர். அதோடு, மணிப்பூர் கலவரம் தொடர்பான கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். பிரதமர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு நேரில் சந்திக்கவும் முயன்றனர். ஆனால், முடியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

20-06-2023 சோபகிருது 05 ஆனி செவ்வாய்க்கிழமை திதி: துவிதியை பிற்பகல் 1.20 வரை. பிறகு திருதியை. நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.49 வரை. பிறகு பூசம். நாமயோகம்: துருவம் மறுநாள் பின்னிரவு 2.00 வரை. பிறகு வயாகாதம். நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.20வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: சித்தயோகம் சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,6,8 சந்திராஷ்டமம் கேட்டை, மூலம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரதமர மட இனற அமரகக பயணம -ஐ.ந.வல நள யக நகழசசயல பஙகறகறர

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்லும் அவர், அங்கு ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'வநத பரத ரயலகக டககட வஙகனன; பயணததத தஜஸ ரயலல' - பயண டவட

புதுடெல்லி: ரயில் பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் வகையில் டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால், அந்த ரயிலுக்கு பதிலாக வேறொரு ரயில் வந்ததாகவும். அதில் தான் பயணித்து இருந்ததாகவும் அந்த பயணி அதிர்ச்சி தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு அந்த ரயிலில் கழிவறை மற்றும் மோசமான சேவையை ரயில்வே வழங்கியதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணபபரல இர பரவனர மதல மறறகறத: கடயரபப பகதகளன பயர பலககள பரஸபரம அழபப

இம்பால்: மணிப்பூரில் இரு சமுதாயத்தினர் இடையிலான மோதல் முற்றுகிறது. குடியிருப்பு பகுதிகளின் பெயர் பலகைகளை பரஸ்பரம் அழித்து தங்கள் சமுதாய பெயரை சூட்டுகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த மே 3-ம் தேதி அங்கு மோதல் ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டும், அங்கு தொடர்ந்து வன்முறை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடநத மனற நடகளல கடம வயலல பதககபபடட உ.ப. மரததவமனயல 54 பர உயரழபப

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் நோயாளிகள் 400 பேர் கடந்த 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 23 பேர் கடந்த 15-ம்தேதியும், மறுநாள் 20 பேரும், நேற்றுமுன்தினம் 11 பேரும் உயிரிழந்தனர். 3 நாட்களில் மொத்தம் 54 பேர் உயிரிழந்ததாக பாலியா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.கே.யாதவ் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கசநய 2025-ககள ஒழபபம: மனதன கரல நகழசசயல பரதமர மட உறதபட தரவததர

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 102-வது ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடதலபபலகள அமபப பதபபகக மயறச - 13 பரகக எதரக எனஐஏ கறறபபததரக

புதுடெல்லி: விடுதலைப்புலிகள் அமைப்பை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டது தொர்பான வழக்கில் இலங்கையை சேர்ந்த 10 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை புதுப்பிக்கும் சதிச் செயல் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கை என்ஐஏ கடந்த 2022, ஜூலையில் பதிவு செய்து 13 பேரை கைதுசெய்தது. இந்நிலையில் இவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமரநத யததரயல 40 உணவகளகக தட

ஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் ஆலய வாரியம் பக்தர்களுக்கு விடுத்துள்ள சுகாதார ஆலோசனையில் கூறியுள்ளதாவது: அமர்நாத் யாத்திரையில் பானங்கள், வறுத்த மற்றும் துரித உணவுகளை பக்தர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். தடைசெய்யப்பட்ட 40 உணவுகளில் புலாவ், ப்ரைடு ரைஸ், பூரி, பாத்துரா, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, பொறித்த அப்பளம் உள்ளிட்டவை அடங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதபரஷ படததகக எதரக டலல உயர நதமனறததல இநத சன மன

புதுடெல்லி: ஓம் ராவத் இயக்கத்தில் நேற்று வெளியான ஆதி புருஷ் படத்துக்கு எதிராக இந்து சேனா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்து சேனா தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் நேற்று (ஜூன் 16) உலகமெங்கும் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

17-06-2023 சோபகிருது 02 ஆனி சனிக்கிழமை திதி: சதுர்த்தசி காலை 9.25 வரை. பிறகு அமாவாசை. நட்சத்திரம்: ரோகிணி மாலை 4.38 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: சூலம் மறுநாள் பின்னிரவு 1.14 வரை. பிறகு கண்டம். நாமகரணம்: சகுனி காலை 9.25 வரை. பிறகு சதுஷ்பாதம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் மாலை 4.38 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,8 சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.ந.வல யக நகழசச - பரதமர மட பஙகறப

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். யோகா பயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21-ம் தேதியை யோக தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஐ.நா. சபை, ஜூன் 21-ம் தேதி உலக முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படும் என்று 2014 டிசம்பரில் அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணபபர தலநகர இமபலல கலவரம நடபப - மததய இண அமசசரன வடடகக த வபப

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் தீவைத்தது. மணிப்பூரில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒருமாதத்துக்கும் மேலாக அம்மாநிலத்தில் வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒவவர தறயலம அபர வளரசச -பரதமர நரநதர மட பரமதம

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அந்த ஆண்டில் மே 26-ம் தேதி நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வரிசையில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த கட்டுரைகள், காணொலிகளை தனது இணையபக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பணவரவு உண்டு. ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கலை பொருள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கஜரத அரக கரய கடநதத பபபரஜய பயல - 125 கம வகததல வசய கறறல பலதத சதம

அகமதாபாத் : 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் வீசிய பிப்பர்ஜாய் புயல் குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் ஜக்காவ் துறைமுகம் அருகே மணிக்கு 125 கிமீ எனவும், சில பகுதிகளில் மணிக்கு 140 கிமீ வேகத்திலும் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் எம் மொஹபத்ரா தெரிவித்தார். இதனால் குஜராத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதயமயனமரதயலநத இணககம நடஞசல: 4 ஆணடகளல பயனபடடகக வரம

கொல்கத்தா: இந்தியா–மியான்மர்–தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்பு இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய தொழில் மற்றும்வர்த்தக சபை (சிஐஐ) வணிக மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது. இந்நிகழ்வில் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சகர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்