Skip to main content

Posts

Showing posts from October, 2023

இந்தியா 25 ஆண்டில் வளர்ந்த நாடாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

கேவடியா: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி நாடு முழுவதும் நேற்றுஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. குஜராத்தின் நர்மதை மாவட்டம், கேவடியாவில் அமைக்கப்பட்டுள்ள படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இடைக்கால ஜாமீனில் சந்திரபாபு நாயுடு விடுதலை

நிதி ராஜமுந்திரி: வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில்திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக சிஐடிபோலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம்தேதி அவரை கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தரபிரதேசம் | சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: உயிர் சேதம் இல்லை

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்துக்கு அருகில் சுஹேல்தேவ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் இந்த அதிவிரைவு ரயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகள் தடம்புரண்டன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை வடக்கு சென்ட்ரல் ரயில்வே பிரிவு உறுதி செய்துள்ளது. “சுஹேல்தேவ் எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் என்ஜினின் இரண்டு சக்கரங்கள் தடத்தில் இருந்து வெளியேறியது. இதனால் என்ஜினை அடுத்த இரண்டு பெட்டிகளும் தடம்புரண்டன. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த தடத்தில் ரயில் சேவை இயல்பு நிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை 9 மணி அளவில் இது நடந்தது. தற்போது இந்த ரயில் புறப்பட உள்ளது. ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என வடக்கு செனட்ரல் ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபாத்யா தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thi...

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று வரிசையாக சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக செயல்படவும். பூர்வீக நிலப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை

புதுடெல்லி/பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் நவம்பர் 15-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கர்நாடக அரசும் அந்த மாநில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த 15-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் அக்.30-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் கடந்த 5 தினங்களாக 500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன்: நவ.2-ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது சிபிஐ. இருந்தாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த இந்த வழக்கு தொடர்பான அறிக்கையில் கேஜ்ரிவால் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் டெல்லியின் துணை முதல்வராக செயல்பட்ட மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மராத்தா இடஒதுக்கீடு | மகாராஷ்டிராவில் வலுக்கும் போராட்டம் - சிவசேனா எம்.பி.க்கள் இருவர் ராஜினாமா

மும்பை : மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் விசுவாசிகளாக அறியப்பட்ட சிவசேனா எம்.பி.க்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஹிங்கோலி எம்.பி ஹேமந்த் பாட்டீல், நாசிக் எம்.பி ஹேமந்த் கோட்சே ஆகிய இருவர்தான் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக ராஜினாமா செய்துள்ளனர். எம்.பி ஹேமந்த் பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை செயலகத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், ஹேமந்த் கோட்சே தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தீவிர விசுவாசிகளாக சொல்லப்பட்டவர்கள். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எம்.பி.க்கள் இருவரும் ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கன்னி ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிம்மம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து: 6 பேர் பலி; 15+ காயம்

கண்டகப்பள்ளி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணிகள் ரயில் (வண்டி எண் 08504) மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற ரயில் (வண்டி எண் 08532) மோதிய காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. கேபிள் பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பின்புறமாக மோதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பான விளம்பர பலகை - ம.பி.யில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மோதல்

போபால் : அயோத்தியில் ராமர் கோயில் திறப்பது தொடர்பான விளம்பரப் பலகை வைத்தது தொடர்பாக மத்தியபிரதேச மாநில பாஜக, காங்கிரஸ் தலைவர்களிடையே மோதல் வெடித்துள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ம்தேதி திறக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக விளம்பரப் பதாகைகளை மத்திய பிரதேச மாநில பாஜகவினர் வைத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவர்களுக்கு லேப்டாப்; பசு சாணம் கொள்முதல் - ராஜஸ்தான் காங்கிரஸ் வாக்குறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் 5 வாக்குறுதிகளை முதல்வர் அசோக் கெலாட் முன்வைத்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதிசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குற்றவியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்: ஹைதராபாத்தில் அமித் ஷா தகவல்

ஹைதராபாத்: குற்றவியல் சட்ட திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக ஹைதராபாத் வந்தார். அப்போது அவர் ஹைதராபாத் தேசிய போலீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த 175 பேரின் அணிவகுப்பை பார்வையிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

28-10-2023 சோபகிருது 11 ஐப்பசி சனிக்கிழமை திதி: பௌர்ணமி மறுநாள் பின்னிரவு 1.54 வரை. பிறகு தேய்பிறை பிரதமை. நட்சத்திரம்: ரேவதி காலை 7.31வரை. அஸ்வினி மறுநாள் பின்னிரவு 5.54 வரை. பிறகு பரணி. நாமயோகம்: வஜ்ரம் இரவு 10.46 வரை. பிறகு சித்தி. நாமகரணம்: பத்திரை பிற்பகல் 2.58 வரை. பிறகு பவம். நல்லநேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.03. அஸ்தமனம்: மாலை 5.41 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1,2,9 சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பழைய வாகனம் செலவு வைக்கும். ரிஷபம்: சகோதர வகையில் சொத்து பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கம் | ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை ஊழல் விவாகரம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்தது அமலாக்கத்துறை. நேற்று காலை முதல் அவரது வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மல்லிக் இயங்கி வருகிறார். இவர் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய போது ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விருச்சிகம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சமமான மரியாதையை தரக் கூடிய நீங்கள் மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக் கூடியவர்கள். ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படும் நீங்கள், பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து உடனடித் தீர்வு காண்பதில் வல்லவர்கள். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணவரவையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், மன உளைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி, குதூகலம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் வெடித்த சண்டை விலகும். எதிலும் வெற்றி உண்டு. வீண் அலைச்சல், டென்ஷன், முன் கோபம் குறையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ரூ.22,300 கோடி உர மானியத்துக்கு ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.22,303 கோடி மதிப்பிலான உர மானியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உரமானியத்துக்கு ரூ.1.75 லட்சம் கோடி கடந்த பிப்ரவரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ரபி பருவ கால விவசாய பணிகளை மேற்கொள்ள ரூ.22,303 கோடி மதிப்பில் உரமானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ரபி பருவமான குளிர்காலத்தில் கோதுமை, பருப்பு, திணைகள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விவசாயிகள் பயிரிடுவர். இது நாட்டின் உணவு தானிய விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு இருக்கும். இந்நிலையில் ரூ.22,303 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

26-10-2023 சோபகிருது 9 ஐப்பசி வியாழக்கிழமை திதி: துவாதசி காலை 9.44 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: பூரட்டாதி காலை 11.27 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: துருவம் காலை 8.49 வரை. பிறகு வ்யாகாதம். நாமகரணம்: பாலவம் காலை 9.44 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00. யோகம்: மந்தயோகம் காலை 11.27 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை. பரிகாரம்: நல்லெண்ணெய் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.03. அஸ்தமனம்: மாலை 5.41. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 7,8,9 சந்திராஷ்டமம் மகம், பூரம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை சீரமைக்க முயற்சி செய்வீர்கள். ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜன.22-ல் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா - அழைப்பிதழ் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி மாதம் நடக்கவுள்ளதை அடுத்து, அதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை இன்னும் இரண்டு மாதங்களில் முடித்து அடுத்த வருடம் ஜனவரி 22-ம் தேதி கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோயிலில் ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழுவை இன்று சந்திக்கிறது சட்ட ஆணையம்

புதுடெல்லி: ' ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை சட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் இன்று சந்தித்து, தங்கள் பரிந்துரையை வழங்குவார்கள் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'ஜெயிலர்' பட வில்லன் நடிகர் விநாயகன் கேரளாவில் கைது

எர்ணாகுளம்: ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகனை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட காரணத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் விநாயகன் , மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மலையாளத்தில் வெளியான கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு: விஜயதசமி விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விஜய தசமியை ஒட்டி பிரதமர் மோடி டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று (அக்.24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராவண உருவ பொம்மை வத நிகழ்ச்சியில் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்: 4 நேபாள மாணவர்களின் உடல்கள் காத்மண்டு வந்தடைந்தன

காத்மண்டு: இஸ்ரேலில் ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்த 4 நேபாள மாணவர்களின் உடல்கள் காத்மாண்டுவுக்கு வந்தடைந்தன. மாணவர்களின் உடல் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. கடந்த 7-ஆம் தேதி முதல் ஹமாஸ் படைகளும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், நேபாள நாட்டைச் சேர்ந்த 17 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலுக்கான நேபாள தூதரகம் தெரிவித்தது. மேலும்,10 நேபாள மாணவர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரகம் அண்மையில் அறிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சியாச்சின் மலைப்பகுதியில் பணியின்போது உயிரிழந்த அக்னிவீரர்: இந்திய ராணுவம் மரியாதை

சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலைப் பகுதியில் பணியாற்றி வந்த அக்னிவீரர் (Agniveer) ப ணியின்போது உயிரிழந்தார். அவருக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தியுள்ளது. சியாச்சினில் பணியின் போது அக்னிவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லே-வை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் Fire and Fury படைப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த அக்னிவீரரின் பெயர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மண், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. அவரது மறைவுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அனைத்துப் படை வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள். ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதி கரிக்கும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான் தேர்தல் | பாஜகவின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வசுந்தரா ராஜே போட்டி

புதுடெல்லி: ராஜஸ்தான் தேர்தலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மீண்டும் போட்டியிடுகிறார். ராஜஸ்தானில் பாஜக சார்பில் 2 முறை முதல்வராக பதவி வகித்தவர் வசுந்தரா ராஜே. அம்மாநில மக்களால் ‘மகாராணி’ என்று அழைக்கப்படும் அவர், அப்பகுதியின் ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் ராஜ குடும்பத்தின் மருமகளாக வந்தவசுந்தரா, அதன் மகாராணியாகவும் உள்ளார். கட்சியின் சக போட்டியாளர்களால் வசுந்தராவைபாஜக தலைமை புறக்கணிப்பதாக புகார் உள்ளது. இதன் காரணமாக அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கி ராஜஸ்தானிலிருந்து வெளியேற்றும் முயற்சியும் நடைபெற்றது. இதற்கு வசுந்தராவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொதுமக்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் சைபர் முறைகேடு: நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: இந்தியர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்திய சைபர் முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தி கம்ப்யூட்டர் சாதனங்களை பறிமுதல் செய்தது. இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: அப்பாவி இந்தியர்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கிரிப்டோ ஊழல் நடைபெற்றுள்ளது. இது தவிர சைபர் நிதி முறைகேடுகள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிதி உளவுப் பிரிவு அளித்த தகவல்கள்படி இந்த வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனை வெற்றி

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஆளில்லா விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, மீண்டும் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 3 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர். ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்க திரிணமூல் எம்.பி.க்கு லஞ்சம் கொடுத்தேன்: தொழிலதிபர் ஒப்புதல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்தேன் என்று தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” - பெங்களூருவில் ரசிகரின் முழக்கத்தை தடுத்த காவலர்

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியை மைதானத்தில் நேரில் பார்த்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டுள்ளார். அதையடுத்து அவ்வாறு முழக்கமிட வேண்டாம் என மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘நான் ஏன் அப்படி சொல்லக்கூடாது. களத்தில் விளையாடுவது பாகிஸ்தான் அணி. நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?’ என அந்த ரசிகர் காவலரிடம் தெரிவித்துள்ளார். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்தை சொல்லி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நக்சல் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது காங்கிரஸ்: அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

ஜகதல்பூர்: சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்ட தலைநகரான ஜகதல்பூரில் நேற்று பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: பஸ்தார் பிராந்தியம் ஒரு காலத்தில் நக்சல் வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில இடங்களில் நக்சலைட் அச்சுறுத்தல் நீடிக்கிறது. சத்தீஸ்கரில் பாஜகவை நீங்கள் ஆட்சியில் அமர்த்தினால் ஒட்டுமொத்த மாநிலத்தையும் நக்சலைட் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்போம்.பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நக்சல் வன்முறைச் சம்பவங்கள் 52% குறைந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்று கொள்வீர்கள். வீண் செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர். ரிஷபம்: சவாலான காரியங்களையும் எடுத்து,சிறப்பாக செய்வீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். கலை பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணவரவு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு ஒரே அடையாள அட்டை: நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தனித்துவ எண்

புதுடெல்லி: நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது போல நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டம், கடந்த 2020-ல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடிசா ஆளுநராக ரகுபர் தாஸ், திரிபுரா ஆளுநராக இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம்!

புதுடெல்லி: ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதன்கிழமை (அக்.18) அன்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெறுப்பை பரப்பும் ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தலைநகர் அய்ஸ் வாலில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: அரசியல் கட்டமைப்பு பாது காப்பு, மதம் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இன்றி மக்கள் ஒற்றுமையாகவும், சுதந்திரமா கவும் வாழ்வதை உறுதி செய்வ தன் மூலம் இண்டியா கூட்டணி இந்தியாவின் சித்தாந்தத்தையும், அதன் மதிப்புகளையும் பாது காக்கும் அரணாக விளங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: நாடாளுமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின்5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் - ஆணும், பெண்ணும் - பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“கர்நாடகாவில் வசிப்போர் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும்’’ - முதல்வர் சித்தராமையா

பெங்களூரு : கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். மைசூரு மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கன்னடம் மற்றும் கலாசாரத் துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா , “கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியை பிரபலப்படுத்த வேண்டும். கன்னடம் இங்கு இன்றியமையாத மொழியாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் கன்னடர்கள்தான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக். 21-ல் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

புதுடெல்லி: ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த 2014-ல் இத்திட்டத்துக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை விரைவில் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ கடந்த 7-ம் தேதி அறிவித்தது. வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது ஆகியவற்றை உள்ளடக்கியது இத்திட்டம். இதற்கான ஒத்திகை பணிகளை இந்திய கடற்படை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் ...

நல்லதே நடக்கும்

17-10-2023 சோபகிருது 30 புரட்டாசி செவ்வாய்க்கிழமை திதி: திருதியை மறுநாள் பின்னிரவு 1.24 வரை. பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: விசாகம் இரவு 8.28 வரை. பிறகு அனுஷம். நாமயோகம்: ப்ரீதி காலை 9.18 வரை. பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 1.20 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: மந்தயோகம் இரவு 8.28 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59. அஸ்தமனம்: மாலை 5.49. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 7, 8, 9 சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். ரிஷபம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்கள் நண்பர்களாவார்கள். குழப்பம் நீங்கி வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் | சரக்கு ரயில் தடம்புரண்டது

பக்சர்: பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டது. அந்த மாநிலத்தில் உள்ள தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது. கடந்த வாரம் இதே பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில் அதே மாவட்டத்தில் தற்போது சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராமாயண நடிகர் போட்டி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான காலம் முடிவடையவுள்ளதையொட்டி நவம்பர் 17-ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், 144 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்றுவெளியிட்டது. அதேபோன்று, சத்தீஸ்கர் மாநில தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வெளியிட்ட மத்திய பிரதேச வேட்பாளர் பட்டியலில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து புத்னி தொகுதியில் தொலைக்காட்சி நடிகர் விக்ரம் மஸ்டல் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனந்த் சாகரின் 2008 தொலைக்காட்சி நிகழ்ச்சியான ராமாயணத்தில் ஹனுமான் வேடத்தில் நடித்ததற்காக மஸ்டல் மிகவும் பிரபலமானவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கார் விபத்தில் ஆந்திர முதல்வரின் தாய் உயிர் தப்பினார்

ஓங்கோல் : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயலட்சுமி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், உடல்நலமில்லாமல் இருக்கும் திருப்பதிதேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் தாயாரை நலம் விசாரிக்க விஜயலட்சுமி நேற்று காலை கார் மூலம் ஹைதராபாத்தில் இருந்து ஓங்கோலுக்கு சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக சொந்த ஊரில் வாக்களிக்கும் மக்கள்

ராய்ப்பூர் : மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக தங்கள் சொந்த கிராமத்தில் வாக்களிக்க உள்ளனர். ஐந்து மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7-ல் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன. தெற்கு சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிராந்தியம் மாவோயிஸ்ட் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதியாகும். இப் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்