Skip to main content

Posts

Showing posts from January, 2025

மத்திய அரசின் திட்டங்களால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு: குடியரசுத் தலைவர் பெருமிதம்

புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதிலும் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டு முன்னேறியுள்ளனர் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அவரை குதிரைப்படை வீரர்கள், நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வரவேற்று மக்களவைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டை கொண்டாடினோம...

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 7 எம்எல்ஏ-க்கள் விலகல்: டெல்லி அரசியலில் சலசலப்பு

புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ-க்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளனர். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் இருந்து விலகி உள்ள எம்எல்ஏ-க்கள் மாற்று கட்சியோடு தொடர்பில் இருந்து வருவதாகவும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணத்தாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல். அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவாலிடம் தங்களது முடிவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1954-ம் ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 800 பக்தர்கள் உயிரிழந்தனர். கடந்த 1986-ம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 200 பேர் உயிரிழந்தனர். கடந்த 2003-ம் ஆண்டு நாசிக் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். தற்போது பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்து உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்: ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் அதன் தலைவர் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தர பிரதேச காங்கிரஸ் எம்.பி. கைது

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர், பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேச காங்கிரஸின் பொதுச் செயலராகவும் உள்ளார். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியும், அரசியல் ஆசை காட்டியும் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாக சீதாபூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோருக்கு எதிராக ஜனவரி 17-ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணமகளே இல்லாமல் நடந்த திருமண ஊர்வலம்: இமாச்சல பிரதேச மாநிலத்தில் வினோதம்

மணமகளே இல்லாமல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலம் நடந்துள்ள வினோதம் தற்போது தெரியவந்துள்ளது. இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அருகிலுள்ள சிங்கா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்கு நாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ், அவரது மனைவி மானு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் இருவரும் திருமணத் தரகர்கள். இரு வீட்டாரும், ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மணமகனும், மணமகளும் போனில் மட்டுமே பேசி சம்மதம் தெரிவித்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணம் நின்றது, வேலையும் பறிபோனது: சயீப் அலிகான் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதானவர் கண்ணீர்

மும்பை: கடந்த 15-ம் தேதி மும்​பை​யில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்​டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தி​யால் குத்​தி​விட்டு தப்பியோடி​விட்​டார். இது தொடர்பாக, சத்தீஸ்​கரை சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கடந்த 18-ம் தேதி சந்தேகத்​தின்​ பேரில் கைது செய்​யப்​பட்​டார். பிறகு அவர் விடுவிக்​கப்​பட்​டார். இதுகுறித்து ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கூறிய​தாவது: நான் மும்​பை​யின் கொலாபா பகுதியை சேர்ந்​தவன். எனக்கு திரு​மணம் நிச்​சயம் செய்​யப்பட்டு இருந்​தது. எனது வருங்கால மனைவியை நேரில் பார்க்க மும்​பை​யில் இருந்து சத்தீஸ்​கரின் பிலாஸ்​பூர் நகருக்கு ரயிலில் சென்று கொண்​டிருந்​தேன். துர்க் நிலை​யத்​தில் ரயில் நின்​ற​போது ரயில்வே பாது​காப்பு படை போலீ​ஸார் என்னை வலுக்​கட்​டாயமாக ராய்ப்​பூருக்கு அழைத்​துச் சென்​றனர். அங்கு மும்பை போலீ​ஸார் என்னிடம் விசாரணை நடத்​தினர். அப்போது அடித்து உதைத்து துன்​புறுத்​தினர். நடிகர் சயீப் அலிகானை கத்தி​யால் குத்​தி​யதாக குற்றம் சாட்​டினர். எனது விளக்​கத்தை போலீ​ஸார் ஏற்க​வில்லை. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவர் கைது ...

என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது: இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ கருத்து

புதுடெல்லி: என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது என்ற இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோவின் கருத்தைக்கேட்ட குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர். டெல்லியில் நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக, 25-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளாவில் பாவத்தை போக்க புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்றவாளி கைது

புதுடெல்லி: மகா கும்பமேளாவில் தன் பாவத்தை போக்கிட புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்றவாளியை போலீஸார் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில், தான் செய்த பாவத்தை போக்கிட ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளியாக இருந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிரவேஷ் யாதவ் என்பவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி கோயில் கட்டிட கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவுக்கு பத்ம ஸ்ரீ விருது

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி கோயிலை வடிவமைத்து கட்டியெழுப்பிய பிரபல கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவுக்கு (80) இந்தாண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. சந்திரகாந்த் சோம்புராவின் தாத்தா பிரபாசங்கர்பாய் ஓகத்பாயும் பிரபல கட்டிடக் கலைஞர் ஆவார். இவரும், பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர். சோம்புராவின் குடும்பம் 200-க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 11 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் 11 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்காக செயல்படும் 11 தீவிரவாதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்ஐயு) அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து அவர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 23-ம் தேதி இரவு டெல்லி வந்தார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அவர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் கண்ணீர் மல்க துறவறம் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி

பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி. இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நிழல் உலக தாதாக்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளிட்ட பல சர்ச்சைகள் இவருக்கு எதிராக கிளம்பின. இதனால், கடந்த 34 வருடங்களுக்கு முன் அவர் வெளிநாடுகளில் தங்கத் துவங்கினார். இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல திரைப்படங்களில் நடிப்பதிலிருந்தும் விலகியவர், 2012-ல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து ஆன்மிக பாதையில் அவருக்கு ஈடுபாடு எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜ்ஜியம் இல்லை, கிரீடம் இல்லை: கேரளாவின் பழங்குடியின மன்னருக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

திருவனந்தபுரம்: டெல்​லி​யில் நடைபெறும் குடியரசு தின விழா​வில் பங்கேற்க கேரளா​வில் பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த மன்னருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்​சி​யார் பஞ்சா​யத்​துக்கு உட்பட்டது கோழிமலை. இங்கு மன்னன் பழங்​குடியின மக்கள் வாழ்​கின்​றனர். இவர்கள் பழங்​காலத்​தில் சோழர்​களுக்​கும் பாண்​டியர்​களுக்​கும் ஏற்பட்ட போரின்போது தமிழ்​நாட்​டில் இருந்து கேரள பகுதிக்கு குடியேறிய​வர்​கள். இந்த பழங்​குடியின மக்களுக்கு ராஜா உண்டு. ஆனால் ராஜ்ஜியம் இல்லை. தலைநகர் உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனதில் சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பு அறிமுகமாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். உத்தியோகரீதியான பயணம் மேற்கொள்வீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளாவில் முழு துறவறத்துக்கு மாறிய நடிகை மம்தா குல்கர்னி: விரைவில் மகா மண்டலேஷ்வர் பதவி

புதுடெல்லி: மகா கும்பமேளாவில் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னிக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட உள்ளது. இதை அவருக்கு அளிக்கும் கின்னர் அகாடாவில் (திருங்கைகள் அகாடா) இணைந்தார் மம்தா. சுமார் 34 வருடங்களுக்கு முன் பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி (50). பல இந்தி திரைப்படங்களில் நடித்த இவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் பிறகு மெல்ல திரைப்படங்களிலிருந்து விலகியவர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். இடையில் 2012-ல் ஒருமுறை உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜின் கும்பமேளாவிற்கு வந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது: உத்தவ் தாக்கரே சிவசேனா கோரிக்கை

மும்பை: மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பால் தாக்கரேவின் 99-வது பிறந்த நாளையொட்டி மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதை, அதற்கு தகுதியற்ற சிலருக்கு வழங்கியுள்ளது. ஆனால் நாட்டில் இந்துத்துவாவின் விதைகளை உண்மையிலேயே விதைத்த பால் தாக்கரேவுக்கு வழங்கப்படவில்லை. இன்னும் ஓராண்டில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு வருகிறது. நூற்றாண்டு தொடங்குவதற்கு முன் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவசியம்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எடுத்த காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும். சொந்தபந்தங்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பயணங்கள் அலைச்சல் தரும். ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லை மீறிய செல்ஃபி கூட்டம்: சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ‘கும்பமேளா வைரல் பெண்’ மோனாலிசா

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் பெண் ஒருவர் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரல் டாபிக். எங்கு திரும்பினாலும் இவருடைய புகைப்படங்களே வலம் வருகின்றன. மத்தியப்பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். பிரபல மாடல்களே தோற்றுப் போகும் வகையில் இவரது எழில்கொஞ்சும் அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனாலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2025-ன் முதல் 3 வாரங்களில் தினமும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர்: உள்துறை அமைச்சகம்

2025-ம் ஆண்டின் முதல் 3 வாரங்களில் தினந்தோறும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருவதாவது: புத்தாண்டு பிறந்து முதல் 3 வாரங்களுக்குள் 48 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படையினர், துணை ராணுவத்தினர், போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் மூலம் மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளா 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான என்எல்பி சர்வீசஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்து கொள்ளாதீர். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாராகிளைடிங் சாகச விதிகளை கடுமையாக்க வேண்டும்: சோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்

பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என சோஹா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். நண்பரின் 27 வயது மகன் மரணத்தைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனது குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர்களான சிபி ஆனந்த் மற்றும் பிரியா தம்பதியரின் 27 வயது மகன் ஜெயேஷ் ராம். இவர் கடந்த 17-ம் தேதியன்று இமாச்சல பிரதேசம் குலூவில் பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று திரும்பியது எனக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராகிளைடிங் செய்வதற்கான விதிமுறைகள் கடுமையாக இல்லாததால் இமாச்சலில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதில், ஜெயேஷ் ராமும் சிக்கி பலியானது மிக வருத்தமான சம்பவம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இது போதாது; மரண தண்டனை தேவை” - பெண் மருத்துவர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து மம்தா ஆதங்கம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: “ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், இன்றைய தீர்ப்பில், இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் பரவாயில்லை: சஞ்சய் ராயின் தாய் மலாட்டி தகவல்

என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை என சஞ்சய் ராய் தாய் தெரிவித்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோதமாக செயல்பட்ட 13 சுரங்கங்களுக்கு சீல்: அசாம் அரசு நடவடிக்கை

அசாமில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சுரங்கங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ரங்சூ பகுதியில் செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். கடந்த 6-ம் தேதி எலிவளை சுரங்கம் அமைத்து அவர்கள் நிலக்கரி வெட்டியபோது தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்து இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 7 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடக்கம்: பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். இதன்படி, வரும் ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்துக்களுக்கு எதிரான வெளிப்படையான போர்: காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: வரலாற்று அநீதிகளுக்கு சட்ட தீர்வு கோருவது இந்துக்களின் அடிப்படையான அரசியல்சாசன உரிமை. அதை மறுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது காங்கிரஸ். மதச்சார்பின்மை பாதுகாப்பு என்ற பெயரில் வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது இந்துக்களுக்கு எதிரான வெளிப்படையான போர் அறிவிப்பு. காங்கிரஸ் கட்சி தற்போது புதிய முஸ்லிம் லீக்-ஆக மாறியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதானிக்கு முன்பு பாலிவுட்டை குறிவைத்த ஹிண்டன்பர்க்

அதானி குழுமத்துக்கு முன்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பாலிவுட்டை குறிவைத்து சூழ்ச்சி வலை பின்னியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்ந்தவர் நாதன் ஆண்டர்சன் (40). அங்குள்ள யூத பள்ளியில் பயின்ற அவர், கனெடிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் பாடத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு குடிபெயர்ந்த அவர் கடந்த 2004, 2005-ம் ஆண்டுகளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவ அதிகாரியை திருமணம் செய்ய காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

பெற்றோர் நிச்சயித்த ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண் குற்றவாளி என நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

14 மணி நேர வேலையால் மகளின் குழந்தை பருவத்தை இழந்தேன்: கணக்கு தணிக்கையாளரின் வீடியோ வைரல்

அலுவலக பணிச் சுமையால் என் மகளின் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க தவறிவிட்டேன் என பெண் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.) வேதனை தெரிவித்துள்ளார். நீது மொஹாங்கா ஒரு கணக்கு தணிக்கையாளர். தொடக்க காலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அலுவலக வேலையில் மூழ்கி இருந்ததால் அவரது குடும்பத்தினரை கவனிக்க முடியாமல் போய் உள்ளது. ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த அவர் வேலையை விட்டுவிட்டு, மனவள பயிற்சியாளராக உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்​டும்: ஐஏஎம்ஏஐ

இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையதள பயனாளர் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கம் (ஐஏஎம்ஏஐ) மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டர் சார்பில் ‘இந்தியாவில் இணையதளம் 2024’ என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏஐ மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா வீடியோ: ஆம் ஆத்மி கட்சி மீது வழக்குப் பதிவு

செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷா வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வீடியோக்கள், புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கி அதை பதிவு செய்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசி தமிழ்ச் சங்கமம் 3.0 அறிவிப்பில் அகத்தியர் பெருமை பேசிய மத்திய அமைச்சர்!

புதுடெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் இன்று (ஜன.15) காசி தமிழ்ச் சங்கமம் 3.0 அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கேடிஎஸ் 3.0-வின் மையக்கருவாக அமைந்துள்ள அகத்தியரின் பெருமைகளை எடுத்துரைத்தார். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. வரும் பிப்ரவரி 15 முதல் 24 தேதிகள் வரையிலான நிகழ்ச்சியில் மையக்கருவாக அகத்தியர் இடம் பெற்றுள்ளார்.இதற்கான அறிவிப்பை இன்று டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் மோடி இந்திய மாநிலங்களின் கலாச்சாரங்களை இணைக்கும் பணியை செய்து வருகிறார். இந்தவகையில், காசியுடன் தமிழகத்துக்கு இருக்கும் பாரம்பரியக் கலாச்சாரத் தொடர்புக்கு புனர்ஜீவிதம் அளிக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமத்தை துவக்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆர்பிசி), அரசின் முன் அனுமதி பெறாமல், அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. முன்பு, அரசு ஊழியர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குத் தொடர்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. அவை சிபிஐ மற்றும் மாநில காவல் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கே கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பின்படி கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திச...

2024 தேர்தல் குறித்து தவறான தகவல்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டம்!

புதுடெல்லி: இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் “தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது. எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும் அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இந்தத் தவறுக்காக மெட்டா நிறுவனம் இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தலுக்காக நன்கொடை திரட்டும் ஆதிஷி: 24 மணி நேரத்தில் ரூ.19 லட்சம் குவிந்தது

டெல்லி முதல்வர் ஆதிஷி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இணையவழியில் நன்கொடை திரட்டுகிறார். அவருக்கு 24 மணி நேரத்தில் ரூ.19 லட்சம் குவிந்தது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் ஆதிஷி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக ரூ.40 லட்சம் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, இணையவழியில் நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். அடுத்த 24 மணி நேரத்தில் 455 பேர் ரூ.19,32,728 நன்கொடை வழங்கி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஜனவரி 14, 15-ல் பொங்கல் விழா கொண்டாட்டம்

புதுடெல்லி: டெல்லியில் தமிழக அரசின் சார்பில் 14 (நாளை) மற்றும் 15 ஜனவரி, 2025-ல் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு அக்கட்டிடம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயாராகி வருகிறது. தமிழக அரசின் சார்பில் இந்த பொங்கல் விழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஜனவரி 14-ல் 21 பானைகளில் பொங்கலிடும் பெரும் பொங்கல் நிகழ்வு நடைபெறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகளவில் பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது அசாம்

இந்த ஆண்டில் பார்க்க வேண்டிய முதல் 52 இடங்கள் பட்டியலில் அசாம் மாநிலம் 4-ம் இடம் பிடித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அழகு, உயர்வான கலாச்சாரம், பசுமையான தேயிலை தோட்டங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அசாம் மாநிலம், இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவம் கிடைப்பது நிச்சயம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்: தேசிய இளைஞர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

விவேகானந்தரின் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவோம் என தேசிய இளைஞர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல்’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துடிப்பான இளைஞர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று

திப்ரூகர்: சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவி வருகிறுது. இந்த வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை திப்ருகார் நகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் துருவஜோதி புயான் நேற்று கூறும்போது, “காய்ச்சல், சளி காரணமாக 10 மாத குழந்தையை 4 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தக் குழந்தையின் சளி, ரத்த மாதிரி பரிசோதனைக்காக இந்திய மருத்துவ கவுன்சிலின் மண்டல ஆய்வகத்துக்கு (ஐசிஎம்ஆர்) அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சோதனையில் எச்எம்பிவி தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த வைரஸ் வழக்கமானதுதான். இதுபற்றி அச்சப்படத் தேவையில்லை” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World,...

போதைப் பொருள் பற்றி தகவல் கூறிய 970 பேருக்கு குஜராத்தில் ரூ.11 கோடி பரிசு

கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு ரூ.11 கோடிக்கு மேல் குஜராத் அரசு பரிசு வழங்கியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20 சதவீதத்தை பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. இதன்படி கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் அளித்த 970 பேருக்கு ரூ.11 கோடிக்கு மேல் குஜராத் அரசு பரிசு வழங்கியுள்ளது. இவர்களில் 64 பேர் டிஜிபி தலைமையிலான குழு மூலமாக ரூ.51,202 பரிசு பெற்றனர். 169 பேர் உள்துறை மூலமாக ரூ. 6,36,86,664 பரிசு பெற்றுள்ளனர். 737 பேர் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மூலம் ரூ.5,13,40, 680 பரிசு பெற்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி எல்லை போராட்ட களத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

பட்டியாலா: டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில் மேலும் ஒரு விவசாயி நேற்று தற்கொலை செய்து கொண்டார். டெல்லியின் ஷம்பு மற்றும் கன்னவுரி எல்லையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ரிஷபம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்ல போய் சிலர் தவறாக புரிந்து கொள்வர். உடல் நலத்திலும் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொதுமறையான திருக்குறளை பரப்ப உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள்: பிரதமர் மோடி உறுதி

உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல்முறையாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் நலத்திட்டங்கள் அறிவிக்க கூடாது: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பட்ஜெட்டில் டெல்லி யூனியன் பிரதேசத்துக்குரிய அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் கடும் கூட்ட நெரிசல்: சேலம் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன உ.பி. பெண்

கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜு, ஹர்தோய் மாவட்ட போலீஸில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளர். அதில் தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி ராஜேஸ்வரி, அதே பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் என்பவருடன் ஓடி விட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி ஜெகஜித் சிங்கின் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு

உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங்கின் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கக் கோரி, பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கானிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி இரவு பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள், பெண்கள் என 46 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலால் ஏழு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்