Skip to main content

Posts

Showing posts from June, 2021

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின்பெயரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் முதல் முறையாக, நேற்று காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லம் வந்தார்.அங்குள்ள அண்ணாவின் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்களைப் பார்வையிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரூ. 2 கோடியில் காசநோய் கண்டறியும் ஆய்வகம்: மருத்துவ துறை அமைச்சர் திறந்துவைத்தார்

தாம்பரம் சானடோரியத்தில் உள்ளஅரசு நெஞ்சக மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காச நோய் ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தாம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே ஊர்தி வழங்கப்பட்டது. அந்த ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, மருத்துவ கண்காணிப்பாளர் இரா.தர் மற்றும் மருத்துவஅலுவலர்கள் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை மாநகராட்சியில் 746 தற்காலிக பதவிகள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக 1,896 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. மாநகராட்சியின் செலவீனத்தை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,896 பதவிகளில் 1,150 பதவிகள் அவசியம் இல்லாததாக கருதி கடந்த 2012-ம் ஆண்டு 746 தற்காலிக பதவிகளாக குறைக்கப்பட்டது. இப்பதவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் பெருகி வரும் நிலையில், இப்பதவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு மாநகராட்சி சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாரபட்சமின்றி மீட்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9 - 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல்

ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திரா – தெலங்கானா இடையே தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து நீண்ட ஆலோசனை நடந்தது. இதில் முதல்வர் ஜெகன் பேசும்போது, “ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் தெலங்கானா அரசு மின்சாரம் தயாரிக்கிறது. தண்ணீர் பங்கீட்டிலும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. இப்பிரச்சினை குறித்து கிருஷ்ணா நதிநீர் வாரியத்துக்கு நீங்கள் கடிதம் எழுதுங்கள். பிறகு இதுகுறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதுகிறேன்” என்றார். இதையடுத்து பல்வேறு முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விஐபி தொலைபேசி எண் தருவதாக கூறி ரூ.1.43 கோடி மோசடி செய்தவர் கைது

விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.43 கோடி வரை மோசடி செய்த நபரை அகமதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் ஒருநபர் ரூ.1.43 கோடி வரை மோசடி செய்ததாக, சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக அரசு தற்காலிக இடம் வழங்கினால் எய்ம்ஸ் வெளிநோயாளிகள் பிரிவு மதுரையில் தொடங்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தமிழக அரசு தற்காலிக இடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க ஆர்வமாக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்

மாணவிகள் அளித்த பாலியல்புகாரின்பேரில் திருச்சியில்உள்ள பிரபல தனியார் கல்லூரி பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் நேற்று பணியிடை நீக்கம் செய்துள்ளது. திருச்சி, புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் (அரசு உதவி பெறும்) தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர் பால் சந்திரமோகன் (55). இவர், தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி முதுநிலை தமிழ்த் துறை மாணவிகள் 5 பேர், கல்லூரியின் உள் புகார் குழுவில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பயணிகளின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக 100 விரைவு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல்

தமிழகத்தி்ல் கரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 28-ம் தேதி முதல் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், அரசு உத்தரவுப்படி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்நாளில் நகரப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அப்போலோ மருத்துவமனைகள் சார்பில் நாடு முழுவதும் 50 நகரங்களில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சென்னையில் முகாம் தொடக்கம்

இந்தியா முழுவதும் அப்போலோ மருத்துவமனைகள் சார்பில் 50 நகரங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி, சீயோன் மெட்ரிக். பள்ளி, வானகரம் அப்போலோ மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலேயே கரோனா தடுப்பூசி அனுப்புகிறது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார்

சென்னை பெரியமேட்டில் உள்ளமத்திய அரசின் மருந்து கிடங்கிலிருந்து 2.50 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பெற்றுக் கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி இல்லாத நிலையில், மத்திய அரசிடம் முதல்வர் பேசி வந்தார். இதைத்தொடர்ந்து பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஹைதராபாத், புனே போன்ற பகுதிகளில் இருந்துதான் சென்னைக்கு தடுப்பூசி வரும். ஆனால் அவசரத்துக்கு இங்குள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதால், துறையின் அலுவலர்கள் இங்கிருந்து தடுப்பூசிகளை எடுத்து தமிழகம் முழுவதும் அனுப்புவதற்கான ...

தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்: சென்னை ஐஐடி-க்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் சென்னை ஐஐடி போன்ற நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடியில் இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீடுஉருவாக்கப்பட்டுள்ளது. அதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று பார்வையிட்டார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆவினில் முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை: பால்வளத் துறை அமைச்சர் நாசர் உறுதி

ஆவினில் நடைபெற்ற முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஆவின் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் நாசர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் நியமனம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

தமிழக ஆளுநர்மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஆர் ஜெகநாதனைபல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். ஜெகநாதன்பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். பேராசிரியர் ஜெகநாதன் 39 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் டீன் ஆகவும், வேளாண் வானிலை துறை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக கல்விக்குழு தலைவராகவும், உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் புனித நகரங்களுக்கு இடையே கடல் விமான சேவை: மதுரா, சித்தரகுட், காசி, அலகாபாத், அயோத்திக்கு பயணம் செய்யலாம்

உத்தரபிரதேசத்தின் புனித நகரங்களுக்கு இடையே கடல் விமானச்சேவை துவங்க உள்ளது. பயணிகள் மதுரா, சித்தரகுட், காசி எனும் வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தி நகரங்களுக்கு இதில் ஏறிப் பயணம் செய்யலாம். நாட்டிலேயே முதல் முறையாகக் கடல் விமானத்தின் சேவை, குஜராத்தில் துவங்கப்பட்டது. இதை கடந்த வருடம் அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்திருந்தார். சுற்றுலாபயணிகளுக்காக என இந்த கடல் விமானம், கேவடியாவிலிருந்து சபர்மதி வரை 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தந்தை கருணாநிதி தொடங்கி வைத்த ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்தார் மகன் மு.க.ஸ்டாலின்

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலும் இதன் கிளைகள் அமைந்துள்ள நிலையில், கடந்த 1996-ம்ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக வெளிநாட்டுக் கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் கால் பதித்தது. அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. மத்திய அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் முரசொலிமாறன். இவர்களின் தீவிர முயற்சியால் 1996-ம் ஆண்டிலேயே ரூ.3,500கோடி என்ற பெரிய அளவு முதலீட்டில் சென்னை ஸ்ரீபெரும்புதூரைஅடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமைந்தது ஹூண்டாய் கார்தயாரிப்பு தொழிற்சாலை. இதற்காக 500 ஏக்கர் நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு தினமும் 2 வேளை உணவு விநியோகம்: மனநிறைவு தருவதாக கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உருக்கம்

கரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு 2 வேளை இலவச உணவு வழங்கியது மனநிறைவு தருவதாக கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். சிறப்பான பணி மற்றும் மனித நேயம் கொண்ட போலீஸ் அதிகாரி என பெயர் பெற்றவர் தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ். 2017-ம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் பணி நிறைவு செய் தவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி: பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வசதி அளிக்கும் பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பங்கேற்போடு (பிபிபி) இத்திட்டம் நிறைவேற்றப்படும். நாட்டில் 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் நவம்பர் வரை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க 198 டன் உணவு தானியம் ஒதுக்கீடு

ஏழை எளியமக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 198 டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத் திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊரடங்கால் வேலை இழந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா? மத்திய அரசு விளக்கம்

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று வதந்திகள் பரவிவரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று, "கரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. சிலர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஆண், பெண் என இருபாலருக்குமே மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்று தகவலைப் பரப்பப்புகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவசங்கர் பாபாவை பள்ளிக்கு அழைத்து வந்து விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில், சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கடந்த 16-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அறநிலையத் துறையில் உள்ள தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோயிலில் நடக்கும் அன்னதான திட்டம், தூய்மைப் பணிகள் மற்றும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பன குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த 3-வது கொள்ளையன் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட, 3-வது கொள்ளையனும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.50 லட்சத்தில் கரோனா தடுப்பூசி வாகனம்: மாநகராட்சிக்கு மெட்ராஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது

மெட்ராஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனம் சென்னை மாநகராட்சியிடம் நேற்று வழங்கப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் கபில் சித்தலே, நடமாடும் தடுப்பூசி வாகனத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார். பின்னர், அந்த வாகனத்தின் சேவையை ஆணையர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவையில் குழந்தைகளை கொன்ற குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தவர் சைலேந்திரபாபு

தமிழக காவல்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சி.சைலேந்திரபாபு, 2010-ம் ஆண்டு கோவையில் மாநகர ஆணையராக இருந்தபோது குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை அதிரடியாக என்கவுன்ட்டர் செய்தவர் ஆவார். அப்போது இந்த விவகாரம் மாநில அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூடங்குளத்தில் ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது; 5, 6-வது அணு உலை கட்டும் பணி தொடக்கம்: 2027-ல் மின்உற்பத்தி தொடங்க திட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மற்றும்6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் பூமிபூஜையுடன் நேற்று தொடங்கின.ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் 2027-28ல் மின்உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் முதல் அணு உலையில் 2013-ம் ஆண்டு அக்.22-ம் தேதியும், 2-வது அணு உலையில் 2016-ம் ஆண்டு அக்.15-ம் தேதியும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு 950 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.29-க்கு விற்கப்படுகிறது. தற்போது முதல் உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

வெப்பச் சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். ஜூலை 1, 2-ல் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். பிற வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யில் டெல்டா பிளஸ் ஆய்வகம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் சுதா சேஷய்யன், பதிவாளர் அஸ்வத்நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரிநீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கடந்த 20-ம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகியஅணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவின் அளவு குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்டா பிளஸ் தொற்று என நாடகமாடி ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் கைது

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பத்வேல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவரது மனைவி பொறியாளர் புவனேஸ்வரி(27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். இவர்கள் திருப்பதி டிபிஆர் சாலையில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி முதல் புவனேஸ்வரியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், அவர்களது வீட்டார், ஸ்ரீகாந்திடம் போன் மூலம் கேட்டதற்கு, ”புவனேஸ்வரிக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். இதில் அவர் மரணமடைந்தார். அவர்கள் எனக்கு கூட உடலை காண்பிக்காமல் எரித்து விட்டனர்” என்று நாடகமாடினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லக்னோவில் ரூ.45 கோடியில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல்

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.45 கோடி செலவில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அடிக்கல் நாட்டினார். லக்னோவில் உள்ள அய்ஷ்பாக் பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு இல்லத்தை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி நிலபேர ஊழல் விவகாரம்: ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸில் ஆம் ஆத்மி கட்சி புகார்

அயோத்தில் ராமர் கோயிலுக்காக நிலம் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் இதுதொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் உள்ளிட்ட 9 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பிற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையானது கோயிலுக்கான நிலங்களை விலைக்கு வாங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நன்கொடையில் வாங்கப்படும் இவற்றில் நிலப்பேர ஊழல் புகார் எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி - உத்தவ் தாக்கரே உறவு: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இடையிலான உறவு வேறு அரசியல் வேறு என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, கடந்த ஜூன் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உத்தவ் தாக்கரே முன்வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் ரூ.18 ஆயிரத்துக்கு விலை போன மெகா நத்தை

ஆந்திராவில் மீனவருக்கு கிடைத்த சங்கு வடிவிலான மெகா நத்தை ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், உப்பாடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது ஜெகன்நாதம் என்ற மீனவரின் வலையில் மீன்களுடன் சேர்ந்து பெரிய சங்கு ஒன்றும் சிக்கியது. இதனை கரைக்கு கொண்டு வந்து பார்த்ததில், அது சங்கு அல்ல; ஒரு மெகா நத்தை என்பது தெரியவந்தது. கடல்வாழ் நத்தையிலேயே இது மிக பெரிய நத்தை இனமாக கருதப்படுகிறது. இவை ‘சிரிங்ஸ் அரோனாஸ்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இது 18 கிலோ வரை வளரும் தன்மையுடையது ஆகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணவரைப் பிரிந்து எலுமிச்சை ஜூஸ் விற்ற பெண்: காவல் துறை உதவி ஆய்வாளராகி சாதனை

கேரளாவில் கணவரைப் பிரிந்து எலுமிச்சை ஜூஸ் விற்று வாழ்க்கையை ஓட்டிய பெண் ஒருவர், காவல் துறை உதவி ஆய்வாளராகி சாதனை படைத்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்தவர் சிவானந்த். இவரது மகள் ஆனி. காஞ்சிரங்குளம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியினர் பிரிந்துவிட்டனர். அப்போது ஆனிக்கு 8 மாதத்தில் கைக்குழந்தை இருந்தது. 19 வயதிலேயே கைக்குழந்தையுடன் கணவனைப் பிரிந்த ஆனியை, காதல் திருமணம் செய்த கோபத்தில் பெற்றோரும் கைவிட்டனர். இதனால் தனது பாட்டியின் கூரை வீட்டில் குழந்தையுடன் வசித்தார் ஆனி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களின் தற்போதைய குறைகள் ஏற்புடையதல்ல: நாடாளுமன்ற நிலைக்குழு கருத்து

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்பக் கொள்கையின்படி சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தற்போதைய குறைகள் ஏற்புடையதாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சசி தரூர் முன்னிலையில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் நேற்று ஆஜராகி கருத்துகளைத் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுபோல, கரோனா தொற்று நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றுபோக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளை தெளிவுரையுடன் பதிவுசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் வெவ்வேறு திருக்குறள் இடம்பெற்றிருக்கும். தற்போது போக்குவரத்துத் துறை ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த 2 ஆயிரம் நெல் மூட்டை பறிமுதல்: 7 பேர் கைது; 7 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் துணையுடன் விற்பனை செய்வதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு, வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கண்காணித்து தடுக்கும் வகையில், துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர், தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் அமைச்சருக்கு கரோனா தொற்று

முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அதிமுகச் செயலருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எனது இல்லத்தில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்