Skip to main content

Posts

Showing posts from November, 2023

திரிணமூல் எம்எல்ஏ, கவுன்சிலர் வீடுகளில் சிபிஐ சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ, 2 கவுன்சிலர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோம்கால் தொகுதி எம்எல்ஏ ஜஃபிகுல் இஸ்லாம், கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலர் பபாதித்யா தாஸ்குப்தா, பிதான்நகர் மாநகராட்சி கவுன்சிலர் தேப்ராஜ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் மருந்தகம் எண்ணிக்கை 25,000 ஆக அதிகரிக்கிறது: திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் மக்கள் மருந்தகம் எண்ணிக்கையை 10,000-ல்இருந்து, 25,000 ஆக உயர்த்தும் திட்டம், மகளிர் ட்ரோன் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் முன்னணி திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை மேலும் செறிவூட்டும் நோக்கில் ‘வளர்ந்த இந்தியா சபத யாத்திரை’ (விக்‌ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாத: மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேரணியில் அவர் பேசியதாவது: இந்த பிரம்மாண்ட பேரணியில் அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களின் மனநிலையை குறிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தை சீரழித்து விட்டார். வரவிருக்கும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இங்கு ஆட்சிக்கு வரும். அதற்கு முன்னதாக 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறுவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நான் வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்கு செல்வேன்: சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் கருத்து

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்கு செல்ல உள்ளேன் என சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 12-ம் தேதி திடீரென மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்காக, சர்வதேச சுரங்க நிபுணரும் ஆஸ்திரேலிய பேராசியருமான அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கேயே தங்கியிருந்து மீட்புக் குழுவுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினார். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: 119 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்,தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் டிச.3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்: பிரதமரிடம் 41 தொழிலாளர்கள் நன்றி

புதுடெல்லி/ டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் மருத்துவ பரிசோதனைக்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பிரதமர் மோடியிடம் அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா அருகே சுரங்கப் பாதையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கடந்த 12-ம் தேதி சுரங்கத்துக்குள் சிக்கினர். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகளை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பிறகு, 41 பேரும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அந்த 17 நாட்கள் | சுரங்கத்தில் இருந்து மீண்டு சுதந்திரமாய் ஒரு பெருமூச்சு!

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். உத்தராகண்டின் உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி செல்ல106 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிஉள்ளது. இதை 26 கி.மீ. ஆக குறைக்கும் விதமாக, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ.தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 2 கி.மீ. வரை சுரங்கம் தோண்டப்பட்ட நிலையில், கடந்த 12-ம் தேதி தீபாவளியன்று அதிகாலை சுரங்கப் பாதையின் நுழைவுவாயிலில் இருந்து 200 மீட்டர்தொலைவில் திடீரென மண்சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையை மண் மூடியது. உள்பகுதியில் சுமார்ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு மண் சரிவு ஏற்படாததால், அப்பகுதியில் தொழிலாளர்கள் பத்திரமாக இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World,...

“அற்புதமான முன்மாதிரி” - சுரங்க மீட்பு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: “ உத்தரகாசியில் சிக்கியிருந்த நமது தொழிலாளர் சகோதரர்கள் மீட்கப்பட்டது நம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியின் ஹீரோ- யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்? 

டேராடூன்: 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் இன்று மீட்கப்பட்டனர். இந்த அபார மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ். யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்? - பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வரும் டிக்ஸ், உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமி...

“இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” - மீட்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி

டேராடூன்: கடந்த தீபாவளி (நவ.12) அன்று உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், இன்றுதான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று சுரங்க தொழிலாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டனர். இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த அவர்களது உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கித் தவிக்கும் 41 பேரை மீட்க ‘எலி வளை' தொழிலாளர்கள் தீவிர முயற்சி

டேராடூன்: உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க 16-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி தொடர்ந்தது. சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருக்கிறது. இதில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மணல் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. இன்னும் 13 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டிய நேரத்தில் இயந்திரம் உடைந்தது. அந்த இயந்திர கழிவுகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற 7 பேர் குழு மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்தகுழுவினர் அமெரிக்க இயந்திரத்தின் 14 மீட்டர் நீளம் கொண்ட பிளேடு கழிவுகளை சேகரித்து அகற்றினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்காதீர்கள். வழக்குகள் இழுபறியாக வாய்ப்பு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த டிசம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை ஆளும் பாஜக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரீக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷியா ஆகிய 3 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள் ளும் என்று தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை

புதுடெல்லி : அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். ரிஷபம்: செலவை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதை | 41 பேரை மீட்க களமிறங்கியது ராணுவம்: 86 மீ ஆழத்துக்கு செங்குத்தாக துளையிடும் பணி தொடக்கம்

டேராடூன் : உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கி உள்ளது. அப்பகுதியில், பக்கவாட்டில் துளையிட்ட ஆகர் இயந்திரம் பழுதடைந்ததால், செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கி உள்ளது. உத்தராகண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில்,41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி: வீடியோ, படங்கள் வெளியீடு

பெங்களூரு: இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் 'தேஜஸ்' இலகு ரகு போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்: ராஜஸ்தானில் 70% வாக்குப் பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 70% சதவீத வாக்குகள் பதிவாகின. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,756 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.25 கோடி. இந்த தேர்தலில் 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.70 லட்சத்துத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். இங்கு வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் உற்சாகத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பல்கலை. இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் உயிரிழப்பு @ கொச்சி

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (CUSAT) வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 55-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் திறந்தவெளியில் நடைபெற்ற பாடகர் நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது மழை பொழிந்து உள்ளது. அதை தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கரன் தெரிவித்தார். பல்கலைக்கழக கலை விழா அங்கு நேற்று தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - ஆந்திர முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2004 முதல் 2009 வரை ஆந்திர முதல்வராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் ஜெகன்மோகன் தனது வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி சொத்துகளை சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜெகன்மோகனை சிபிஐ கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் கைது செய்தது. 15 மாதங்களுக்கு பிறகு ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் இருந்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெகன் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2019-ல், ஜெகன் ஆந்திர முதல்வராக பதவியேற்ற பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டீப்ஃபேக் தொழில்நுட்ப பிரச்சினை - சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு 7 நாட்கள் கெடு

புதுடெல்லி : டீப்ஃபேக் தொழில்நுட்ப பிரச்சினையில் சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை 7 நாட்கள் கெடு விதித்துள்ளது. டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான முறையில் வீடியோ, புகைப்படங்களில் ஒரு நபரை தவறாக சித்தரிப்பது அல்லது ஆள்மாறாட்டம் செய்வதாகும். சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தவறாக சித்தரித்து போலி வீடியோக்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டீப்ஃபேக் வீடியோக்களை தடுக்க புதிய சட்டம்: மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி : சமூக வலைதளங்களில் டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகிற நிலையில், அவற்றைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போலி புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப்ஃபேக்’ என்று அழைக்கப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விநாடிக்கு 2,700 கனஅடி நீர் காவிரியில் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடெல்லி/ பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் டிச‌ம்பர் மாத இறுதி வரை விநாடிக்கு 2,700 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த அக்.30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நவ.22-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, இதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. இருப்பினும், தமிழகத்துக்கு விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீரை திறந்துவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம்

புதுடெல்லி : காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், க‌ர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் ,விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரப்பட உள்ளது. காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த அக்.30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில்,நவ.22-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு2,600 கனஅடி நீரை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதை | ”காலை 8 மணிக்குள் பணிகள் முடியலாம்” - தேசிய பேரிடர் மீட்பு படை நம்பிக்கை

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எப்படியும் அடுத்த சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவலை மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் துளையிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரும்பு குழாய்களும் அதில் பொருத்தப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் ராணுவ அதிகாரிகள் என்றும், 2 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜோரி பகுதியில் நடைபெற்று வரும் இந்த என்கவுன்டரில் அவர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிறப்புப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கடந்த 19-ம் தேதி நிகழ்விடத்துக்கு விரைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இறுதிக்கட்டத்தில் உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணி: தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எப்படியும் அடுத்த சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவலை மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் துளையிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரும்பு குழாய்களும் அதில் பொருத்தப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடிசாவில் 3 புதிய ரயில் சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு

பாதம்பஹர்: ஒடிசாவில் 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாதம்பஹர் ரயில் நிலையத்தில் இருந்து 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி பாதம்பஹரிலிருந்து முர்முவின் பிறந்த இடமான உபர்பேடாவுக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ள ராய்ரங்பூருக்கு தொடங்கிவைக்கப்பட்ட ஒரு ரயிலில் குடியரசுத் தலைவர் பயணம் செய்து தனது பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் தனது வாழ்நாளில் கணிசமான நேரத்தை ராய்ரங்பூரில்தான் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர்: கேமரா முன்பு பேசும் காட்சி வெளியாகியுள்ளது

உத்தரகாசி: உத்தராகண்டில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான முதல் வீடியோ வெளியாகியுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள் வேலை செய்துகொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல: கரோனா தொடர்பான ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

சென்னை: இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இளம் வயதில், குறிப்பாக18-45 வயதினரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“உலகக் கோப்பை இறுதிப் போட்டி லக்னோவில் நடந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்” - அகிலேஷ் யாதவ்

எட்டாவா: உலகக் கோப்பை இறுதிப் போட்டி லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இந்த சூழலில் இது குறித்து அரசியல் ரீதியாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் அகிலேஷ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சர்வதேச குழு தீவிரம்: செங்குத்தாக துளையிட 2 இடங்கள் தேர்வு

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். 9-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி தொடர்ந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் உத்தராகண்ட் சுரங்கப் பாதையை நேற்று நேரில் ஆய்வு செய்தார். சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவரான அவர் நிருபர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த பிறகு 10 மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? - தமிழக ஆளுநருக்கு தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்த பிறகு 10 மசோதாக்களையும் தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன் என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைத்த மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம்செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதுபோல, கேரளா, பஞ்சாப் ஆளுநர்களுக்கு எதிராகவும் அந்தந்த மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு: தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு மற்றும் தகவல் தொடர்புக்காக வாக்கி டாக்கியும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, பக்கவாட்டில் இயந்திரம் மூலம் துளையிட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது குறித்து யோசிப்பீர்கள். ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். ஆன்மிக நாட்டம் கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத், ராஜஸ்தானில் 5 கோயில்களை காண பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்

சென்னை: தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ரயில்வே சார்பில், பாரத் கவுரவ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி நாகர்கோவில் இருந்து வரும் டிச.10-ம் தேதி புறப்படும் பாரத் கவரவ் சுற்றுலா ரயில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் செல்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாதீஷ் கோயில், ராஞ்சோத்ரைஜி கோயில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத் ஜி கோயில், துவாராகாதீஷ் கோயில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“என்றும் உங்கள் பக்கம் நிற்போம்” - இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்வீட்

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் இந்திய அணிக்கு எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து ஆறுதல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய அணி முதலில் பேட் செய்து 240 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அரைசதம் கடந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர். இருந்தும் ஹெட் மற்றும் லபுஷேன் இணைந்து 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதன் மூலம் ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாதுகாப்பு அகாடமியில் பெண் அதிகாரிகள் முதன்முறை அணிவகுப்பு

புனே: வரும் 30-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே கடக்வாஸ்லாவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பில், முதன்முறையாக பெண் பயிற்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தற்போது இரண்டாம் ஆண்டு பயிற்சியில் உள்ளனர். இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். முதல் பேட்ச்சில் 19 பெண் பயிற்சி அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் பயிற்சி முடிந்து பட்டம் பெறுவர். தற்போது 2-ம் ஆண்டு பயிற்சியில் இருக்கும் அவர்கள், 30-ம் தேதி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தீவிரவாதிகள் தலைதூக்குகிறார்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 1.5 லட்சம் பொது கழிவறைகளை சுத்தம் செய்யும் திட்டம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள 1.5 லட்சம் கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. உலக கழிவறை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘பாதுகாப்பான சுகாதார மாற்றத்தை முடுக்கி விடுதல்’ என்பது உலக கழிவறை தினத்துக்கான இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது. இதையொட்டி, ‘சுத்தமான கழிவறை சவால்’ என்ற இயக்கத்தை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 கோடி மக்களை சென்றடைந்த பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) 100 கோடி மக்களை சென்றடைந்துள்ளதாக ரோத்தக் ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிரிக்கெட்டிலும் அரசியல்... - இந்திய அணியை வைத்து பன்முகத்தன்மை பாடமெடுத்த காங்கிரஸ்

புதுடெல்லி : வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டி யில் விளையாட உள்ளன. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியை அடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். இதனிடையே, இந்திய அணியின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வரைபடம் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வரைபடத்தில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இடம்பெற்று உள்ளன. அதன் கூடவே அப்பதிவில், from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்!

ஹைதராபாத் : பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக் கொண்டார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜக வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டுவந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாள் 6 - சுரங்கப் பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பின்னடைவு @ உத்தராகண்ட்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப்பாதை யில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆறாவது நாளான இன்று இந்தப் பணியில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தயாரிப்பு துளையிடும் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை சொருக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியின்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணியை தொடர முடியவில்லை எனத் தெரிகிறது. மேற்கொண்டு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத காரணத்தால் மீட்புப் பணியில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தத்து கொடுத்தபின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வது சரியல்ல: மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: தத்து கொடுத்த பின்பு, பாலியல்வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்வது, அந்த குழந்தையின் நலனுக்கு நல்லதல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடக்கு மும்பையின் ஒசிவாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த2020-ம் ஆண்டு 17 வயது சிறுமியுடன் பழகி அவரை கர்ப்பமாக்கினார். இதையடுத்து அந்த நபரைபோலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை ஒரு தம்பதி தத்து எடுத்து வளர்த்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

10 லட்சம் பேருக்கு 100 எம்பிபிஎஸ் சீட் திட்டம் ஓராண்டுக்கு தள்ளிவைப்பு

புதுடெல்லி: பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற திட்டம் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இளங்கலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அதாவது 10 லட்சம் மக்கள் தொகைக்கு100 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. இந்த திட்டத்தால் தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை காப்பாற்ற அமெரிக்க இயந்திரம் மூலம் மீட்பு பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மற்றொரு குழாய் வழியாக உணவு பொருட்கள், குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 5.6 கோடிவாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.88 கோடி பேர் ஆண்கள். 2.72 கோடி பேர் பெண்கள். இந்த தேர்தலில் 22.36 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகளுக்கு 15-வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி விடுவிப்பு; பழங்குடியினருக்கு ரூ.24,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கினார்

குந்தி: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் உலிஹட்டு கிராமத்தைச் சேர்ந்தபிர்சா முண்டா சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது பிறந்த நாள் (நவம்பர் 15-ம் தேதி) ‘ஜன்ஜதியா கவுரவ் திவஸ்’ (பழங்குடியினர் பெருமை தினம்) என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய அரசு கடந்த 2021-ல்அறிவித்தது. நவ. 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தொடங்கப்பட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 3-வது பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு பிர்சா முண்டாவின் சொந்த ஊரான உலிஹட்டுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன்மூலம் பிர்சா முண்டாவின் சொந்த ஊருக்கு நேரில் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது. பின்னர், பிர்சா முண்டா சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்