Skip to main content

Posts

Showing posts from November, 2024

சராசரி திருமண செலவு ரூ.36.5 லட்சமாக உயர்வு: ‘வெட்மிகுட்’ நிறுவனம் ஆய்வு அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டில் திருமண செலவு சராசரியாக 7% அதிகரித்து ரூ.36.5 லட்ச​மாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. திருமண வைபவம் ஆண்டு​தோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. இதனால் இதற்கான செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ‘வெட்​மிகுட்’ நிறு​வனம் 3,500 தம்ப​தி​களிடம் கருத்துகளை கேட்டு ஒரு ஆய்வு நடத்​தி​யது. இதில் 9% பேர் தங்கள் திரு​மணத்​துக்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவிட்​டதாக தெரி​வித்​தனர். மேலும் 9% பேர் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவிட்​டதாக தெரி​வித்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா - ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வாங்க 3 நாடுகள் விருப்பம்

புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்​நாம், இந்தோ​னேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரி​வித்​துள்ளன. இந்தியா​வும் ரஷ்யா​வும் இணைந்து பிரம்​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை தயாரித்​துள்ளன. இந்தியா​வின் டிஆர்டிஓ ரஷ்யா​வின் என்பிஓ ஆகியவை இணைந்து இதை தயாரிக்​கின்றன. இந்தியா​வின் பிரம்​மபுத்ரா மற்றும் ரஷ்யா​வின் மோஸ்கா ஆறுகளின் பெயரை தழுவி பிரம்​மோஸ் என பெயரிடப்​பட்​டுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம்: மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம்

பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் சவுண்டாலா கிராமம் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்த கிராமத்தில் 1,800 பேர் வசிக்கின்றனர். மகாராஷ்டிராவின் முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக சவுண்டாலா போற்றப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் எவ்வித மோதலும் இல்லாத கிராமம் என்ற விருதை சவுண்டாலா பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமருக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பா? - சமூக வலைதளத்​தில் வைரலாகும் புகைப்​படம்

பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் பயணமாகும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை வழங்குவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசுக்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வருவாய்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.1.44 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: தேசிய நெடுஞ்சாலைகளில் பிபிபி எனப்படும் பொது தனியார் பங்களிப்பு மாடல் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடமிருந்து கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி சுங்க கட்டணமாக மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்பு

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு வழக்​கறிஞர் சங்கத்​தின் சார்​பில் கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா குடிமை​யியல் நீதி​மன்ற வளாகத்​தில் நேற்று​முன்​தினம் நடைபெற்​றது. இதில் சிறப்பு விருந்​தினராக பங்கேற்ற கர்நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி எம்.ஐ.அருண் பேசுகை​யில், “பெங்​களூரு கன்டோன்​மென்ட் பகுதி​யில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்​களுக்கு அடிமை​களாக இருந்​தனர். ஆனால் கன்னடர்கள் ஒருபோதும் அவர்​களுக்கு அடிமையாக இருக்க​வில்லை. மொழி என்பது ஒரு மாநிலத்​தின் எல்லையை தீர்​மானிக்​கும் விஷயமாக இருக்​கிறது. பெங்​களூரு​வில் சில இடங்​களில் பிற மொழி​யினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்​கிறது. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக்​கொண்டு, கன்னடத்​திலே பேச வேண்​டும்” என்று பேசினார். இவரது பேச்சு கர்நாடக தமிழர்​களிடையே கடும் அதிருப்​தியை ஏற்படுத்​தி​யுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும்: வங்கதேச அரசுக்கு பவன் கல்யாண் கண்டனம்

அமராவதி: வங்​கதேசத்​தில் இந்துக்​களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங் கள் தொடர்ந்து நடைபெறு​வதுடன் பல இந்து கோயில்களும் அடித்து நொறுக்​கப்​பட்டு வருகின்றன. அடக்​கு​முறைகள் அதிகரித்து வரும் நிலை​யில், இஸ்கான் கோயில் மதகுருவான சின்மய் கிருஷ்ண தாஸை அந்நாட்டு போலீ​ஸார் டாக்கா விமான நிலை​யத்​தில் கைது செய்​துள்ளனர். இந்திய அரசு இந்த விவகாரத்​தில் தலையிட்டு தங்களின் மதகுருவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் அமைப்பு கோரியுள்ளது. இந்நிலை​யில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்​கல்​யாண் சமூக வலை​தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்துக்களை குறி வைத்து நடத்​தப்​படும் இதுபோன்ற நடவடிக்கைகளை அனைவரும் கூட்டாக சேர்ந்து கண்டிக்க வேண்​டும். இதற்காக நாம் போராட​வும் தயாராக இருக்க வேண்​டும். வங்கதேசத்​தில் இந்துக்​களுக்கு எதிராக நடக்​கும் இது போன்ற மதம் சம்பந்​தப்​பட்ட போராட்​டங்களை அந்நாட்டு அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். வங்கதேசம் உருவாக இந்திய ராணுவத்​தினர் பலர் உயிர் தியாகங்களை செய்​துள்ளனர் என்பதை அந்நாட்டு தற்காலிக அதிபர் கவனத்​தில் கொள்ள வேண்​டும். இவ்வாறு பவன் கல்யாண்...

பெங்களூரு காவல் நிலையத்தில் வீட்டு பணியாளர் கொல்லப்பட்ட வழக்கு: 4 காவலர்களை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்

பெங்களூரு: பெங்​களூரு​வில் கடந்த 2016-ம் ஆண்டு மகேந்திர சிங் (42) என்பவர் அவர் பணியாற்றிய வீட்​டில் ரூ.3.5 லட்சம் திருடியதாக ஜீவன் பீமாநகர் போலீ​ஸாரால் கைது செய்​யப்​ப‌ட்​டார். அவரை போலீ​ஸார் காவல் நிலை​யத்​தில் வைத்து கடுமையாக தாக்​கிய​தால் அவர் அங்கேயே உயிரிழந்​தார். இதுதொடர்பான வழக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்​றது. இந்த வழக்​கில் நீதி​மன்றம் நேற்று பிறப்​பித்த உத்தர​வில் கூறியிருப்பதாவது: மகேந்திர சிங் வழக்​கில் ஜீவன் பீமா நகர் காவல் நிலை​யத்​தின் தலைமை காவலர் அஜாஸ் கான், ​காவலர்கள் கேசவ்மூர்த்தி, மோகன் ராம் மற்றும் சிதப்பா பொம்​மனஹள்ளி ஆகியோர் மீதான கொலை குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்​டு உள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அஜ்மீர் தர்கா விவாகார வழக்கு: மூன்று தரப்புகளும் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராஜஸ்தானின் புகழ் வாய்ந்த அஜ்மீர் தர்கா, இந்துக்களின் சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த அஜ்மீர் சிவில் ஷெஷன்ஸ் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மூன்று தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அஜ்மீரில் சூபி ஞானியான காஜா மொய்னுத்தீன் சிஷ்தியின் பெயரில் ஒரு பழம்பெரும் தர்கா அமைந்துள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் பெருமளவில் வருகை புரிவது வழக்கம். இந்த தர்காவானது அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாகப் புகார் உள்ளது. ராஜஸ்தானின் முதல்வராக காங்கிரஸின் அசோக் கெல்லாட் இருந்தபோது இந்த புகார் அளிக்கப்பட்டது. இதை இந்துத்துவா அமைப்பான மஹராணா பிரதாப் சிங் சேனாவின் அப்போதைய தேசியத் தலைவரான ராஜ்வர்தன் சிங் பார்மர் கடந்த மே, 2022-ல் அளித்திருந்தார். அதில் ராஜ்வர்தன் சிங், தர்காவினுள் களஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியலமைப்பை பாதுகாப்போம் பிரச்சாரம்: ராகுல் காந்தி தொடங்கினார்

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. ஜனவரி 26 வரை 2 மாதங்களுக்கு இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேச கலவரத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு: சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏ மகன் மீது வழக்கு பதிவு

உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. மற்றும் எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கடந்த 19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பல் மாவட்டம் சந்தவுசி நகரில் ஹரிஹர் கோயில் இருந்தது. முகலாயர் காலத்தில் இந்தக் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு ஷாஹி ஜமா மசூதி கட்டப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும்” என கோரியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறைக்கு எலான் மஸ்க் பாராட்டு

இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை தொழிலதிபர் எலான் மஸ்க் பாராட்டி உள்ளார். அதேநேரம் அமெரிக்க தேர்தல் முறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது எப்படி’ என்ற ஒரு ஊடக செய்தித் தலைப்பின் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை நேற்று டேக் செய்துள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், “இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது. கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்கிறது” என பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ சூழ்ச்சியில் சிக்கிவிடக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

சட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பதே கிடையாது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்கி கொள்ளக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதன்படி 116-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: மோசமான தோல்வியைச் சந்தித்த சரத் பவார் கட்சி

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) மிக மோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளது. மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1978-ல் மகாராஷ்டிர மாநில முதல்வரானவர் சரத் பவார். இதன்மூலம் மகாராஷ்டிராவின் இளம் முதல்வர் (38 வயதில் பதவி) என்ற பெருமையை அவர் பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வளர்ச்சி, சிறந்த நிர்வாகத்தால் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தால் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இங்கு வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் வென்றிருக்கிறது. ஒன்றுபட்டால், நாம் இன்னும் உயர்வோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு’ - ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது எப்படி?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் இண்டியா கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தகர்த்து, இந்த மகத்தான வெற்றி சாத்தியமானதன் பின்புலம் பார்ப்போம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் இணைந்த இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லிக்குள் லாரிகள் நுழைவதை தடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசால் திணறி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியை சுற்றியுள்ள மாநிலங்களில், மாசு கட்டுப்பாட்டுக்கான "கிராப்" 4 விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க உச்ச நீதிமன்றம் நவம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டது. எக்காரணத்தைக் கொண்டும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி நகருக்குள் லாரி அத்துமீறி நுழைவது குறித்து டெல்லி அரசிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது, டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லாரிகள் நுழைவதற்கான பிரத்யேகமான 13 வழிகள் உட்பட, 113 நுழைவு வாயில்கள் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India ...

தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்கு தொடர்பாக ஜம்முவில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்குகள் தொடர்பாக ஜம்மு பிராந்தியத்தில் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவற்றை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஜம்மு பிராந்தியத்தில் ரியாசி, உதம்பூர், ராம்பன், தோடா, கிஸ்துவார் உள்ளிட்ட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின்​ பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மீதான நாடாளு​மன்ற கூட்டுக்​குழு​வின் (ஜேபிசி) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்​றது. அப்போது இதுதான் கடைசி கூட்டம் என்று ஜேபிசி தலைவரும் பாஜக உறுப்​பினருமான ஜெகதாம்​பிகா பால் தெரி​வித்​தார். இதற்கு இக்குழு​வில் இடம்​பெற்றுள்ள எதிர்க்​கட்சி உறுப்​பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது ஜேபிசி பதவிக்​காலத்தை நீட்​டிக்க வேண்​டும் என வலியுறுத்​தினர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டுகளும் தாக்கமும் - ஒரு தெளிவுப் பார்வை 

இந்தியாவின் முக்கியத் தொழிலதிபரும், இரண்டாவது பெரும் பணக்காரருமான கவுதம் அதானி மீது லஞ்சம் வழங்குதல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்திய அதிகாரிகளுக்கு 265 பில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க திட்டம் தீட்டியதாகவும், அமெரிக்காவில் நிதி திரட்டுவதற்காக அதனை மறைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றை அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், வழக்கறிஞர்கள் அலுவலகம் பதிவு செய்துள்ளன. குற்றச்சாட்டுகள் என்னென்ன? : துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களில் முத்திரைப் பதித்து வருபவர்தான் அதானி குழும நிறுவனத் தலைவரான 62 வயது கவுதம் அதானி. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராகவும் உள்ள கவுதம் அதானி, அவரது மருமகனும், கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாகர் மற்றும் அஸுர் பவர் குளோபல் நிறுனத்தின் நிர்வாகி சிரில் கபேன்ஸ் ஆகியோர் மீதுதான் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tam...

சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீன வெளியுறவு அமைச்சருடன் டோங் ஜுனுடன் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் இதன் சிறப்பு உறுப்பினர்களான (பேச்சுவார்த்தை கூட்டாளிகள்) உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் 

மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நேற்று மாலை 5 மணி வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜார்க்கண்ட்டில் இன்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 68 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக இங்கு 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மகாராஷ்டிரா முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திரா காந்தி அன்புக்கும், தைரியத்துக்கும் உதாரணமானவர்: 107-வது பிறந்த நாளில் ராகுல் காந்தி புகழாரம்

புதுடெல்லி: இந்தியா​வின் இரும்​புப் பெணமணி என்று அழைக்​கப்​படும் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம்​தேதி உத்தர பிரதேசத்​தில் உள்ள அலகா​பாத்​தில் பிறந்​தார். நேற்று அவரது 107-வது பிறந்​தநாளை​யொட்டி காங்​கிரஸ் கட்சி சார்​பில் மரியாதை செலுத்​தப்​பட்​டது. அப்போது ராகுல் காந்தி கூறிய​தாவது: தேச நலனுக்கான பாதை​யில் அச்சமின்றி நடைபோடுவதை எனது பாட்​டி​யிடம் இருந்​து​தான் கற்றுக்​கொண்​டேன். தைரி​யத்​துக்​கும், அன்புக்​கும் இன்றள​வும் எடுத்​துக்​காட்டாக விளங்​குபவர் அவர். அவரது வாழ்க்கையை பாடமாகக் கொண்டு கோடிக்​கணக்கான இந்தி​யர்கள் தொடர்ந்து உத்வேகம் பெறு​வார்​கள். இந்தியா​வின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்​பாட்டை பாது​காக்க அவர் தனது இன்னு​யிரை தியாகம் செய்​துள்ளார். அவரது பிறந்​தநாளில் எங்களின் பணிவான மரி​யாதை. இவ்​வாறு ராகுல் ​காந்தி தெரி​வித்​துள்​ளார்​. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய வசீகரப் பெண் போட்டியில் பட்டம் வென்றார் 22 வயது சட்டக்கல்லூரி மாணவி

புனேயைச் சேர்ந்த 22 வயது சட்ட மாணவி இவ்வாண்டுக்கான இந்திய வசீகரப் பட்டத்தை வென்றுள்ளார். சிவாங்கி தேசாய் மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள இந்திய சட்டப் பள்ளியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். மாடலிங்கில் ஆர்வமுள்ள அவர் இந்திய வசீகரப் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான இந்திய வசீகரப் பெண் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸோமாட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் குஜராத் பெண்: குழந்தையுடன் பைக்கில் சென்று உணவு விநியோகம்

அகமதாபாத்: குஜராத்தின் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த ஸோமாட்டோ பெண் ஊழியர் ஒருவர் தனது குழந்தையை பைக் முன்பு அமரவைத்துஉணவு டெலிவரி செய்யும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. ராஜ்கோட் நகரைச் சேர்ந்த அந்த பெண் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர். கல்யாணத்துக்கு பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக அந்தப் பெண் வேலைக்குசெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், குழந்தையை வைத்துக்கொண்டு அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர் ஸோமாட்டோ வேலையை தேர்வு செய்தார். இதற்கு, அவர் இந்த வேலையை குழந்தையுடன் பார்க்கலாம் என்பதுதான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம், புதுவை சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கிய திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் ரத்து: அறங்காவலர் குழுவில் தீர்மானம்

திருமலை: பல்வேறு முறைகேடுகள் நடப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால், தமிழகம், புதுவை உட்பட மேலும் பல்வேறு மாநில சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் முதன்முறையாக திங்கள்கிழமை திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடந்தது. சுமார் 80 அம்சங்கள் குறித்து இதில் 3 மணி நேரம் வரை விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர், இதில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் பிஆர் நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ தொழில்நுட்பம் உதவியுடன் சுவாமியை தரிசனம் செய்யும் வரிசையில், பக்தர்கள் அதிக நேரம் இருப்பதை கண்டறிந்து, அவர்களை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu...

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ரிஷபம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட் மதரசாக்களில் வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கல்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மதரசாக்களில் வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கி உள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வருகின்றனர். இதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஆதரவு அளிக்கிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா குற்றம் சாட்டி உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. வரும் 20-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டம், கோமியா பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன. 27-ல் ஆன்லைன் தேர்வு

திருநெல்வேலி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரி 27-ம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்திலேயே முதல்முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் `பிங்க் சோன்' எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நெல்லையில் ரூ. 72 கோடியில் 450 படுக்கைகள், 10 அறுவைசிகிச்சை அரங்குகள் கட்டும் பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

370-வது பிரிவு குறித்த கார்கே கருத்து: தேசிய மாநாடு கட்சிக்கு மெகபூபா கேள்வி

ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அதில் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. இந்த தீர்மானம் மாநில அந்தஸ்துக்கானது, 370-வது பிரிவுக்கானது அல்ல என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் 370-வது பிரிவை மீட்டெடுப்பது குறித்து காங்கிரஸ் ஒருபோதும் பேசவில்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜு கார்கே கூறியுள்ளார். இது மக்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

50 சதவீத மாணவர்களுக்கு கல்வி வழங்க இந்தியாவில் 2,500 பல்கலைக்கழகங்கள் வேண்டும்: நிதி ஆயோக் சிஇஓ தகவல்

ஹைதராபாத் : “இந்தியாவில் 50 சதவீத மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேரவேண்டுமென்றால் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர வேண்டும்” என்று நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல்கலைக்கழக எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுப்ரமணியம் நேற்று முன்தினம் பேசுகையில், “இந்தியாவில் தற்போது 1,200 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 4 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை கல்லூரி படிக்கும் வயதினரில் 29 சதவீதம் மட்டுமே. 50 சதவீத பேர் கல்லூரி படிப்பில் இணைய வேண்டுமென்றால், நாட்டின் பல்கலைக்கழக எண்ணிக்கை 2,500 ஆக உயர வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் மறைவு

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமமூர்த்தி நாயுடு காலமானார். அவருக்கு வயது 72. ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (நவ.16) மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் மாயமானோரில் 3 பேரின் உடல்கள் மீட்பு - 5 மாவட்டங்களில் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 6 நபர்களில் 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களில் பதற்றம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைதேயி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்டில் கார் டயரில் மறைத்து ரூ.50 லட்சம் கடத்தல்: வருமான வரி அதிகாரிகள் பறிமுதல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஓட்டுக்கு பணப்படுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிஹத் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் - பிஹார் எல்லையில் வருமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்ததில், அந்த வாகனத்தில் உபரியாக இருந்த டயரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டயரை கிழித்து அந்தப் பணக்கட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். 11 கட்டுகளில் மொத்தம் ரூ.50லட்சம் இருந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அமைச்சர் குமாரசாமி, மாநில அமைச்சர் ஜமீர் இடையே உருவ கேலி மோதல்

பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வரை ஆதரித்து அம்மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மத்திய அமைச்சர் குமாரசாமியை ‘கருப்பன்' என விமர்சித்தார். இதற்கு பாஜகவினரும் மஜதவினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜமீர் அகமது கான் மன்னிப்பு கோரினார். மேலும் குமாரசாமி தன்னை, ‘‘குள்ளன்'' என உருவக்கேலி செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸார் குமாரசாமியை கடுமையாக விமர்சித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் கடும் பனி மூட்டம்: 300 விமானங்கள் தாமதம்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது. டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.100 கோடி மோசடி வழக்கு: அமலாக்கத் துறை அதிகாரிகள் 23 இடங்களில் சோதனை

மும்பை: சாமானிய மக்களின் ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கணக்குத் தொடங்கி ரூ.100 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக மாலேகானைச் சேர்ந்த சிராஜ் அகமது ஹாரூன் என்பவர் மீது கடந்த வாரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அவர் தொடர்புடைய 23 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. சிராஜ் அகமது டீ மற்றும் குளிர்பானம் விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர் சாமானிய மக்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களைப் பெற்று போலியாக வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ரூ.100 கோடி அளவில் பணம் மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடும் காற்று மாசு எதிரொலி: ஆன்லைன் வகுப்புக்கு மாறும் டெல்லி பள்ளிகள்

புதுடெல்லி: டெல்லியின் காற்று மாசு அபாயகட்டத்தை எட்டியதை தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை 3 (GRAP III)-ன் கீழ் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அதிஷி, “அதிகரித்து வரும் காற்று மாசு அளவு காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுகிறது” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீடுக்கு 5 லட்சம் பேர் முன்பதிவு

புதுடெல்லி: 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்ததது. இந்த காப்பீட்டு அட்டை வேண்டி இதுவரை 5 லட்சம் பேர் தங்களது விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 1.66 லட்சம் முதியவர்கள் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரளா உள்ளது. இம்மாநிலத்திலிருந்து 1.28 லட்சம் பேர் காப்பீடு அட்டை கோரி பதிவு செய்துள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடரந்து, உத்தர பிரதேசத்திலிருந்து 69,044, குஜராத்திலிருந்து 25,491 முதியவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா முன்னிலை: ஆய்வில் தகவல்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (பிசிஜி) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதில் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, பின்டெக், சாப்ட்வேர், வங்கி ஆகிய துறைகளின் செயல்பாடுகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. சுமார் 30 சதவீத இந்திய நிறுவனங்கள் இதுபோன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதன் மூலம் தங்களின் மதிப்பை அதிகரி்த்துக் கொண்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

14 ஆண்டுகளுக்கு முன்பு உதவிய மத்திய பிரதேச காய்கறி வியாபாரிக்கு டிஎஸ்பி பாராட்டு

மத்தியப் பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் உதவிய காய்கறி வியாபாரியை, நடுரோட்டில் அடையாளம் கண்ட டிஎஸ்பி ஒருவர் அவரை கட்டியணைத்து நட்பு பாராட்டினார். மத்தியப் பிரதேசம் போபால் நகரில் டிஎஸ்டியாக பணியாற்றுபவர் சந்தோஷ் படேல். இவர் கடந்த சனிக்கிழமை தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் சென்ற நபருக்கு உதட்டில் தழும்பு ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும், தான் பொறியியல் கல்லூரி படிக்கும் போது பழகிய காய்கறி வியாபாரி சல்மான் கான் என்பவரின் நினைவு வந்தது. உதட்டு தழும்பை வைத்து அவர் சல்மான் கான் என்பதை உறுதி செய்த சந்தோஷ் படேல், தனது ஜீப்பை விட்டு இறங்கி அந்த நபரை பெயர் சொல்லி அழைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனியரை விமர்சித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி: யார் இந்த ‘கலெக்டர் ப்ரோ’?

கொச்சி: கேரளாவில் ‘கலெக்டர் ப்ரோ’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அழைக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் மற்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை ஆன்லைனில் கிண்டல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரள அரசின் விவசாயத் துறை சிறப்பு செயலராக இருப்பவர் என்.பிரசாந்த் ஐஏஎஸ். 2007 பேட்சை சேர்ந்த பிரசாந்த், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2015ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சமூக வலைதளங்களில் தன்னுடைய செயல்பாடுகளால் மிகவும் பிரபலமானார். இளைஞர்கள் பலரும் அவரை அன்போடும் உரிமையோடும் ‘கலெக்டர் ப்ரோ’ என்று அழைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் மீண்டும் கலவரம், தாக்கும் ‘தீவிரவாத’ குழுக்கள், ஊரடங்கு... - நடப்பது என்ன? 

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது இரண்டு வயது குழந்தை உட்பட 6 பேர் கட்டத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்டவர்களில் மூன்று பேர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர் .மீண்டும் கலவரம் வெடிதத்தைத் தொடர்ந்து ஜிரிபாம் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைதேயி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையைத் தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதுமான சூழல்காணப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் கடந்த 10-ம் தேதி ஓய்வு பெற்றார். முன்னதாக, அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை பிராந்தியத்தில் கடந்த 17 ஆண்டுகளில் குடிசைகள் பகுதி 7.3% ஆக குறைந்தது

மும்பை: மும்பை பிராந்தியத்தில் கடந்த 17 ஆண்டுகளில் குடிசைகள் உள்ள நிலப் பகுதி 8-லிருந்து 7.3% ஆக குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஜான் ப்ரீசென் தலைமையிலான குழுவினர் மும்பை பிராந்தியத்தில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். உயர் தெளிவுத் திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பிற தரவுகளை இந்த ஆய்வுக்காக அவர்கள் பயன்படுத்தினர். கடந்த 2005 ஆண்டுக்கும் 2022-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் வசிக்கும் குடிசைப் பகுதிகள் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு வரைபடமாக்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒரு உயிரிழப்பு

குவாஹாட்டி: மணிப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் சைடோன் கிராமத்தில் உள்ள வயலில் சுமார் 20 பெண்கள் நேற்று முன்தினம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

10.11.2024 குரோதி 24 ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை திதி: நவமி இரவு 9.02 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: அவிட்டம் காலை 10.57 வரை. பிறகு சதயம். நாமயோகம்: துருவம் நள்ளிரவு 1.37 வரை. பிறகு வியாகாதம். நாமகரணம்: பாலவம் காலை 9.58 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் காலை 10.57 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.05. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம் மாலை 4.30-06.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 4,7 சந்திராஷ்டமம் பூசம், ஆயில்யம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் பணி 3 மாதம் தாமதம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பணிகள் 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும் என்று கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. ஜனவரி மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஸ்ரீ பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் நடைபெற்றும் வரும் கட்டுமானப் பணிகள் வரும் 2025 ஜூன் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் அனைத்து மசூதிகளிலும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்: ராஜ் தாக்கரே

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டுமென மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். “மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மசூதிகளில் உள்ள அனைத்து ஒலிபெருக்கிகளையும் அகற்ற வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி இல்லை. கோயில்களில் ஆண்டு முழுவதும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். ஆனால், கோயில்களில் எல்லா நேரமும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லஞ்சம் வாங்கியதாக டெல்லி அரசு ஊழியர் கைது: கட்டுக் கட்டாக பதுக்கிய ரூ.3.79 கோடி பறிமுதல்

புதுடெல்லி: சீல் வைத்த கடைகளை திறப்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக டெல்லி அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.3.79 கோடி ரொக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டெல்லியில் உள்ள டெல்லி நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) சட்டத் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜய் மேகோ. டெல்லியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் கரண் குப்தா என்பவர் இவரை அணுகினார். கரண் குப்தாவுக்கு டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் மினிஸ்ட்ரி ஆஃப் கேக்ஸ், ஸ்ரீ சன்வாரியா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 2 கடைகள் இருப்பதாகவும், அந்த கடைகளுக்கு வீட்டு வசதி மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து விட்டதாகவும் விஜய் மேகோவிடம் தெரிவித்தார். கடந்த 2023 ஜூலையில் சட்டவிரோத கட்டிட பிரச்சினை தொடர்பாக அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக கரண் குப்தா தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்