Skip to main content

Posts

Showing posts from December, 2024

அசாமின் 4 கிராமங்களில் குழந்தை திருமணம் ஒழிப்பு

அசாமின் காசார் மாவட்டத்தின் 4 கிராமங்களில் குழந்தை திருமணம் ஒழிக்கப்பட்டிருப்பதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் சிறப்பு நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. முதல்கட்ட நடவடிக்கையின்போது 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.1.26 கோடி காப்பீட்டு தொகையை பெற விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய தொழிலதிபர்

ரூ.1.26 கோடி காப்பீட்டு தொகையை பெற விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய தொழிலதிபரை குஜராத் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம், வட்கம் அருகேயுள்ள தன்புரா கிராமத்தின் சாலையில் கடந்த 27-ம் தேதி ஒரு கார் தீயில் எரிந்து உருக்குலைந்து கிடப்பதாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சடலம் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பிரதமர் ஏன் செல்லவில்லை?” - மணிப்பூர் முதல்வர் மன்னிப்புக் கோரிய பின் காங். மீண்டும் கேள்வி

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டிருக்கும் நிலையில், “பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை?” என காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்று அதையே அங்கு ஏன் சொல்ல முடியாது? மே 4, 2023 முதல் அவர் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோதும் அவர் வேண்டுமென்றே அம்மாநிலத்துக்கு வருவதைத் தவிர்த்தார். மணிப்பூர் மக்களால் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ள முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடிசையில் இருந்து கான்கிரீட் வீடு: ஆந்திர முதல்வருக்கு தொழிலாளி குடும்பம் நன்றி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனிதாபிமானத்தால் குடிசை வீட்டில் வாழ்ந்த தொழிலாளியின் குடும்பத்தினர் கான்கிரீட் வீட்டில் குடியேற உள்ளனர். ஆந்திர அரசு சார்பில் மூத்த குடிமக்கள், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஓய்வூதியம், நிதியுதவி வழங்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த ஜூலை 1-ம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், பெனுமாகு கிராமத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அங்கு குடிசை வீட்டில் வசித்த தொழிலாளி பானாவத் நாயக், அவரது மனைவி சீதம்மாவை முதல்வர் சந்தித்து பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுனாமி தாக்கிய போது போர்க்கப்பலில் பிறந்த குளோரிக்கு கடற்படையில் இணைந்து சேவை செய்ய விருப்பம்

குட்டி அந்தமான் என்று அழைக்கப்படும் ஹட் பே தீவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலராமன், லட்சுமி தம்பதி. இவர்களை கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் சுனாமி தாக்கிய போது அருகில் உள்ள குன்றின் மீது ஏறி உயிர்தப்பினர். அப்போது, லட்சுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனது கிராமம் அழிவதை கண் முன்னால் கண்ட லட்சுமி சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வாடியிருந்த நான்கு நாட்களுக்குப் பிறகு அவரை காப்பாற்ற ஏஞ்சல் போல ஐஎன்எஸ் கரியல் போர்க்கப்பல் வந்தது. அந்த கப்பலில் ஏறிய பிறகு லட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து, போர்ட் பிளேர் செல்வதற்கு முன்பாகவே அவரு்க்கு பிரசவம் பார்க்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கொஞ்சமும் முன் அனுபவம் இல்லாத கப்பலில் இருந்த மருத்துவர் மற்றும் அவரது உதவியாள லட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். டிசம்பர் 29, 2004 மாலை 7 மணிக்கு லட்சுமிக்கு அழகான குளோரி என்ற பெண் குழந்தை பிறந்தது. போர்க் கப்பலில் பிறந்த முதல் குழந்தை இது. இப்போது குளோரிக்கு 20 வயது ஆகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ இந்திய கடற்படை போர்க்கப்பலின் உதவியால் பிறப்பெடுத்தேன். தற்போதும் அவர...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்​தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்​ ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் 2,000 டிரோன்களில் வானில் வண்ண மயமான லேசர் கண்காட்சி

மகாகும்ப நகர்: உத்தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜில் அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்​ரவரி 26-ம் தேதி வரை மகா கும்​பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டு​களுக்கு ஒரு முறை கொண்​டாடப்​படு​கிறது. கும்​பமேளா​வின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்​சி​யின் போது, சங்கம் முனைப் பகுதி​யில் இரவு நேரத்​தில் ட்ரோன்கள் மூலம் லேசர் கண்காட்​சிக்கு உத்தர பிரதேச சுற்றுலாத்​துறை ஏற்பாடு செய்​துள்ளது. இது குறித்து மாவட்ட சுற்றுலாத்​துறை அதிகாரி அபரஜிதா சிங் கூறிய​தாவது: மூன்று நதிகள் சங்கமிக்​கும் சங்கம் முனைப் பகுதி​யில் இரவு நேரத்​தில் வானில் ஒளிரும் ட்ரோன் கண்காட்​சிக்கு ஏற்பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. 2,000-க்​கும் மேற்​பட்ட ஒளிரும் ட்ரோன்​கள், கடலில் அமுதம் கடையும் ‘சமுத்ர மந்தன்’ நிகழ்ச்​சியை வானில் நடத்தி காட்டும். இது தனிச்​சிறப்பான அனுபவமாக இருக்​கும். இவ்​வாறு அபரஜிதா சிங் கூறினார்​. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை: இந்திய ராணுவம் திறப்பு

இந்தியா-சீனா எல்லையில் 14,300 அடி மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்து இந்திய ராணுவத்தின் 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹித்தேஷ் பல்லா, எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் ரொட்டி பரிமாற தாமதம் ஆனதால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ரொட்டி பரிமாற தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்திய வினோதமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தவுலி மாவட்டம் ஹமித்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மெஹ்தாப். இவருக்கு டிசம்பர் 22-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமகன் வீட்டார் அனைவரும் அன்று மகிழ்ச்சியுடன் ஒன்று கூடினர். ஆனால், அந்த மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. மணமகன் உறவினர்களுக்கு ரொட்டி பரிமாறுவதில் பெண் வீட்டார் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமைடந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதனால், விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டு வேறொரு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைக்கண்டு பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: 5,000 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக குலு பகுதியில் சிக்கித் தவித்த 5,000 சுற்றுலாப் பயணிகளை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து குலு காவல் துறை வெளியிட்ட எக்ஸ்பதிவில் " இமாச்சலின் குலுவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக சோலங் நல்லா என்ற இடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பனியில் சிக்கிக்கொண்டன. இந்த வாகனங்களில் இருந்த 5,000 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது வாகனங்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் ரயில் சக்கரங்களுக்கு நடுவே 250 கி.மீ. தூரம் பயணித்த நபரிடம் விசாரணை

ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தில் ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே ஒருவர் 250 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார். ம.பி.யின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் கீழ் ரயில்வே ஊழியர்கள் நேற்று வழக்கமான ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு ரயிலில், ஒரு பெட்டியின் கீழே சக்கரங்களுக்கு நடுவில் ஒருவர் மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர், இடார்சியில் இருந்து 250 கி.மீ. தூரம், அதாவது 4 மணி நேரத்துக்கும் மேலாக இவ்வாறு பயணித்ததாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொடர்ந்து 2-வது ஆண்டாக 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

புதுடெல்லி: சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி என பல காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு, விசாவை வழங்கியுள்ளது. இது நிரந்தர குடியுரிமை அல்லாத விசாவாகும். இந்த வகை விசாக்கள் எச்1-பி விசாக்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளாகவே அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த 1882-ல் ரூ.20,000 ஆக இருந்த மகா கும்ப மேளா செலவு ரூ.7,500 கோடியாக உயர்வு

பிரயாக்ராஜ்: மகா கும்ப மேளா கடந்த 1882-ம் ஆண்டு நடைபெற்றபோது, அதன் செலவு ரூ.20,000-மாக இருந்தது. அது தற்போது ரூ.7,500 கோடியாக அதிகரித்துள்ளது. இந்து மதத்தில் மகா கும் பமேளா மிகவும் புனிதமான யாத்திரை. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி என்ற நான்கு நதி களின் கரையோரங்களில் அமைந்துள்ள புனித தலங்களில் கும்ப மேளா நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்த இரக்கமுள்ள சீர்திருத்தவாதி!’ - மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் புகழஞ்சலி

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த இரக்கமுள்ள, சீர்திருத்தவாதத் தலைவர் என்றும், கருணை, பணிவு, கண்ணியம் ஆகிய அரிய பண்புகளைக் கொண்ட தலைவர் என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் செயற்குழு புகழாரம் சூட்டியுள்ளது. மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கூடியது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழுவின் இரங்கல் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மன்மோகன் சிங்கின் வியக்கவைக்கும் கல்வித்தகுதி: வெளிநாடுகளில் பட்டங்கள் பெற்றவரின் உயரிய பதவிகள்!

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கல்வித்தகுதி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. வெளிநாடுகளின் கல்வி நிலையங்களில் பல பட்டங்கள் பெற்றவர், இந்திய அரசின் பல உயரியப் பதவிகளையும் வகித்துள்ளார். வியாழக்கிழமை (டிச.26) இரவு காலமான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932 அன்று பஞ்சாபில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முறையே 1952 மற்றும் 1954ல் பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பலவீனமான பிரதமர்’ என விமர்சிக்கப்பட்ட மன்மோகன் சிங்: அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் சாதித்தார்!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது 92 வயதில் காலமானார். பலவீனமானப் பிரதமர் என விமர்சிக்கப்பட்ட அவர், அணுகுண்டு ஒப்பதம் விவகாரத்தில் சாதித்து காட்டினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) மாலை தனது அரசு குடியிருப்பில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், இரவு சுமார் 8 மணிக்கு அவர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

புதுடெல்லி: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை கவலைக்கிடம்

புதுடெல்லி: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று தங்கள் சமூக வலைதளங்கள்ல் பதிவிட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உ.பி. போலீஸார் வழக்கு பதிவு

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கவுள்ள மகா கும்பமேளாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆண்டுதோறும் கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மறு ஆய்வு செய்ய ஜிஎஸ்ஐ-க்கு மத்திய அரசு பரிந்துரை: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுரை மாவட்​டத்​தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து மறு ஆய்வு செய்​யு​மாறு ஜிஎஸ்​ஐ-க்கு மத்திய அரசு பரிந்​துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிவிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மேலூர் அருகே​யுள்ள தெற்​குத் தெரு, முத்து​வேல்​பட்டி பகுதி​களில் டங்ஸ்​ட​னுக்கான புவி​யியல் குறிப்​பாணை (ஜிஎஸ்ஐ) 2021 செப். 14-ல் தமிழ்​நாடு அரசிடம் ஒப்படைக்​கப்​பட்​டது. அதேநேரத்​தில், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை ஏலம்விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்​கப்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைக்கிறார் ரேவந்த் ரெட்டி” - அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு!

சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.24) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேச இந்துக்கள் மீது தாக்குதலை நிறுத்த முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் 685 பேர் கடிதம்

வங்கதேசத்தில் நடத்தப்படும் இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வங்கதேச நாட்டு மக்களுக்கு 685 முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்குள்ள இந்து கோயில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கும் திட்டம்: குமரியில் இருந்து கடைக்கோடி வரை ரயிலில் பயணிக்கும் காலம் கனிந்தது 

இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உலகின் மிக உயர்ந்த பனிமலையான இமயமலை மட்டுமின்றி, சிறிய, பெரிய அளவிலான மலைகள், ஏற்ற, இறக்கத்துடன் கூடிய பள்ளத்தாக்குகள், ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. இதனால் இங்கு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவதே சவாலான காரியமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

மும்பை: கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ கிளாஸ் மற்றும் பி15பி கிளாஸ் கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. அதன்படி போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில், உலகத்தரத்துக்கு இணயைாக இந்த 2 போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கும். அவற்றை தாக்குதவதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன. இந்த போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. எங்கும் தனியாக செல்லும்...

முதல்வர் பட்னாவிஸ் வசம் உள்துறை: ஷிண்டேவுக்கு பொதுப் பணித்துறை | மகாராஷ்டிரா அமைச்​சர்​களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சனிக்கிழமை அன்று தனது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் யாருக்கு எந்த துறை என்பதை பார்ப்போம். முக்கிய துறையான உள்துறையை தன்வசமே வைத்துக் கொண்டுள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதோடு எரிசக்தி, சட்டம் மற்றும் நீதித்துறை, பொது நிர்வாகத் துறை, தகவல் மற்றும் விளம்பரத் துறைகளையும் அவர் கவனித்துக் கொள்வார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் த‌மிழ்ப் புத்தகத் திருவிழா தொடங்கியது: இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைத்தார்

பெங்களூரு: பெங்களூருவில் 3-வது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3-வது தமிழ்ப்புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர்வி.ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்திற்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவு: கோயில் - மசூதி விவகாரத்தில் அறிக்கை

புதுடெல்லி: கோயில் - மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பாக்வத் கருத்துக்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவளித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவரான அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சம்பல் ஜாமா மசூதி, கோயில் இடித்துக் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் பல மசூதிகள் மற்றும் அஜ்மீர் தர்கா, கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகப் புகார்கள் கிளம்பின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அம்பேத்கர் பற்றிய அமித் ஷா பேச்சை நீக்க எக்ஸ் தளத்துக்கு அழுத்தம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்க கோரி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தள தலைவர் சுப்ரியா ஸ்ரீநடே கூறியுள்ளதாவது: மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமரியாதை செய்யும் வகையில் அமித்ஷா பேசியதை காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் சமூக வலைதள நிர்வாகிகள் எக்ஸ் வலைதளத்தில் பகிரந்துள்ளனர். இந்த நிலையில், அமித் ஷா பேசிய பகிர்வை எக்ஸ் வலைதளத்திலிருந்து நீக்க கோரி மத்திய அரசிடம் இருந்து அழுத்தம் வந்துள்ளதாக அந்த நிறுவனம் எங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய விவகாரங்களில் தீவிர ஆர்வம் காட்டும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நோக்கம் என்ன?

ஜார்ஜ் சோரஸ்... வயது 94. அமெரிக்​கா​வில் செல்​வாக்​குள்ள தொழில​திபர். கோடிக்​கணக்​கில் பணம் சம்பா​தித்து வைத்​துள்ளார். அதை வைத்து அறக்​கட்டளை என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்​கிறார். ஆனால், பல நாடு​களில் இவரது பணம் பல வேலைகளை செய்​வதாக கூறுகின்றனர். நாடாளு​மன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்​கிய​தில் இருந்து தொழில​திபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதி​மன்​றத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்டது தொடர்பாக விவா​திக்க வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்தை முடக்கிவருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.19 - 25

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது. பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலை பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு

பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாஜ்மகாலை கட்டியவர்கள் கை வெட்டப்பட்டதா? - யோகியின் சர்ச்சை கருத்துக்கு மறுப்பு

தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு வரலாற்றாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மும்பையில் கடந்த சனிக்கிழமை உலக இந்துக்கள் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினைஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப்படுத்தினார். ஆனால் ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதுபோல், மிகவும் உயரிய வகை துணிகளை நெய்ந்தவர்களின் கைகளும் அக்கால ஆட்சியாளர்களால் துண்டிக்கப்பட்டன. இதனால் அந்த பாரம்பரியமிக்க துணி வகைகள் முற்றிலும் அழிந்துவிட்டன" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியர்கள் சுற்றுலா விசா இல்லாமல் ரஷ்யா செல்ல இரு நாடுகளும் பேச்சு

புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல சம்பந்தப்பட்ட நாட்டின் விசா பெற வேண்டும். இந்நிலையில், பிரதமர் மோடி அரசு சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தற்போது 62 நாடுகளுக்கு விசா பெறாமல் இந்தியர்கள் சுற்றுலா சென்று வர முடியும். அந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைய உள்ளது. விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அடுத்த ஆண்டுக்குள் இது அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் 30 நக்சலைட்கள் சரண்: மத்திய அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி

ஜக்தால்​பூர்: சத்தீஸ்கர் மாநில காவல்​துறை​யின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்​பணிப்பை அங்கீகரித்து, நேற்று முன்​தினம் ‘குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்டன. நக்சல்​களுக்கு எதிரான காவல்​துறை​யின் நடவடிக்கை, மாநிலத்​தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்​கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்​கப்​பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தால்​புருக்​குச் சென்று, சரணடைந்த 30 நக்சல்கள் மற்றும் அங்கு வசிக்​கும் மக்களைச் சந்தித்​துப் பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழா​வில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘வரும் 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்சலைட்டுகளை மாநிலத்​தில் இருந்து ஒழிக்க உறுதி பூண்​டுள்​ளோம். என் வாழ்​வில் இன்று மிகவும் மகிழ்ச்​சியான நாளாகும். சரணடைந்த உங்களை விட, உங்கள் குடும்பத்​தாரை விட நான் இன்று மிகவும் மகிழ்ச்​சியாக இருக்​கிறேன்’’ என்றார்​. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & Wo...

“தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் ஓர் உண்மையான மேதை!” - பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஓர் உண்மையான மேதை” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார். அவர் தபேலா இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமது இணையற்ற இசையால் மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காட்டு யானை தாக்கி 2 சகோதரிகள் ஒடிசாவில் உயிரிழப்பு

ஒடிசாவில் காட்டு யானை தாக்கியதில் சகோதரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கன்டாபள்ளி கிராமத்தில் ஒரு குடும்பம் குடிசை வீட்டில் வசித்து வந்தது. இந்த கிராமம் போனாய் வனப்பகுதிக்கு அருகே உள்ளது. அங்கு காட்டு யானை ஒன்று நேற்று வந்து குடிசை வீட்டை சேதப்படுத்தியது. யானையை பார்த்ததும் வீட்டில் இருந்த பெரியவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால், அந்த வீட்டில் சமியா முண்டா (12), சாந்தினி முண்டா (3) என்ற இரு சகோதரிகள் மட்டும் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை காட்டு யானை மதித்து கொன்றது. இச்சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய மருத்துவப் பதிவேடு வலைதளத்தில் 6,500 மருத்துவர்கள் மட்டுமே பதிவு

தேசிய மருத்துவப் பதிவேடு வலைதளம் தொடங்கப்பட்டு மூன்றரை மாதங்கள் ஆன நிலையில் தற்போது 6,500-க்கும் குறைவான மருத்துவர்களே அதில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மருத்துவப் பணியாற்ற தகுதியான அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தேசிய மருத்துவப் பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். என்எம்ஆரின் தனித்தன்மை என்னவெனில் அது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப்படும். இது மருத்துவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் அரையாண்டு தேர்வு வினாத்தாள் கசிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும் பிளஸ் 1 கணிதத் தேர்வும் நடைபெற்றன. இந்த இரு தேர்வுகளின் வினாத்தாள்களும் கடந்த புதன்கிழமை வாட்ஸ்அப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில தனியார் டியூசன் மையங்கள் தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வினாத்தாளை முன்கூட்டியே வினாத்தாள்களை வழங்கியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யார் இந்த ஜக்தீப் தன்கர்? - எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைக்கும் மாநிலங்களவைத் தலைவரின் பின்புலம்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நிழ்வாக, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதையொட்டி, அவையின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் வழங்கிய நோட்டீஸில், ‘அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறார். நாடாளுமன்ற விதிகளை மீறுகிறார். மாநிலங்களவையில் நியாயமற்றவராகவும், பாரபட்சமாகவும் நடந்து கொள்கிறார். தனது அரசியலமைப்பு பதவிக்கு ஏற்றவாறு அவர் நடந்து கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஏஇ துணை பிரதமர் ஷேக் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணை பிரதமர் ஷேக் அப்துல்லா உடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இந்தியா- மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டின் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனைவியின் கண்ணியமான வாழ்க்கைக்காகவே ஜீவனாம்சம்; கணவனுக்கான அபராதம் அல்ல: சுப்ரீம் கோர்ட்

‘‘மனைவியின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவே ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்படுகிறது. அதை கணவனுக்கு விதிக்கப்படும் அபராதமாக கருதக் கூடாது’’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்த தம்பதி கடந்த 2004-ம் ஆண்டு பிரிந்துள்ளனர். கணவர் துபாயில் உள்ள ஒரு வங்கியின் சிஇஓ. மாதம் 50,000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்காம் (ரூ.11 லட்சம்) சம்பளம் வாங்குகிறார். இவரது 3 அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.17 கோடி. மனைவி இல்லத்தரசி. இவர்களின் ஒரே மகன் தற்போது இன்ஜினியரிங் முடித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம்: துணை முதல்வர் அஜித் பவார் தகவல்

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவை நாளை (டிச. 14) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் மகாயுதி கூட்டணி 235 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 5-ம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்றார். துணை முதல்வர்களாக சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் ஒரே இலவச ரயில்

இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம், பக்ரா பகுதியில் சட்லஜ் நதியின் குறுக்கே கடந்த 1948-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கியது. இதற்காக பஞ்சாபின் நங்கல் பகுதியில் இருந்து சிமென்ட், கற்கள் அணை கட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டன. கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல 1948-ம் ஆண்டில் பஞ்சாபின் நங்கல், இமாச்சல பிரதேசத்தின் பக்ரா இடையே 13 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 1963-ம் ஆண்டு வரை பக்ரா அணை கட்டும் பணி நடைபெற்றது. இந்த காலத்தில் நங்கல் பகுதியில் இருந்து பக்ராவுக்கு நாள்தோறும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் இலவசமாக பயணம் செய்தனர். கனரக கட்டுமான பொருட்கள் ரயிலில் எளிதாக எடுத்துச் செல்லப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா சமீபத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த வாரம் நாடளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தொடர்பாக கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். இதன்படி நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படும். மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல் அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று மண்டியாவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) பெங்களூருவில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள், கன்னட திரையுலகினர், தொழில் துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2 ரஃபேல் விமானம் அனுப்பினால் போதும்: வங்கதேசத்துக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் 40 ரஃபேல் விமானங்கள் உள்ளன; இரண்டை அனுப்பினாலே போதும் என்று வங்கதேசத்துக்கு மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா-வங்கதேச எல்லை அருகே உள்ள பசிர்ஹத் நகரின் ஹஜ்ரதலா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை: 24 பக்க கடிதத்தில் சட்டம் ஆண்களை வஞ்சிப்பதாக வேதனை

பெங்களூரு: உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன் 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தனது மரண விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, சர்வதேச அளவில் விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளார். அதுல் சுபாஷ் எழுதிய கடிதத்தில், ‘‘எனக்கும் என் மனைவி நிகிதா சிங்காரியாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்த சில தினங்களில் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில் என் மாமனார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால் நான் வரதட்சணை கேட்டதால்தான் அவர் மாரடைப்பால் இறந்தார் என மனைவியின் வீட்டார் போலீஸில் புகார் அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க ஆதரவு: அரசியல் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி

இண்டியா கூட்டணியின் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சு எதிர்க்கட்சிகளிடையே அண்மையில் வலுத்துள்ளது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆதரவளிக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மம்தா பானர்ஜி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்று வழிநடத்த எனக்கு ஆதரவளித்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், அவர்களது கட்சிகள் நலமுடன் இருக்கட்டும். அதேபோன்று இந்தியாவும் நன்றாக இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்