Skip to main content

Posts

Showing posts from February, 2025

நீதிமன்ற உத்தரவை மதிக்காத தொழிலாளர்கள்: செங்கல் சூளையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண் உரிமையாளர்

திருவனந்தபுரம்: நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செங்கல் சூளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மதிக்காததால் தான் நடத்தி வந்த செங்கல் சூளையை மூடும் நிலைமைக்கு பெண் உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் திருபுரம் அருகிலுள்ள பழையகடா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பகுமாரி (57). இவர் தனது கணவர் தங்கப்பனுடன் சேர்ந்து பராசாலா பகுதியில் செங்கல் சூளையை நடத்தி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தங்கப்பன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமருடன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பேச்சு

புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு ஒரே நாணயம், ஒரே விசா நடைமுறையை பின்பற்றுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக உர்சுலா வோன் டெர் லியென் பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்டில் கடும் பனிச்சரிவில் சிக்கிய 25 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கிய 57 தொழிலாளர்களில் 32 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் அதில் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன. பனிச் சரிவில் சிக்கிய 57 பேரில் 32 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 25 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒற்றுமையின் மகா கும்பமேளா நிறைவடைந்தது: பிரதமர் நரேந்திர மோடி

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய பக்கத்தில் நேற்று வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையைவிட இருமடங்கு அதிக மக்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். பிரயாக்ராஜுக்கு நேரில் வர முடியாதவர்கள் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தனர். 140 கோடி இந்தியர்களும் மகா கும்பமேளாவை கொண்டாடினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை: பஞ்சாபில் 5 அமைச்சர்கள் குழு அமைப்பு

பஞ்சாபில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் குறித்து பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணி: பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் ரஷ்யா செல்கிறார்

புதுடெல்லி: ரஷ்யாவின் 80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணியில் விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த 1941-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இடையே போர் நடைபெற்றது. இது ரஷ்யாவில் ‘தி கிரேட் பேட்டிரியாட்டிக் வார்’ என அழைக்கப்படுகிறது. இதன் 80-ம் ஆண்டு வெற்றி தினத்தை மே 9-ம் தேதி,தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளா சென்று திரும்பும் வழியில் ஜேஎம்எம் எம்.பி. மகுவா விபத்தில் காயம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. மகுவா மாஜி உள்ளிட்ட 4 பேர் கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சாலை விபத்தில் காயம் அடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜேஎம்எம் எம்.பி. மகுவா மாஜி தனது மகன், மருமகளுடன் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளாவுக்கு சென்றார். திரிவேணி சங்கமத்தில் இவர்கள் புனித நீராடிய பிறகு நேற்று முன்தினம் இரவு ராஞ்சிக்கு புறப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம்: கேரள காங்கிரஸ் கட்சிக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம்

போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேரள காங்கிரஸ் கட்சிக்கு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். இந்நிலையில், தனது சமூக வலைதள கணக்கை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடனை தள்ளுபடி பெற்றுள்ளதாக நடிகை பிரீத்தி ஜிந்தா மீது கேரள காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நியூ இண்டியா கோ ஆப்பரேட்டிவ் வங்கியில், நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு கணக்கு இருந்தது. அந்த வங்கி மூலம் 10 ஆண்டுக்கு முன்பு அவர் ரூ.18 கோடி கடன் பெற்றார். பின்னர், எந்தவித பாக்கியும் இல்லாமல் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்திவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீக்கியர் கலவர வழக்கில் காங். மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள்

புதுடெல்லி: சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமாருக்கு (79) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. டெல்லியில் மட்டும் 2,800 பேர் உயிரிழந்தனர். டெல்லி உட்பட நாடு முழுவதும் 3,350 பேர் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாளில் 3 மாநில நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: டெல்லி தேர்தலுக்கு பிறகு அரசியல் நிகழ்ச்சிகள் மந்தமாக இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வாறு இல்லை. பிரதமர் மோடி நேற்று முன்தினம் திங்கட்கிழமை 3 மாநிலங்களில் பயணம் மேற்கொண்டார். இதையொட்டி அவர் ம.பி.யில் காலை உணவையும் பிஹாரில் மதிய உணவையும் அசாமில் இரவு உணவையும் எடுத்துக்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கியதால் முதல் முறையாக வாக்களித்த கிராம மக்கள்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் குறைந்ததால், ஒரு கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்டத்தின் கெர்லபெண்டா கிராம மக்கள் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடல் பருமனை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: நடிகர் மாதவன் உள்ளிட்ட 10 பேருக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: உடல் பருமனை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார். இதுதொடர்பாக நடிகர்கள் மாதவன், மோகன் லால், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட 10 பேருக்கு அவர் சவால் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 119-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வானொலியில் ஒலிபரப்பானது. அப்போது உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பிரதமரின் பிஹார் வருகை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்; ஆனால்…” - மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி பிஹார் மாநிலத்துக்கு தொடர்ச்சியாக வருகை தருவது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இதற்கு முன்பும் அவர் பல்வேறு முறை அவர் இங்கு வந்து சென்றதை அறியாமல் அவர்கள் பேசுகின்றனர் என மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் திங்கள்கிழமை (பிப்.24) அன்று, பிரதமர் மோடி பிஹார் மாநிலத்துக்கு தொடர்ச்சியாக வந்து செல்வது குறித்து பேசியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டத்தை நீதித் துறையால் மாற்ற முடியாது: குடியரசு துணைத் தலைவர் தன்கர் கருத்து

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஓராண்டு சிறப்பு கொண்டாட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. நீதித் துறை உட்பட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. சில விவகாரங்களில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது கருத்துகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விண்வெளியில் சதம் அடித்து இந்தியா சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளியில் பாரதம் 100-வது சதம் அடித்திருக்கிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரலின் 119-வது நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிரிக்கெட்டில் சதம் அடிக்கும்போது ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம். அதைவிட பெருமகிழ்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இதன்மூலம் விண்வெளியில் பாரதம் சதம் அடித்திருக்கிறது. நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 460 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார். பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் 60 கோடி பேர் புனித நீராடல்: பிப்.26-ம் தேதி நிறைவடைவதால் குவியும் மக்கள்

லக்னோ: உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் வரும் 26-ம் தேதி மகா கும்பமேளா நிறைவடைய உள்ளது. சில நாட்களே இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். உத்தர பிரதேசம், பிரயாஜ்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. ஒவ்வொரு நாட்களும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மவுனி அமாவாசை நாளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் புனித நீராடினர். அன்றைய தினம் கூட்டநெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது சுமார் 10 கி.மீ. தொலைவு நடந்து சென்று பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போதி சத்துவராக ஆட்சி நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி: பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழாரம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி போதி சத்துவராக ஆட்சி நடத்துகிறார் என்று பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழாரம் சூட்டி உள்ளார். தலைமை பண்பை வளர்ப்பது தொடர்பான மாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலவச பேருந்தால் தினமும் ரூ.3 கோடி இழப்பு: மகாராஷ்டிர போக்குவரத்து அமைச்சர் பேச்சு

மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகையால் ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படுவதாக மாநில போக்குவரத்து அமைச்சரக் பிரதாப் சர்நாயக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறியதாவது: அரசுப் பேருந்துகளில் நமது சகோதரிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதுபோல் மூத்த குடிமக்களுக்கும் பல ஆண்டுகளாக சலுகை வழங்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: அட்டாரி-வாகா வழியாக தாயகம் திரும்பினர்

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டில் சிறையில் இருந்த 22 இந்திய மீனவர்கள், சனிக்கிழமை (பிப்.22) அட்டாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர். பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்த காரணத்துக்காக அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவினர் இந்தியர்கள் 22 பேரை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கைது செய்தது. இவர்கள் அனைவரும் குஜராத் (18), உத்தர பிரதேசம் (1) மற்றும் டையூ (3) ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் நிழல் உலக தாதாவின் மனைவி டெல்லியில் கைது

ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் நிழல் உலக தாதாவின் மனைவி கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்தவர் ஹஷிம் பாபா. நிழல் உலக தாதாவான இவர் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவர் மீது போலீஸில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரது மனைவி ஸோயா கான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“என்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” - ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை!

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸுக்கும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்படும் நிலையில் தன்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஷிண்டே கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: “நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். ​​நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பனாமாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் விவரத்தை சரிபார்த்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப பனாமா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளை பாலமாக அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில். அமெரிக்காவில் இருந்து சம்பந்தப்பட்ட நாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்த விவரத்தை சரிபார்த்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெயஸ்வால் கூறியது: “அமெரிக்காவில் இருந்து பனாமா, கோஸ்டா ரிகா போன்ற தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியர்கள் உள்ளனரா என்பது குறித்த விவரத்தை சரிபார்த்து வருகிறோம். அது உறுதியானதும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாநதி ஆற்றில் 16 அணைகளை கட்ட ஒடிசா முதல்வர் திட்டம்

மகாநதி ஆற்றில் 16 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் ரானேந்திரா பிரதாப் ஸ்வைன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாநதியின் மேல்நிலை நீர்பிடிப்புப் பகுதியில் தண்ணீரை திட்டமிடாமல் அதிகமாக பயன்படுத்துவதால் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் மாநிலங்களுக்கு அருகே அமைந்துள்ள ஹிராகுட் அணைப் பகுதியில் கீழ்நிலை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யார் இந்த ஜெய் பாண்டா? - 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜகவை அரியணை ஏற்றிய சூத்திரதாரி!

புதுடெல்லி : பாஜகவில் டெல்லி சட்டபேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெய் பைஜயந்த் பாண்டா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவை டெல்லியில் அரியணை ஏற்றியிருக்கிறார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நோன்பு நாட்களில் முஸ்லிம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்: தெலங்கானா முதல்வர் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு

ரம்ஜான் நோன்பு நாட்களில் தெலங்கானா மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் முஸ்லிம்கள் ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே வீடுகளுக்கு செல்லாம் என தெலங்கானா அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு தரப்பில் நேற்று அம்மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அதாவது, ரம்ஜான் நோன்பு வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இது மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் நோன்பு இருப்பதால், அரசு, தனியார், கார்பரேஷன் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம்கள் மாலை 5 மணிக்கு பதிலாக ஒருமணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே தொழுகை செய்ய வீட்டிற்கு செல்ல இந்த அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil N...

டெல்லி துணை நிலை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரேகா குப்தா!

புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்த ரேகா குப்தா ஆட்சியமைக்க உரிமை கோரினார். டெல்லியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். வியாழக்கிழமை (பிப்.20) முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியின் அடுத்த முதல்வர் - யார் இந்த ரேகா குப்தா?

புதுடெல்லி: இன்று மாலை டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் நாளை (பிப்.20) பதவியேற்கிறார். டெல்லியின் பாஜக முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (பிப்.19) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பாஜகவின் 48 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா அவர்களை வரவேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி, கத்தார் மன்னர் ஷேக் தமீம் சந்திப்பு: முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

கத்தார் மன்னரும், நாட்டின் அதிபருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை. ஆனால் கத்தார் மன்னரை, பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றுள்ளார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கத்தார் மன்னருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட கத்தார் மன்னரை ஆரத் தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று அழைத்துச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி!

ஜாம்நகர்: குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் கடந்த ஜன.16 அன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2023-ம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தேர்தல் இது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மகிழ்ச்சியான நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம். ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி, பிஹார் மாநிலங்களில் நிலநடுக்கம்: வடமாநிலங்களில் மக்கள் பதற்றம்

டெல்லியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4 அலகுகளாக ஆக பதிவானது. டெல்லியில் நேற்று காலை 5.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவுகோளில் 4.0 அலகுகளாக பதிவானதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் துர்காபாய் தேஷ்முக் கல்லூரி பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை வைத்து சிலர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) நிதியை ஒதுக்க இயலாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, பாமக, தவாக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசுக்கு தர வேண்டிய கல்வி நிதியை தர மத்திய அரசு மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் 10 மேயர் பதவிகளையும் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி

சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

112 இந்தியர்களுடன் பஞ்சாப் வந்தடைந்தது 3-வது அமெரிக்க விமானம்!

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் வந்த 3-வது விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. ஞாயிறு இரவு 10 மணியளவில் தரையிறங்கிய சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் பஞ்சாபை சேர்ந்தவர்கள் 31 பேர், ஹரியானாவைச் சேர்ந்த 44 பேர், குஜராத்தை சேர்ந்தவர்கள் 33 பேர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இருவர், இமாச்சல் மற்றும் உத்தராகண்டிலிருந்து தலா ஒருவர் என மொத்தம் 112 பேர் இருந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவலர், ஆசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

ஜம்மு: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவலர், ஆசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சமீப காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மறுஆய்வு கூட்டம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்: இது 2-வது பேட்ச்

அமிர்தசரஸ்: அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பிப்.15) பின்னிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த வகையில் கடந்த 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் கை மற்றும் கால்கள் விலங்கிட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளா செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்: 15 பேர் காயம்

புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு செல்ல தலைநகர் டெல்லியில் உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.15) அன்று கூட்டம் அலைமோதிய காரணத்தால் சுமார் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாக 4 பெண்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழில் ‘வணக்கம்’ கூறி காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ஐ தொடங்கிவைத்த உ.பி முதல்வர் யோகி!

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) இன்று மாலை துவங்கியது. இதை துவக்கி வைத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘அனைவருக்கும் வணக்கம்’ எனத் தமிழில் தெரிவித்தார். வாரணானாசியின் கங்கை கரையிலுள்ள நமோ காட்டில் இன்று கேடிஎஸ் 3.0 நிகழ்ச்சி தொடங்கியது. துவக்கத்தில், தமிழகக் கலைஞர்களின் நாதஸ்வரம், மேளதாள மங்கள இசை முழங்கியது. இந்நிகழ்ச்சியை மின்சாரப் பொத்தான் அழுத்தி உ.பி முதல்வர் யோகி துவக்கி வைத்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆண்டுக்கு 1 லட்சம் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்தியா இலக்கு: தேசிய திறன் மேம்பாட்டு கழகம் தகவல்

இன்னும் 2 ஆண்டுகளில் ஜப்பான், இஸ்ரேல், ஜெர்மனி உட்பட இதர வெளி நாடுகளில், ஆண்டுக்கு 1 லட்சம் பேரை திறன் சார்ந்த வேலைகளில் பணியமர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030-ம் ஆண்டு செயல் திட்டத்தை வெளியிட்டுள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (என்எஸ்டிசி) கூறியிருப்பதாவது: திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற என்எஸ்டிசி முயற்சிக்கிறது. இதற்காக திறன்மேம்பாட்டு மையங்கள் விரிபடுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 50 எதிர்கால திறன் மையங்கள், 10 சர்வதேச அகாடமிகள் ஆகியவை தொடங்கப்படவுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த முயற்சி மேற்கொள்வீர்கள். ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலக ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகரீதியான பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமாச்சலில் சைவ உணவகத்தை தொடங்கும் கங்கனாவுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து

காதலர் தினத்தையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுத்த சைவ உணவகத்தை இன்று திறக்கும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்துக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் கங்கனா ரனாவத். இவர் பாஜக எம்.பி.யாக உள்ளார். கடந்த காலங்களில் இவர் கூறும் கருத்துகள் காங்கிரஸ் கட்சியினரின் முக்கிய தலைவர்களை உடனடியாக ஆத்திரமூட்டும் வகையில் அமையும். இதற்காக அவரை பலமுறை காங்கிரஸ் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் - பின்புலம் என்ன?

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்து நான்கு நாட்களான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது கவனிக்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2027-ம் ஆண்டு வரை பதவிக் காலம் கொண்ட மணிப்பூர் சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குழந்தை ராமர் சிலையை பாதுகாத்த தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் காலமானார்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசா​ரியாக இருந்​தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்​களாக உடல்​நலம் குன்றி இருந்​தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்​டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்​கிருத மகா வித்​யால​யா​வில் உதவி ஆசிரியராக சேர்ந்​தார். ராமரின் தீவிர பக்தரான சத்யேந்திர தாஸ், ராமர் கோயிலுக்கான கரசேவை​யிலும் பங்கேற்​றார். கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட போது உள்ளே வைக்​கப்​பட்​டு இருந்த குழந்தை ராமர் சிலைக்கு அருகில் இருந்​தார். சிலை சேதம் அடையாமல் தனது மடியில் வைத்து பத்திர​மாகப் பாது​காத்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாருக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம். ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நொய்டாவில் டிஜிட்டல் கைது மூலம் ரூ.1 கோடி பறிப்பு

டிஜிட்டல் கைது என்ற பெயரில் நொய்டாவைச் சேர்ந்த குடும்பத்திடம் ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கைது என்ற பெயரில் முதியோர்களுக்கு வீடியோ கால் செய்து அதில் போலி போலீஸ் அதிகாரி மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. டிஜிட்டல் கைது என்ற முறையே நமது சட்டத்தில் இல்லை. இந்த மோசடி குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் ஏற்கெனவே கூறியுள்ளார். ஆனாலும், இந்த மோசடி தொடர்ந்து நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு. ரிஷபம்: குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வீட்டில் நல்லது நடக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி தொடக்கம்

பெங்களூருவில் 15-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில் 15-வது கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேஜ்ரிவால் ஆடம்பரமாக புதுப்பித்த டெல்லி சீஷ் மகாலில் பாஜக முதல்வர் தங்க மாட்டார்: கட்சி வட்டாரங்கள் தகவல்

டெல்லியில் பாஜக சார்பில் புதிய முதல்வராக பதவியேற்பவர், முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பயன்படுத்திய ஷீஷ் மகாலில் தங்க மாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 70 உறுப்பினர்களை டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்