Skip to main content

Posts

Showing posts from October, 2022

நமது ஒற்றுமையால் எதிரிகளுக்கு கலக்கம் - வல்லபபாய் பிறந்த நாளில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி : இந்தியாவின் பன்முகத் தன்மையில் காணப்படும் ஒற்றுமை நமது எதிரிகளை கலங்க செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் சர்தார் வல்லபபாய் படேலின் 147-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு இல்லை - பாத யாத்திரையில் ராகுல் காந்தி திட்டவட்டம்

ஹைதராபாத் : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை யாத்திரையை தொடர்கிறார். நேற்று ரங்காரெட்டி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்திக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திம்மாபூர் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும். குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச தேர்தல் வியூகத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தீர்மானிப்பார். பாஜகவும் டிஆர்எஸ் கட்சியும் பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுகின்றன. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் டிஆர்எஸ் போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கண்டிப்பாக கூட்டணி வைத்துக்கொள்ளாது. தெலங்கானாவில் தனித்தே போட்டியிடும்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் | விபத்து நேரிட்ட இடத்தில் பிரதமர் இன்று ஆய்வு - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

மோர்பி : குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மோர்பி நகருக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பி நகருக்கு நேரில் சென்று, ஆய்வு செய்கிறார். குஜராத், ராஜஸ்தானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், தனது பல்வேறு பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து | ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் 500 வரை அனுமதி

மோர்பி : குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் மோர்பி நகர் அமைந்துள்ளது. 1889-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள மச்சூ நதியின் குறுக்கே, மன்னர் வாக்ஜி தாகோரால் தொங்கு பாலம் கட்டப்பட்டது. 233 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலத்தில், ஐரோப்பிய பாணியில் இப்பாலம் கட்டப்பட்டது. தர்பார்கர் அரண்மனை, லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கும் இந்தப் பாலம் பலமுறை புனரமைக்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.17 நுழைவுக் கட்டணம்; 12 உறவினர்களை இழந்த எம்.பி - குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து சோகங்கள்

மோர்பி : குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறை அறிவித்துள்ளது. பாலத்தை சீரமைப்பதற்காக 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. அப்போது நடந்த விபத்தில் 141 பேர் பலியாகியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த கேபிள் பாலம் - ஆற்றுக்குள் விழந்த 350 பேர்

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழந்ததில் 350க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோர்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலம், புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. குஜராத் புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், இன்று அது இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் ராணுவ விமான தயாரிப்பு தொழிற்சாலை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். டாடா நிறுவனமும், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்க உள்ளன. தனியார் துறைக்கு சொந்தமான நாட்டின் முதல் ராணுவ விமானத் தயாரிப்பு நிறுவனமான இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) அடிக்கல் நாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விண்வெளி துறையில் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது: மோடி

புதுடெல்லி: விண்வெளி துறையிலும், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது 94 வது மன்கி பாத் உரையில் மோடி பேசியதாவது: விண்வெளி துறையிலும், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும் நமது நாடு அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் கோஹிமா வரையிலும், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பு மேலும் வலுப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சி தாவ கோடிக்கணக்கில் பேரம் பேசிய விவகாரம்: உயர் நீதிமன்ற தீர்ப்பால் குழப்பம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில், நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு தீர்ப்பு வெளியானதால் போலீஸார் குழப்பம் அடைந்தனர். கடந்த புதன்கிழமை இரவு, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில், மொயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த டெல்லியை சேர்ந்த சத்தீஷ் ஷர்மா என்கிற ராமச்சந்திர பாரதி, ஹைதராபாத்தை சேர்ந்த நந்த கிஷோர், திருப்பதி சாமியார் சிம்ஹயாஜி ஆகிய 3 பேரை கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம்எல்ஏ பதவி இழந்தார் ஆசம் கான்: உ.பி. பேரவை செயலாளர் உத்தரவு

லக்னோ: உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்கும் தகுதியை ஆசம் கான் இழந்துள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் பிரதீப் துபே நேற்று முன்தினம் அறிவித்தார். அதனால் ஆசம் கான் எம்எல்ஏ.வாக இருந்த ராம்பூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேதார்நாத் யாத்திரை | ஹெலிகாப்டர் சேவை மூலம் ரூ.80 கோடி வருவாய் - கோவேறு கழுதை சவாரி மூலம் ரூ.101 கோடி வருமானம்

டேராடூன்: கேதார்நாத் புனித யாத்திரையில் கோவேறு கழுதை சவாரி மூலம் ரூ.101 கோடி வருவாய் கிடைத்துள்ளது. உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்கள் பனிக் காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடை காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரை மட்டுமே திறந்திருக்கும். இந்த ஆண்டுக்கான சார்தாம் புனித யாத்திரை கடந்த மே 3-ம் தேதி தொடங்கி அக்டோபர் 26-ம் தேதி நிறைவு பெற்றது. இந்த ஆண்டு 43 லட்சம் பக்தர்கள் சார்தாம் புனித யாத்திரை மேற்கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டாக்சி சேவையில் குறைபாடு - வாடிக்கையாளருக்கு ரூ.20,000 வழங்க உபேர் நிறுவனத்துக்கு உத்தரவு

மும்பை: மும்பை டாம்பிவிளியைச் சேர்ந்தவர் கவிதா சர்மா. வழக்கறிஞரான இவர் கடந்த 2018 ஜூன் 12-ம் தேதி சென்னைக்கு விமானத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் மாலை 5.50 மணிக்கு விமானத்தில் ஏற வேண்டிய சூழ்நிலையில், வீட்டிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்ல மாலை 3.29 மணியளவில் உபேர் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் தாமதமாக வந்த உபேர் டாக்சி டிரைவர், கவிதாவை மாலை 5.23 மணிக்குத்தான் விமான நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். இதனால், அவர் விமானத்தை தவறவிட்டார். இதையடுத்து, முன்பதிவு செய்த பணம் விரயமானதுடன், புதிதாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற புகார் - கைது செய்யப்பட்ட 3 பேர் விடுவிப்பு

ஹைதராபாத் : தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரமில்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. தெலங்கானாவில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு, டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், மொயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களுக்கு பிரதமர் மோடி யோசனை - ஒரே நாடு, ஒரே காவல் சீருடை

புதுடெல்லி : நாடு முழுவதும் போலீஸாருக்கு ஒரேவிதமான சீருடையை அறிமுகம் செய்தால், அவர்களின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம், ஹரியாணா மாநிலம் சூரஜ்கண்ட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இலவசங்கள்’ முதலான வாக்குறுதிகளை வரையறுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: காங்கிரஸ்

புதுடெல்லி: “ தேர்தல் வாக்குறுதிகளை வரையறுக்கும் அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு இல்லை” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலின்போது அரசியல் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகள் அளிப்பதை ஒழுங்குபடுத்தும் நோக்கில், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும் என்பதை அமல்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவலில் வைத்து விசாரிக்க தேவையில்லை என்பதற்காக முன்ஜாமீன் வழங்க கூடாது - உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி : போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க தேவை இல்லை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து முன்ஜாமீன் வழங்க கூடாது என உயர் நீதிமன்றங்களுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பர்திவாலாஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமூக மேம்பாட்டு இலக்குகளை அடைய இந்திய மாதிரியை பின்பற்ற வேண்டும் - நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் வலியுறுத்தல்

ஜாம்ஷெட்பூர் : ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட சமூக மேம்பாட்டு இலக்குகளை (எஸ்டிஜி)வரும் 2030-க்குள் நிறைவேற்ற உள்ளூர்மயமாக்கலின் இந்திய மாதிரி அவசியம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை

புதுடெல்லி : குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான சிந்தனைக் கூட்டம் ஹரியாணாவின் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுதக் காவல்படைத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தலைமை வகித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கப்படும்: அமித் ஷா

சூரஜ்கண்ட் (ஹரியாணா): நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-யின் கிளைகள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையின்போது பிரதர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047-ஐ அமல்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சிந்தனை முகாம் என்ற பெயரில் ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் இன்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “தீவிரவாதத்தை முற்றாக எதிர்க்கும் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது. இதற்காக, என்.ஐ.ஏ உள்ளிட்ட நாட்டின் புலன் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே முற்றும் மோதல் - என்னதான் நடக்கிறது கேரளாவில்?

கேரளாவில் இடதுசாரி அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தகுதிநீக்கம் செய்யும் அஸ்திரத்துடன் ஆளுநர் களமாட, பதிலுக்கு கேரள அரசோ பல்கலைக்கழகத்தில் தலையிடும் அதிகாரத்தையே ஆளுநரிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கண்ணூரில் பற்றிய கனல்!: கடந்த 2019-ல், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான வரலாற்று அறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பெரும் பிரச்சினையாக எதிரொலித்த நேரம் அது. ஆளுநர் ஆரிப் முகமது கான் அதை ஆதரித்து அந்தக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வரலாற்று ஆராய்ச்சியாளர் இர்பான் ஹபீப் தன்னைத் தாக்க பாய்ந்ததாகவும், துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் முதல் பரபரப்பை பற்ற வைத்தார் ஆளுநர் ஆரிப். அந்தத் தாக்குதலில் தனது உதவியாளரின் சட்டை கிழிந்ததாகவும் ஆளுநர் குற்றம் சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Onlin...

காங்கிரஸ் கட்சித் தலைவராக கார்கே பதவியேற்பு - சோனியா குடும்பத்தினர் பங்கேற்றனர்

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே(80) நேற்று பதவியேற்றுக் கொண்டார். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1072 வாக்குகளும் பெற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாரத் மாதா கி ஜெய் சொல்லும் போது... - சிறுபான்மையின பிரதமர் விவாதம் குறித்து விவேக் அக்னிஹோத்திரி கருத்து

புதுடெல்லி: " இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் “பாரத் மாதா கீ ஜெய்”, “வந்தே மாதரம்”எனச் சொல்லும் போது இந்தியா ஒரு முஸ்லிமை பிரதமராக ஏற்றுக்கொள்ளும்" என்று திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நிலவி வந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் முடிவுக்கு வந்த நிலையில் திங்கள்கிழமை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், செவ்வாய்கிழமை இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராகி இருப்பது கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அது இந்தியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியும் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் காந்தி, இன்னொரு பக்கம் விநாயகர் படம்: பிரதமருக்கு கேஜ்ரிவால் யோசனை

புதுடெல்லி: இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்‌ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எத்தனை நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொண்டாலும் இறையருள் இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் வளர்ச்சி காணும். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நான் ஓரிரு தினங்களில் கடிதம் எழுதுவேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் நிலையில் அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செவ்வாய்கிழமை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தன. புதன்கிழமை நடக்கும் விழாவில், காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் மிஸ்த்ரி மல்லிகார்ஜூன கார்கேவிடம் தேர்தல் வெற்றி சான்றிதழை முறையாக ஒப்படைத்தார். இதில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரிஷி சுனக் ‘வாழும் பாலம்’ - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ரிஷி சுனக்குக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இங்கிலாந்தின் புதிய பிரதமருடன் இணைந்து செயல்பட ஆவலோடு காத்திருக்கிறேன். குறிப்பாக சர்வதேச விவகாரங்கள், 2030 தொலைநோக்கு திட்டத்தில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நவ. 26-ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - விவசாயிகளுக்கு கூட்டமைப்பு அழைப்பு

புதுடெல்லி : புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினர். இப்போராட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது. விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸுக்கு ‘கடினமான’ மாநிலங்கள் நோக்கி ராகுலின் ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ - ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை இனி காங்கிரஸுக்கு மிகவும் கடினமான, அமைப்பு ரீதியாக பலம் குறைந்த மத்திய, வடஇந்திய மாநிலங்களில் பயணிக்க இருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 48 நாட்களாக ராகுல் காந்தி நான்கு செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்போது, இந்தச் சந்திப்புகள் நடத்தப்பட்டன. 5-வது செய்தியாளர்கள் சந்திப்பு அக்.31-ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'கலாம், மன்மோகன் சிங்கை நினைவூட்டுகிறோம்...': மெகபூபா முப்தி குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி 

புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்கள் குறித்து மெகபூபா முப்திக்கு நினைவுட்டுகிறோம் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ரிஷி சுனாக் பிரிட்டனின் பிரதமராகி இருப்பது குறித்து மெகபூபா தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராக திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்க உள்ளார். இதுகுறித்து தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களும், கருத்துக்களும் தெரிவித்துவருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உபி அதிர்ச்சி | படுகாயங்களுடன் உதவி கேட்கும் சிறுமி: வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம்

லக்னோ: உடல் முழுவதும் படுகாயங்களுடன், தனக்கு உதவுமாறு கையை நீட்டிக் கெஞ்சும் சிறுமிக்கு உதவி செய்யாமல், சுற்றி நிற்பவர்கள் அவரை தங்களின் செல்போனில் வீடியோ எடுக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டை விட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் தலை உட்பட உடலில் பல இடங்களில் படுகாயங்களுடன் விழுந்து கிடக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று... இந்தியாவில் எங்கு காணலாம்? 

வானியல் நிகழ்வான பகுதி சூரிய கிரகணம் இன்று (அக்.25) நடைபெற உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் என்பது குறிப்பிட்டத்தக்கது. இது பகுதி சூரிய கிரகணம் தான் என்றாலும் கூட இதைத் தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். சூரிய கிரகணம் என்றால் என்ன? சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்...” - ரிஷி சுனக் வெற்றி குறித்து இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கருத்து

புதுடெல்லி: " நாங்கள் அவர் குறித்து பெருமைப்படுகிறோம் மேலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்" என்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் மாமனாரும், இன்ஃபோதிஸ் இணைநிறுவனருமான நாராயணன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், இந்திய பில்லினியருமான நாராயண மூர்த்தி, தனது மருமகன் ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக தேர்வானத்தைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாராயணமூர்த்தி, "ரிஷிக்கு வாழ்த்துக்கள். நாங்கள் அவர் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னாலான அனைத்து நன்மைகளையும் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடையை மீறி பட்டாசு வெடித்த மக்கள்: டெல்லியில் காற்றின் தரம் கடும் சரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தடையை மீறி மக்கள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது.டெல்லியின் குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமாக குறைந்தது. காற்றின் தரத்தை அளக்கு அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது. இருப்பினும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லியில் கடந்த 4 தீபாவளிகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்றின் தரம் பரவாயில்லை என்றே கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 2020ல் டெல்லியில் தீபாவளிக்குப் பிந்தைய காற்றின் தரம் 414 ஆகவும், 2019ல் 337...

ஷிண்டே அணியின் 22 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்வார்கள் - உத்தவ் தாக்கரே தரப்பு தகவல்

மும்பை : மகாராஷ்டிரா ஒருபோதும் ஷிண்டேவை மன்னிக்காது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக.வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார். இந்நிலையில் கட்சி பெயர், வில் - அம்பு சின்னத்துக்கு உரிமை கோரி முதல்வர் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பினமும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அந்தேரி கிழக்குதொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவுக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும் கட்சியின் சின்னமாக தீபச்சுடர் சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா (பாலாசாகேப்பின் சிவசேனா) என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளா | பதவியில் நீடிப்பதற்கான உரிமையை வரும் நவ. 3-க்குள் நிரூபிக்க துணைவேந்தர்களுக்கு கெடு - ஆளுநர் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழகத்தின் 9 துணைவேந்தர்களும் தாங்கள் பதவியில் தொடருவதற்கு உள்ள உரிமையை வரும் நவம்பர் 3ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார். திங்கள்கிழமை முற்பகல் 11.30 மணிக்குள் 9 பல்கலை.யின் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என்று கேரளா ஆளுநர் ஆரிஃப் முகம்மது கானின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை கேரள உயர் நீதின்றத்தின் சிறப்பு அமர்வு மாலை 4 மணிக்கு விசாரணை செய்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்