தண்டேவாடா: சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஒருவர் என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரில் தண்டேவாடா, பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கீடம் மற்றும் பைராம்கர் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் - மாவோயிஸ்ட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இவர் தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியை சேர்ந்த சரஸ்வதி மற்றும் சாய்தே என அழைக்கப்படும் ரேணுகா என அடையாளம் கண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்