Skip to main content

Posts

Showing posts from March, 2025

சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

தண்டேவாடா: சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஒருவர் என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரில் தண்டேவாடா, பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கீடம் மற்றும் பைராம்கர் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் - மாவோயிஸ்ட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இவர் தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியை சேர்ந்த சரஸ்வதி மற்றும் சாய்தே என அழைக்கப்படும் ரேணுகா என அடையாளம் கண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு. ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொண்டை புகைச்சல், வயிற்றுவலி வந்து நீங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒவ்வொரு மழை துளியையும் சேமிக்க வேண்டும்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

ஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 120-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை காலம் தொடங்க இருக்கிறது. இந்த கோடை விடுமுறை நாட்களில் ஏதாவது ஆக்கப்பூர்வமானதை செய்ய வேண்டும். நம்முடைய திறன்களை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆபரேஷன் பிரம்மா: மியான்மருக்கு 52 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!

புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ‘ஆபரேஷன் பிரம்மா’ நடவடிக்கையின் கீழ் 52 டன் நிவாரணப் பொருட்களை கடற்படை கப்பல்கள் மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இது குறித்த மத்திய அரசின் தகவல்: மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தைத் தொடர்ந்து, மியான்மருக்கு இந்திய அரசு உதவி வழங்குவதற்காக ‘ஆபரேஷன் பிரம்மா’ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, என்டிஆர்எஃப் ஆகியவற்றுடன் இணைந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் என்கவுன்ட்டர்: உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கதுவா பகுதியில் தீவிரவாதிகளைத் தேடும் போலீஸாரின் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டம் ராஜ்பாக் பகுதியில் ஜக்கோலே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு 2 நாட்களுக்கு முன்பு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார், ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸார் அடங்கிய சிறப்பு ஆபரேஷன் குழுவினர் என 4 பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்விஎம்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

பெங்களூரு: எல்விஎம்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜினை, வெற்றிகரமாக பரிசோதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. எல்விஎம் 3 ராக்கெட்டில் தற்போது எல்110 என் திரவ எரிபொருள் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 4 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை புவியிசைவு சுற்றுவட்டபாதைக்கு கொண்டு செல்ல முடியும். 5 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை கொண்டு செல்லும் வகையில் எல்விஎம்-3 ராக்கெட்டில் செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதார சேவை: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மத்திய அரசு செய்துகொள்ளாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (ஏபி-பிஎம்ஜேஏஒய்) திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் மக்களின் எண்ணிக்கை 62 கோடியாக உள்ளது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இருந்தபோதிலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மருத்துவமனைகள் செய்து கொள்வதில்லை. உலகத் தரத்தில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமாஜ்வாதி எம்.பி. லால் சுமன் வீடு மீது தாக்குதல்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்ஜி லால் சுமன் வீடு மீது கர்னி சேனா தொண்டர்கள் நடத்திய தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பி.கள் வெளிநடப்பு செய்தனர். சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன். இவர் உ.பி.யின் மேவர் பகுதியை ஆண்ட ராஜ்புத் ஆட்சியாளர் ராணா சங்கா பற்றி விமர்சித்திருந்தார். ‘இப்ராகிம் லோடியை வீழத்துவதற்காக பாபரை அழைத்து வந்த ராணா சங்கா ஒரு துரோகி’ என கூறியிருந்தார். இது ராஜ்புத் பிரிவைச் சேர்ந்த கர்னி சேனா அமைப்பினரை கோபம் அடையச் செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவின் நவீன இன்ஜின் விநியோகம் தொடக்கம்: தேஜஸ் போர் விமான தயாரிப்பை வேகப்படுத்தும் எச்ஏஎல்

அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்ஜின் விநியோகத்தை தொடங்கியுள்ளதால், எச்ஏஎல் நிறுவனத்தின் தேஜஸ் -1ஏ போர் விமான தயாரிப்பு வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேஜஸ் மார்க்-1ஏ போர் விமான தயாரிப்புக்காக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.5,375 கோடி மதிப்பில், 99 எப்-404 ரக இன்ஜின்கள் வாங்க எச்ஏஎல் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், இந்த இன்ஜின்களை விநியோகிப்பதில் அமெரிக்க நிறுவனம் 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. இதனால் தேஜஸ் போர் விமான தயாரிப்பில் மந்த நிலை ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் 4 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை

4 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் ரோஸா போலீஸ் சரகத்துக்குட்பட்ட மான்பூர் சச்சாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார் (36). இவருக்கு ஸ்மிருதி (12), கீர்த்தி (9), பிரகதி (7) ஆகிய 3 மகள்களும், ரிஷப் (5) என்ற மகனும் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.10 லட்சம் கோடி செலவில் 25,000 கி.மீ நெடுஞ்சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றம்

சாலை விபத்துக்களை குறைக்க ரூ.10 லட்சம் கோடி செலவில் 23,000 கி.மீ நீளமுள்ள இருவழி நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவை கேள்வி நேரத்தின் போது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிகட்கரி கூறியதாவது: இருவழி நெடுஞ்சாலைகள் ரூ.10 லட்சம் கோடி செலவில் 25,000 கி.மீ தூரத்துக்கு நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இத்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும், விபத்துக்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகள் எடுப்பீர். உத்தியோகத்தில் மேன்மையுண்டு. ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பொறுப்பு, பதவி தேடி வரும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்ப்பிணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு: மாநிலங்களவையில் சோனியா கேள்வி

மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்துகாகன நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன் என மாநிலங்களவையில் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமை; உ.பி முதலிடம் - மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாக உள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மருத்துவ நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதன் மீதான ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சரும் உ.பியை சேர்ந்தவருமான அனுப்பிரியா பட்டேல் கூறியதாவது: 2024 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 33 புகார்கள் பதிவாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு. ரிஷபம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். நட்பு வட்டம் விரியும். தாயாருடன் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோதிட நாள்காட்டி 25.03.2025 | பங்குனி 11 - குரோதி

நல்லதே நடக்கும் 25.03.2025 குரோதி 11 பங்குனி செவ்வாய்க்கிழமை திதி: ஏகாதசி நாளை அதிகாலை 3.46 வரை. பிறகு துவாதசி. நட்சத்திரம்: திருவோணம் நாளை அதிகாலை 3.47 வரை பிறகு அவிட்டம். நாமயோகம்: சிவம் பிற்பகல் 2.49 வரை. பிறகு சித்தம். நாமகரணம்: பவம் மாலை 4.31 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.09. அஸ்தமனம்: மாலை 6.20 ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 5 சந்திராஷ்டமம் புனர்பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” - அமித் ஷா பெருமிதம்

புதுடெல்லி: அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யில் இருந்து 2 அமைப்​பு​கள் விலகி உள்​ளன. இது, பிரதமர் நரேந்​திர மோடிக்கு கிடைத்த மிகப்​பெரிய வெற்றி என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​துள்​ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு’ என்ற கூட்​டணி உரு​வாக்​கப்​பட்​டது. இதில் பல்​வேறு அரசியல் கட்​சிகள், மத அமைப்​பு​கள், பிரி​வினை​வாத அமைப்​பு​கள் இணைந்​தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் அமித் ஷா உடன் இபிஎஸ் சந்திப்பு - பின்னணி என்ன?

புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (மார்ச் 25) சந்தித்தார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இரண்டு நாள் பயணமாக அவரது டெல்லி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலுக்கு பிறகு 6 கட்சிகளின் கையிருப்பு ரூ.4,300 கோடி அதிகரிப்பு

கடந்த 2024 மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் திரட்டிய பணத்தை முழுமையாக செலவிடவில்லை. இதனால் பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 6 கட்சிகளின் இருப்பு நிதி தேர்தலின் தொடக்கத்தில் இருந்ததை விட தேர்தலின் முடிவில் ரூ.4,300 அதிகரித்துள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கைகளை காமன்வெல்த் மனித உரிமைகளுக்கான நடவடிக்கை (சிஎப்ஆர்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும். ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய பண்பாட்டுக்கு எதிரானவர்கள் அடையாள சின்னங்களாக்கப்பட்டனர்: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

நாட்டின் பண்பாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டனர் என அவுரங்கசீப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிசபா கூட்டம் பெங்களூருவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர் 

திருவனந்தபுரம்: கேரள பாஜக தலைவராக இருக்கும் சுரேந்திரனின் பதவிக் காலம் முடிவடைகிறது. அவர் இந்த பதவியை தொடர விரும் பவில்லை என கட்சி மேலிடத் திடம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து மாநில தலை வர் பதவிக்கு தேர்தல் நடத் தப்படுகிறது. இதில் போட்டி யிட முன்னாள் மத்திய அமைச் சர் ராஜீவ் சந்திர சேகர் நேற்று மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிட வில்லை. அதனால் அவர் கேரள பாஜக தலைவராக தேர்வு செய் யப்படும் முறையான அறிவிப்பு பாஜக மாநில கவுன்சில் கூட்டத் தில் இன்று அறிவிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணவரை கொலை செய்தது குறித்து உ.பி. பெண் திடுக்கிடும் வாக்குமூலம்

மீரட்: உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் மஸ்கன் ரஸ்தோகி. இருவரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்துள்ளனர். 13 வயது முதலே இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 12-ம் வகுப்புக்கு பிறகு சரக்கு கப்பல் சார்ந்த படிப்பை நிறைவு செய்த சவுரப், லண்டனை சேர்ந்த பிரபல சரக்கு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதன்பிறகு சவுரப் ராஜ்புத்தும் மஸ்கன் ரஸ்தோகியும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டில் லண்டனில் இருந்து மீரட் திரும்பிய சவுரப் திடீரென காணாமல் போனார். அவரும் மஸ்கன் ரஸ்தோகியும் ரகசிய இடத்தில் வாழ்ந்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு மீரட் போலீஸார் இருவரையும் கண்டுபிடித்தனர். இதேபோல அடுத்தடுத்து 2 முறை சவுரபும், மஸ்கனும் காணாமல் போயினர். கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம்” - யோகி ஆதித்யநாத் அரசு மீது உ.பி. பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் என லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ-வான நந்தகிஷோர் குர்ஜார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய குர்ஜார், “உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலாளர்தான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அதிகாரி. அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மூளையை வசியப்படுத்தி வைத்திருக்கிறார். அயோத்தி நிலத்தை உ.பி. அதிகாரிகள் சுரண்டுகின்றனர். மாநிலத்தில் அதிகமான பசுக்கள் கொல்லப்படுகின்றன. போலி என்கவுன்ட்டர்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அதிகாரிகள் தவறான தகவல்களின் மூலம் திசை திருப்புகின்றனர்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் மீதான அவதூறு வழக்கு: வழக்கறிஞர் போராட்டத்தால் தள்ளிவைப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை, வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக ஏப்ரல் 3-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. கடந்த 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. உ.பி.யின் சுல்தான்பூரில் பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா தொடந்த இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நேற்று எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

புதுடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லை (ஐபி) மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாக்பூர் கலவரத்தை தூண்டியதாக சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் கைது

மும்பை: மகாராஷ்டிராவில் நாக்பூர் கலவரத்தை தூண்டியதாக கூறி சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “ நாக்பூரில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பகீம் கான் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் அரசியல்வாதியான இவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் அநாவசியமாக கோபப்படாதீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். கவனம் தேவை. ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் தொடர்புடைய அலுவலகங்​களில் அமலாக்க துறை சோதனை

அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் தொடர்புடைய அறக்கட்டளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் (என்ஜிஓக்கள்) அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் (92). இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.61,000 கோடி ஆகும். கடந்த 1993-ம் ஆண்டில் ஓபன் சொசைட்டி பவுண்டேசன்ஸ் (ஓஎஸ்எப்) என்ற அறக்கட்டளையை சோரஸ் உருவாக்கினார். இந்தியா உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓஎஸ்எப் செயல்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு பாஜக ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவுரங்கசீப் சமாதியை இடித்தால் ரூ.21 லட்சம் வெகுமதி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி தலைவர் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமாதியை இடித்து அகற்றுபவர்களுக்கு ரூ.21 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவர் தினேஷ் பல்ஹரி அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் அவரங்கசீப் சமாதியை அகற்ற வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு நேற்றுமுன்தினம் அழைப்பு விடுத்திருந்தன. இதில் வன்முறை வெடித்தது. இருப்பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India &...

“கடினமான காலங்களில் பகவத் கீதையே என்னை வழிநடத்துகிறது” - அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட்

அமெரிக்க உளவுத் துறை தலை​வர் துளசி கப்​பார்ட் 3 நாட்​கள் பயண​மாக நேற்று முன்​தினம் இரவு டெல்லி வந்​தார். தனியார் தொலைக்காட்சி சேனல் மற்றும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் அடிப்படைவாத தீவிரவாதம் தலைதூக்குவது கவலை அளிக்கிறது. குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தி செல்படும் தீவிரவாதிகள், பிற மதங்களை சேர்ந்தவர்களை கொடூரமாக கொலை செய்கின்றனர். இதுபோன்ற அடிப்படைவாத தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்திருக்கிறார். நான் சிறு வயது முதலே பகவத் கீதையை படித்து வருகிறேன். எனது கடினமான காலங்களில் பகவத் கீதையே என்னை வழிநடத்துகிறது. இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேசங்களை நினைவுகூர்கிறேன். கிருஷ்ணரின் உபதேசங்களைபின்பற்றினால் மோசமான சூழலையும், சாதகமான சூழலாக மாற்ற முடியும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமெரிக்காவும் இந்தியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதி...

‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் இணைந்த பிரதமர் மோடி: ட்ரம்ப்புக்கு நன்றி சொன்னார்!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) அன்று இணைந்தார். தனது ட்ரூத் பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி சொல்லி உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது நேர்காணல் அண்மையில் சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்து விட்டோம்” - நடிகை ரன்யா ராவ் கணவர் தகவல்

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, தங்களுக்கு திருமணமான ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர் மீது எந்த நடவடிக்கையையும் அடுத்த விசாரணை (மார்ச் 24) வரை எடுக்க கூடாது என கூறியுள்ளார். இதற்கு வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி, காரி யம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். ரிஷபம்: நம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடு வீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு நன்றாக படிக்க மன்றாடிய தலைமை ஆசிரியர்

விஜயநகரம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். என்றாலும் இவர்களில் பலர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை, சரிவர படிப்பதில்லை என கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாணவ, மாணவியரையும் வழக்கம்போல் பள்ளி மேடைக்கு முன் தலைமை ஆசிரியர் ரமணா வரச்சொன்னார். பிறகு மாணவர்கள் முன் தரையில் விழுந்து வணங்கியதுடன் 50 தோப்புக்கரணமும் போட்டார். பிறகு, "இனியாவது உங்களுக்காக நீங்கள் படியுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்" என வருத்தத்துடன் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்காளர் பிரச்சினை குறித்து ஏப்.30-க்குள் ஆலோசனை கூறலாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றம்சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பச்சையா? காவியா? ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது? - உ.பி. சம்பல் பகுதியில் புதிய மோதல்

உத்தர பிரதேசம் சம்பல்வாசிகள் இடையே ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது என்பதில் புதிய மோதல் துவங்கி உள்ளது. இதில், முஸ்லிம் தரப்பு பச்சை நிறமும், இந்து தரப்பு காவி நிறமும், அரசு நிர்வாகம் வெள்ளை நிறமும் பூச வலியுறுத்தி வருகின்றனர். உ.பி.யின் சம்பலில் 1526-ல் ஷாயி ஜாமியா மசூதி கட்டி முடிக்கப்பட்டது. முகலாய மன்னர் பாபர் ஆட்சியில் கட்டப்பட்ட வட இந்தியாவின் முதல் மசூதியாக இது கருதப்படுகிறது. இதை அங்கிருந்த ஸ்ரீஹரி எனும் சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதன் மீதான சம்பல் மாவட்ட நீதிமன்ற வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தக் கள ஆய்வு நடைபெற்ற நவம்பர் 24-ல் கலவரம் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டிக்கு ரூ.13 கோடி வரி கட்ட வருமான வரித் துறை நோட்டீஸ்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பத்துக்கு ரூ.13 கோடி வரி செலுத்த கோரி வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரயில் கிராமத்தைச் சேர்ந்தவர் பிண்ட்டு மெஹ்ரா. படகோட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா தாய்ப்பால் வங்கியால் 3,800 பச்சிளம் குழந்தைகளுக்கு பலன்

மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரில் உள்ள தாய்ப்பால் வங்கியால் இதுவரை 3,800 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “ அகோலா நகரில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இந்த தாய்ப்பால் வங்கியின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3,816 பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

8 மொழி தெரியும்: மாநிலங்களவை எம்.பி சுதா மூர்த்தி ஆதரவு

புதுடெல்லி: மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனக்கு 8 மொழிகள் தெரியும் என மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் 3 மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு திமுக, ஆதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 266 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: மியான்மரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆன்லைன் மோசடி மையங்களில் பணிபுரிந்த மேலும் 266 இந்தியர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பினர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விளையாட்டு மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் ஆன்லைன் மோசடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை நடத்துவது பெரும்பாலானோர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பை உயர்த்த கனிமொழி எம்.பி கோரிக்கை

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க கோரப்பட்டுள்ளது. மக்களவையில் கனிமொழி எம்.பி இதற்காக அவசர கோரிக்கை விடுத்தார். பொது அவசரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை மக்களவையில் எழுப்ப விதி எண் 377 அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி புதன்கிழமை ஒரு கோரிக்கை எழுப்பினார். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான இந்த கோரிக்கை மீது தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி பேசியதாவது: பட்டியல் சமூகம், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. டெல்லியில் 2019-ல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது துவாரகா முழுவதும் பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இதற்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோருடன் இணைந்து அரசு நிதியை அப்போதைய முதல்வர் கேஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. எனினும் புகார் தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்த கேரள இளம்பெண் உயிரிழப்பு

உடல் எடையைக் குறைப்பதற்காக அதிக உணவு கட்டுப்பாட்டு எடுத்துக்கொண்டு `டயட்'டில் இருந்த 18 வயதான கேரள இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா(18). இவர் சற்று அதிகமான உடல் எடையுடன் இருந்தார். இதனால் இன்டர்நெட், சமூக வலைதளங்களில் வரும் உடல் எடைக் கட்டுப்பாடு வீடியோக்களைப் பார்த்து `டயட்'டில் இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இளைஞர்களிடம் ‘வன்முறை’ ஒரு போதையாக மாற வெப் சீரிஸ், சினிமாவுக்கு பங்கு...” - கேரள அமைச்சர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: “மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினரிடம் ‘வன்முறை’ ஒரு ‘போதை’யாக மாறியுள்ளது. அவர்களிடம் ஒருவிதமான கொடூர மனநிலை அதிகரித்துள்ளது” என்று கேரள மாநில கலால் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் சட்டப்பேரவையில் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. மது மற்றும் போதை பொருட்களால் சமூகத்தில் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துப் பேசினார். மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி சார்பாக பேசிய அமைச்சர் ராஜேஷ், "மாணவர்கள் மத்தியில் வன்முறை அதிகரிப்பதற்கு போதைப் பொருள்கள் மட்டுமே காரணம் இல்லை. இளைய தலைமுறையினரிடம் வன்முறையே ஒரு போதையாக மாறிவிட்டது. குழந்தைகளிடமும் கொடூர மனநிலை அதிகரித்துவிட்டது. வெப் சீரிஸ், சினிமா மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல் போன்ற பல விஷயங்களை இதற்கு காரணமாக சொல்லலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu...

மியான்மர் மோசடி மையங்களில் பணிபுரிந்த 300 இந்தியர்கள் மீட்பு: தாய்லாந்து வழியாக தாயகம் திரும்பினர்

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் வேலை செய்த 300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக நேற்று தாயகம் திரும்பினர். இந்தியாவில் ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடிகளுக்கு பெரும்பாலும் மியான்மரில் இருந்து நடத்தப்பட்டு வரும் சட்டவிரோதமான மையங்களே முக்கிய காரணம் என்பது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனை நடத்துவபர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்