Skip to main content

Posts

Showing posts from December, 2021

தமிழக சுற்றுலாத் தலங்களை விவரிக்கும் கண்கவர் காலண்டர்: பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய கோரிக்கை

தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களைவிவரிக்கும் விதமாகக் கண்கவர் புகைப்படங்களுடன் புதிய காலண்டரை சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது. உலகின் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம், நினைவுச் சின்னங்கள், சிறப்பான கோயில் கட்டிடக்கலை, நிலப்பரப்புகளும், வனங்களும் கொண்டுள்ளது தமிழகம். ஆனாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பதமிழக சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் முறையாகச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டநாட்களாகவே இருந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீர் வைஷ்ண தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: 20-க்கும் மேற்பட்டோர் காயம்

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் ரேசாய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ் மாதா கோயிலில் இன்று புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ன. ஜம்மு ரேசாய் மாவட்டத்தில் உள்ள கத்ரா நகரில் திரிகுதா மலைப்பகுதியில் 5,200 அடி உயரத்தில் உள்ள வைஷ்வ் மாதா கோயில் புகழ்பெற்றது. குகையில் அமைந்துள்ள வைஷ்ணவ் மாதா கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை, புறநகர், டெல்டா உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு: நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் 52 வயதுடைய ஒருவர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் வேறு பல உடல்நலக் குறைகளால் இறந்ததாகமாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்தியாவில் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா தொற்று பரவல், கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் உருமாறிய ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1,270 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் ஒமைக்ரான் பரவல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது பஞ்சாப், பிஹாரிலும் ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார்: பிரதமர் மோடி ஜன.12-ல் மதுரை வருகை- பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்

ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை சுதர்சன மையத்தில் 200-வது அசித்ர பாராயணம்

சென்னை தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், 200-வது அசித்ர பாராயணம் நேற்று நடைபெற்றது. சென்னை தியாகராய நகர்,ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், வேத வித்வான் மான் குறிச்சி, கிடாம்பி, ஆத்ரேயலட்சுமி நரசிம்மன் சுவாமியின் சீரிய முயற்சியால், வேத வித்யார்த்திகள் உருவாகி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரியில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது: தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவிடம் பொதுமக்கள் குமுறல்

வடசென்னை அனல் மின் நிலையசாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரி வட்டப்பகுதிகளில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் சாம்பல் கழிவுகளால் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளடக்கிய கழிமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்?

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது முழுநேர வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு டெல்டா திரிபை எதிர்க்கும் தடுப்பு ஆற்றல் உருவாகிறது: ஆய்வில் புதிய தகவல்

ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளான வர்களின் உடலில், டெல்டா திரிபை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாவதாக தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் ஒமைக்ரான் தொற் றுக்கு உள்ளானவர்களும் தடுப் பூசி போடமால் ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளானவர்களும் அந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர் களின் உடலிலிருந்து ரத்த மாதிரிகளை எடுத்து விஞ்ஞானி கள் பரிசோதித்தனர். அப்போது அவர்களின் உடலில் ஒமைக் ரானையும், டெல்டா திரிபையும் எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது தெரிய வந்தது. அதிலும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு அதிக எதிர்ப்பு ஆற்றல் உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் மால்னுபிரவிர் மாத்திரை ரூ.40 முதல் ரூ.75-ஆக இருக்கும்: மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்

கரோனா சிகிச்சைக்கான மால்னுபிரவிர் மாத்திரை ஒன்று ரூ.40 முதல் ரூ.75 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என அதனை தயாரிக்கும் ஆப்டிமஸ் ஃபார்மா நிறுவனம் கூறியுள்ளது. கரோனா தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவை சேர்ந்த மெர்க் என்ற மருந்து நிறுவனம் மால்னுபிரவிர் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையை அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா அண்மையில் அனுமதி அளித் தது. இந்தியாவில் இந்த மாத்திரைகளை ஆப்டிமஸ் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, சன் ஃபார்மா உள்ளிட்ட 13 நிறுவனங்கள் தயாரிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செய்தித்தாள் நிறுவனங்களின் ‘இ-பேப்பர்களை’ பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செய்தித்தாள் நிறுவனங்களின் இ-பேப்பர்களை அனுமதியின்றி பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் செய்தி நிறுவனங்கள் தங்களின் அன்றாட இ-பேப்பர்கள், புத்தகங்களை வாசகர்களுக்கு பயனளிக்கும் விதமாக தங்களின்அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் பிரசுரித்து வருகின்றன. ஆனால் சிலர் செய்தி நிறுவனங்களின் அனுமதியின்றி அந்நிறுவனஇ-பேப்பர்களையும், புத்தகங்களையும் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்து பிடிஎஃப் வடிவில் மாற்றி தங்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

நாகாலாந்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது. கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பரில் நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 1958-ம் ஆண்டு முதலே நாகாலாந்து பகுதியில் ஆயுத படைகள் சிறப்புச் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இதன்படி, வாரன்ட் இன்றி யாரையும் கைது செய்ய முடியும். அனுமதியின்றி சோதனை நடத்த முடியும். துப்பாக்கிச்சூடு நடத்த முடியும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்டில் ரூ.17,500 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பாஜக ஆட்சியில் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதனால், மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் இன்று நள்ளிரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று (டிசம்பர் 31) இரவு சென்னையில் வெளியிடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாது. ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் இரவு 11.00 மணி வரை செயல்படலாம். அதேசமயம், ஹோட்டல், கேளிக்கை விடுதி, பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் கேளிக்கை, நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம் என தந்தை உறுதி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம் என மாணவியின் தந்தை கூறினார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (20). சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, ஐஐடி-ல் படித்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

5 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், வைகை உட்பட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர்-விழுப்புரம் தடத்திலும், சென்னை சென்ட்ரல்-கூடூர் தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன. 6 முதல் 45-வது சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 45-வது சென்னை புத்தகக் காட்சியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிவைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 45-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 முதல் 23-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிவைக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.மனிஷ், விஷுமகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உட்பட 14 நகரங்களில் கரோனா அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

நாடுமுழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட 14 நகரங்களில் கரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கரோனா 2-வது அலை வேகமாக பரவியது. கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 13,154 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, குருகிராம், கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் கரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. டெல்லிக்கு அருகில் உள்ள ஹரியாணாவின் குருகிராமில் டிசம்பர் 15 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் 194 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. டிசம்பர் 22 முதல் 28 வரையிலான ஒரு வாரத்தில் கரோனா தொற்று 738 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்...

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி வரை கோயில்கள் திறந்திருக்க அனுமதி

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிவரை கோயில்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், உலகளந்த பெருமாள், குமரகோட்டம் சுப்பிரமணியர் ஆகிய கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பஞ்சுப்பேட்டையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்

நீட் விலக்கு மசோதா தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக பாட்மிண்டனில் பதக்கம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ரூ.7 லட்சம் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன் வழங்கினார்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தை பாராட்டி ரூ.7 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டு தெரிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஸ்பெயினில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர்பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்தகிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கிடாம்பி ஸ்ரீகாந்த், பதக்கம் வென்றால் அவருக்கு அரசு பணியும், ரூ.7 லட்சம் ஊக்கப்பரிசும் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது?- முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்: கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆய்வில் தகவல்

இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. அந்த சமயத்தில், நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர், கரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெருந்தொற்று பாதிப்பு கணிசமாக குறைய தொடங்கியது. சமீபகாலமாக இந்தியாவில் தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் சினிமா டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க புதிய குழு

ஆந்திராவில் சினிமா டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்தது. இதனால் 300-க்கும் மேற்பட்டதிரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதிகளுடன் சினிமா வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கட்ராமையா நேற்று அமராவதியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சினிமா டிக்கெட் கட்டண விவகாரம் குறித்து ஆய்வு செய்ய மாநில உள்துறை சிறப்பு செயலாளர் ஜி. விஜயகுமார்,செய்தி, தகவல் துறை ஆணையர்விஜயகுமார் ரெட்டி, விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் வீர நாயுடு உள்ளிட்டோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐடி படிவம் தாக்கல் செய்ய டிசம்பர் 31 கடைசி- இதுவரை 4.67 கோடி பேர் ரிட்டன் தாக்கல்

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு (டிசம்பர் 31) முடிகிறது. இந்நிலையில் டிசம்பர் 27-ம் தேதிமட்டுமே 15.49 லட்சம் எண்ணிக்கையில் வருமான வரி ரிட்டர்ன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரையில் 4.67 கோடிக்கு மேற்பட்ட அளவில் வருமான வரி ரிட்டன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் மக்கள் கொடுத்த புகார்களை கவனிக்காத அதிகாரிகள் ஊதியத்தை நிறுத்த உத்தரவு: தனது சம்பளத்தையும் பெற மாவட்ட ஆட்சியர் மறுப்பு

மத்தியபிரதேச மாநிலத்தில் மக்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் தனது ஊதியத்தையும் தரவேண்டாம் என்று அவர் நிறுத்தி வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கரம்வீர் சர்மா. கடந்த திங்கள்கிழமை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முதல்வரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக கரம்வீர் சர்மா ஆய்வு செய்தார். இதில் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'தி இந்து' பத்திரிகையாளருக்கு கோயங்கா விருது

‘தி இந்து' பத்திரிகையின் செய்தியாளர் சிவ் சஹாய் சிங், ராம்நாத் கோயங்கா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தி இந்து' பத்திரிகையின் மேற்கு வங்க மாநிலப் பிரிவில் செய்தியாளராக பணிபுரிபவர் சிவ் சஹாய் சிங். இவர் 2019-ல்ஜார்க்கண்ட் மாநில அரசின் டிஜிட்டல் பொது விநியோக முறைத் திட்டத்தால் அடித்தட்டு மக்கள் ரேஷன் பொருட்களை இழந்தது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்கள் அகற்றப்பட்டதால் நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ கட்டுப்பாடு நீக்கம்: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைத்து பாகங்களும் மீட்கப்பட்டு சூலூர் கொண்டுசெல்லப்பட்டதால், நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உட்பட 14 பேர் உயிர்இழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்ளாட்சி மற்றும் அரசு துறைகளில் ரூ.3,300 கோடி மின்கட்டணம் நிலுவை: வசூலிக்கும் பணியில் மின்வாரியம் தீவிரம்

சென்னை: மத்திய அரசின் உத்தரவையடுத்து, அரசு துறைகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத் தொகையான ரூ.3,300 கோடியை வசூலிக்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், மத்திய, மாநில அரசுஅலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு தமிழ்நாடு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்